கடலை மாவு தேங்காய் பர்பி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 1/2 கப்
2. துருவிய தேங்காய் - 1/2 கப்
3. சர்க்கரை - 1 கப்
4. நெய் - 1/2 கப்
செய்முறை:
1. ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து, சர்க்கரையுடன் மிதமான தீயில் ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும். (கரண்டியின் பின் புறம் இருக்கும் பாகை ஆள்காட்டி விரலில் வழித்து, கட்டை விரலின் நடுவில் ஒட்டி பார்த்தால் ஒரு மெல்லிய கம்பி வரவேண்டும்)
2. பதமான நிலையில் தேங்காய் சேர்த்துக் கலந்துவிட்டு, சலித்த கடலை மாவை தூவினாற்போல சேர்க்கவும். நன்கு வேகமாக கட்டி தட்டாமல் கலக்கவும்.
3. நன்கு கலந்தவுடன், 1/2 கப் நெய்யை ஒரு சமயத்தில் 2 ஸ்பூன் விகிதம் ஊற்றிக் கலக்கவும்.
4. நெய் உள்ள வாங்கியபின் அதே போல் மேலும் இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கிளறவும்.
5. இதே போல 1/2 கப் நெய்யும் ஊற்றிக் கிளறிய பின், ஓரங்களில் ஒட்டாமல் வரும்.
6. முதலில் ஓரங்களில் நுரைத்தது போலவும், பிறகு அடியில் நுரைத்தது போலவும் இருக்கும்.
7. அதன் பிறகு முழுக் கலவையும் வெளிர் நிறமாக, நுரைத்து காணப்படும் பொழுது, நெய் தடவிய தட்டில் கொட்டவும். (ஒரு ட் ரேயில் நெய் தடவி, பட்டர் பேப்பர்/ பேக்கிங் ஷீட் பயன்படுத்தவும்)
8. கை பொறுக்கக்கூடிய சூட்டிற்கு வரும் வரை ஆரிய பின், தட்டை தலை கீழாகத் தட்டவும். பட்டர் பேப்பரை எடுத்துவிட்டு, துண்டுகளாக வெட்டவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.