ராகி அல்வா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கேழ்வரகு மாவு - 1 கப்
2. தேங்காய்ப் பால் - 1 கப்
3. வெல்லம் - 1 1/4 கப்
4. நெய் - 2 மேசைக்கரண்டி
5. முந்திரி- 10 எண்ணம்
செய்முறை:
1. கேழ்வரகு மாவை ஒரு மணி நேரம் இரண்டு கப் தண்ணீரில் ஊற வைத்து, மெல்லிய துணியால் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் ஒரு மேஜை கரண்டி நெய் விட்டு முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
3. கெட்டியான தேங்காய்ப் பால் மற்றும் கேழ்வரகு மாவை ஒன்றாகக் கலந்து, அதே வாணலியில் சேர்த்துக் கெட்டி சேராமல் கிளறவும்.
4. நெருப்பை மிதமானதாக வைத்து கை விடாமல் கிளறவும்.
5. கெட்டியாக வரும் சமயம் வெல்லம் சேர்த்துக் கிளறவும்.
6. இடையில் நெய் சேர்த்து நன்கு கிளறவும். பத்து நிமிடம் வரை அப்படியேக் கிளறவும்.
7. நன்கு அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கிளறி, வறுத்த முந்திரிப்பருப்பு தூவிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.