மைசூர் பாகு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு – 200 கிராம்
2. சர்க்கரை – 500 கிராம்
3. நெய் – 400 கிராம்.
செய்முறை:
1. கடலை மாவை இலேசாக வறுத்து வைக்கவும்.
2. நெய்யை அடுப்பில் வைத்து சுட வைத்துக் கொள்ளவும்.
3. சர்க்கரையில் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துப் பாகு போல் காய்ச்ச வேண்டும்.
4. பாகு பதத்திற்கு வந்ததும் அதில் வறுத்து வைத்திருக்கும் கடலை மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளற வேண்டும்.
5. அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, நெய் சேர்த்துக் கிளற வேண்டும்.
6. நெய்யும், மாவும் மாறி மாறி சேர்த்துக் கிளற வேண்டும்.
7. பொங்கி மேலெழும்பி வரும் பொழுது, நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்த வேண்டும்.
8. ஆறிய பிறகு நீள்சதுர வடிவத்தில் துண்டுகளாக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.