அவல் கேசரி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. அவல் - 1 கப்
2. சர்க்கரை - 1 கப்
3. நெய் - 1/4 கப்
4. ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
5. முந்திரி பருப்பு - சிறிது
6. உலர் திராட்சை - சிறிது
7. கேசரிப் பொடி - ஒரு சிட்டிகை.
செய்முறை:
1. ஒரு வாணலியில் அவலைப் போட்டு, இலேசாக வறுத்தெடுத்து, ஆறியபின் சற்று சொரசொரப்பாக பொடித்து வைக்கவும்.
2. வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை விட்டு, அதில் முந்திரி பருப்பு, உலர் திராட்சை இரண்டையும் போட்டு வறுத்தெடுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் 2 கப் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், அவல் பொடியைச் சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும்.
4. மிதமான தீயில், நீர் முழுவதையும் அவல் இழுத்துக் கொண்டு மிருதுவாக வேகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
5. பின்னர் அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.
6. அத்துடன் கேசரிப் பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
7. கடைசியில் நெய், வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் தூள் அனைத்தையும் சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.