சோன் பப்டி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 1 1/2 கப்
2. மைதா - 1 1/2 கப்
3. பால் - 2 டேபிள் ஸ்பூன்
4. சர்க்கரை - 2 1/2 கப்
5. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
6. நெய் - 250 கிராம்.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் மைதா மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
2. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், நன்கு சூடானதும், கலந்து வைத்திருக்கும் மாவைப் போட்டு, சிறிது பொன்னிறமாக வரும் போது இறக்கி ஆற வைக்க வேண்டும்.
2. ஒரு வாணலியில் தண்ணீரை ஊற்றி, சர்க்கரை மற்றும் பாலை ஊற்றிச் சற்று கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும். அந்தப் பாகு கெட்டியானதும் இறக்கி, அதனையும் ஆற வைக்க வேண்டும்.
3. ஒரு அகலமான தட்டை எடுத்து அதில் நெய்யைத் தடவி தனியாக வைக்கவும்.
4. ஆற வைத்துள்ள மாவை, சர்க்கரை பாகுவுடன் சேர்த்துக் கரண்டியை கொண்டு கிளற வேண்டும். அவ்வாறு கிளறும் போது மாவு நீளநீளமாகச் சுருளும்.
5. பின்னர் அதை நெய் தடவி வைத்திருக்கும் தட்டில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய்த் தூளைத் தூவி ஆற வைக்க வேண்டும்.
6. கடைசியாக, அதனைச் சதுரம் அல்லது செவ்வக வடிவத் துண்டுகளாக்கி, அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தா வைத்து அலங்கரித்து வைக்கலாம்.
குறிப்பு: சோன்பப்டியினைக் கடைசியாக பாலிதீன் தாள் கொண்டு மூடி வைத்தால் உதிர்ந்து விடாமல் இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.