தேங்காய் காரக் கச்சோரி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. தேங்காய் (துருவியது) - 1 கப்
2. கோதுமை மாவு - 3 கப்
3. சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
4. ஓமம் - 1/2 தேக்கரண்டி
5. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
6. கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
7. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
8. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
9. நெய் - 1 தேக்கரண்டி
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. தேங்காய்த் துருவல் மற்றும் பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஓமம் சேர்த்துத் தாளித்து, அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
3. பின்பு மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
4. அதனுடன் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து வதக்கிப் பின்னர் அதை இறக்கி ஆற வைக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து, ஒரு ஈரமான துணி கொண்டு மூடி வைத்து ஊற வைக்கவும்.
6. பிறகு அதனைச் சிறு உருண்டைகளாக உருட்டி, அந்த உருண்டைகளின் நடுவே ஒரு ஓட்டை போட்டு, அதில் தேங்காய் மசாலாவை வைத்து மூடி வைக்கவும்.
7. அதன் பின்பு அந்த உருண்டைகளைச் சிறு பூரிகளாகத் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
8. ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்திருக்கும் சிறு பூரிகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.