இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Ladies Only
மகளிர் மட்டும்

விடுமுறை நாட்களைப் பயனுள்ளதாக்க முடியுமா?

வேணு சீனிவாசன்


விடுமுறை நாட்களின் உள்ளர்த்தத்தை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். விடுமுறை நாட்கள் என்பது எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறித்தனமாகப் பொழுதைக் கழிப்பதற்காகவோ அல்லது படுத்து உறங்குவதற்காகவோ மட்டுமில்லை. அதை உபயோகமாக பயன்படுத்தலாம். குடும்ப உறவுகளை வளர்ப்பதற்கும், பாரம்பரியமாக வரும் நல்ல பழக்கங்களை மீண்டும் புதுப்பிக்கவும் விடுமுறை நாட்களை உபயோகப்படுத்தலாம் என்பதை உணர்த்துங்கள்.

1. உங்கள் குடும்பத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம் என்பதை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகையின் போது பாட்டி, தாத்தா அத்தை மாமாக்கள் ஆகியோருடன் இருப்பது என்பது எவ்வளவு மகிழ்ச்சியானது என்பதைக் குழந்தை அறிந்து கொள்ள திட்டம் தீட்டுங்கள்.

2. சில விடுமுறைகளில் சொந்த ஊருக்குச் செல்வது, கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்குச் செல்வது, மிகவும் நெருங்கிய நண்பரின் கிராமத்திற்குச் செல்வது, அருகில் இருக்கும் பாரம்பரியம் மிகுந்த கோவிலுக்குச் செல்வது, நீர்தேக்கம் மற்றும் அணைகள் ஆகியவற்றுக்கு செல்வது போன்றவை குழந்தைகளுக்கு மிகுந்த உற்சாகத்தை தரும்.

3. ஒரே மாதிரியான வேலையை ஆண்டு முழுவதும் செய்து அலுத்துப் போன கணவனுக்கும் மனைவிக்கும் கூட இத்தகைய வித்தியாசமான விடுமுறை நாட்கள் வாழ்க்கையில் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தும். ஊருக்கு அருகில் இருக்கும் தோப்பு மற்றும் பண்ணை வீடுகளுக்குச் சென்று ஒரு நாள் விடுமுறையைக் கழிப்பது குழந்தைகள் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இயற்கையான சூழ்நிலை, அடர்ந்த மரங்கள், கண்களைக் கவரும் செடிகொடிகள், மலர்கள், பறவைகள் ஏற்படுத்தும் பல்வேறு சத்தம் போன்றவை கவலையை மறக்கச் செய்வதோடு, மனதிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

4. உங்கள் குடும்பத்திற்கு என்று எந்தவிதமான பழக்க வழக்கமும் இல்லையா அதற்காக கவலைப்பட வேண்டாம். நீங்கள் ஆண்டுக்கு ஒருமுறை திரௌபதி அம்மன் கொடை விழாவுக்குச் செல்லவோ அல்லது தீமிதி விழாவிற்கு குடும்பத்தினருடன் செல்வதையோ வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இத்தகைய புதிய வழக்கம் குழந்தைகளுக்கு ஒரு புதிய மகிழ்ச்சிப் பாதையை திறந்து விடும் என்பதில் சந்தேகமேயில்லை.



குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்

1. விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கின்ற அதே நேரத்தில் மனதிற்கு திருப்தியைத் தருவதாகவும் அதை மாற்றிக் கொள்ளலாம். நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் குடும்பங்கள் எல்லோரும் விடுமுறையை இனிமையாகக் கழிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்யலாம். இவ்வாறு ஒரு பொது இடத்தில் அனைவரும் கூடும் போது குழந்தைகள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும், நட்பு கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.

2. குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் நேரத்தில், விட்டுக் கொடுத்தல், மற்றவரிடம் உள்ள நல்ல பழக்கங்களை அறிந்து கொள்ளுதல், மற்றவர்களுக்கு கீழ்படிதல், இணைந்து விளையாடுதல், சொல்லித்தருதல், உதவுதல், போன்ற நல்ல குணங்கள் வர வாய்ப்பு அதிகம். நாம் இவற்றை வீட்டில் சொல்லிக் கொடுப்பதை விட அவர்களாகவே கற்றுக் கொள்ள இது போன்ற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது மிக நல்ல பலன்களை விரைவில் கொண்டு வந்து சேர்க்கும்.

3. இது போலவே விடுமுறை நாட்களில் குழந்தைகளை அநாதை ஆசிரமம், சேவை மையங்கள், முதியோர் இல்லங்கள் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து, சுட்டித்தனம் செய்யும் குழந்தைகள், அடம்பிடித்து , அழுது காரியங்களை சாதித்துக் கொள்ளும் பிடிவாத குணம் கொண்ட குழந்தைகள், பணத்தின் அருமை தெரியாமலே வளரும் குழந்தைகள் ஆகியோரின் மனதை மாற்ற இது மிகவும் அருமையான, ஆக்கப்பூர்வமான வழியாகும்.

4. ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் இல்லாமல் ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கும் மற்றவர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நமது அன்பும் அனுசரணையும் தேவைப்படுகிறது. அவர்களுக்கு நம்மால் முடிந்த பண உதவியோ அல்லது பொருள் உதவியோ செய்ய வேண்டும். இதனால் நம் மனதிற்கு நிம்மதி ஏற்படும். இது நமது கடமை. மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்வது உயர்ந்த வாழ்க்கை போன்ற நல்ல விஷயங்களை குழந்தைகள் அறிந்து கொள்ள இதனால் வழி ஏற்படும்.



5. நாம் தேவையில்லாமல் துணிகளுக்கும், விளையாட்டு சாமான்களுக்கும் செய்யும் அநாவசிய செலவை மிச்சம் பிடித்தால் அந்தப் பணத்தில் நான்கு குழந்தைகள் ஒரு நாளைக்கு வயிறார சாப்பிடலாம் என்பதை நமது குழந்தைகளுக்கு அநாதை ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்வதன் மூலமாக புரியவைக்கலாம்.

6. இதனால் வீட்டில் ஏற்படும் அநாவசியமான தேவையற்ற செலவுகள் குறையும். மற்ற குழந்தைகளின் தினசரி வாழ்க்கையே இவ்வளவு போராட்டமாக இருக்கிறது. இதில் நாம் ஆடம்பரமாக வாழ அநாவசிய செலவுகள் செய்வது தவறு என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.

7. யானையின் வாயில் செல்லாமல் சிதறி விழுகின்ற சோற்று உருண்டையால் ஆயிரக்கணக்கான எறும்புகள் பசி இல்லாமல் வாழும். இது தான் இயற்கை நியதி என்பதைப் போல, வீண் ஜம்பத்திற்காகவும், வெற்று ஆடம்பரத்திற்காகவும் நாம் செலவழிப்பதில் ஒரு பகுதியை முதியோர் இல்லங்களுக்கும், குழந்தைகள் காப்பகத்திற்கும் தருவதால் அங்கே வாழ்கின்றவர்களது வாழ்க்கை ஒளிமயமாகும் என்பதை இத்தகைய விடுமுறை பயணங்கள் மூலமாக நாம் புரியவைக்க முடியும். இது நமது குழந்தைகளின் வாழ்க்கைப் பாதையில் பல வெளிச்சப் புள்ளிகளை அள்ளி வீசும். அநாதை இல்லங்களை பார்வையிடும் ஆயிரக்கணக்கான குழந்தைகளில் இருந்து ஒரே ஒரு அன்னை தெரசா, ஒரே ஒரு ஏழைகளுக்காக வாடும் வள்ளலார் தோன்றினால் கூட போதும் அல்லவா ? அது நமது வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைதானே.

சேவை மனப்பான்மை ஏற்படுத்தும் நன்மைகள்

1. தன்னிடம் இருக்கின்ற ஒரு பொம்மையை வசதி குறைந்த அல்லது பெற்றோரை இழந்த மற்றொரு குழந்தைக்கு கொடுப்பதன் மூலமாக சேவையின் பெருமையை நமது குழந்தை கற்றுக் கொள்கிறது.

2. நாம் விளையாட்டிற்காக அல்லது பொழுது போக்கிற்காக செலவழிக்கும் நேரத்தையும், பணத்தையும் மற்றவர்களுக்கு உதவிசெய்ய செலவழிப்பது மிகவும் உயர்ந்தது. நமது உடனடித் தேவைகளை விட மற்றவர்களின் பசியை , கண்ணீரைப் போக்குவது மிகவும் உயர்ந்த செயல் என்பதை இதன் மூலமாக குழந்தைகள் வெகு எளிதாக கற்றுக் கொள்வார்கள்.

3. வறுமையைத் தாங்குதல், தேவையைக் குறைத்தல், செலவழிப்பதற்கு முன் அதன் அவசியம், போன்ற குணங்களை குழந்தைகள் கற்றுக் கொள்ள அவர்களை நாம் சமூகசேவைகள் செய்ய அனுமதிக்க வேண்டும்.

4. பலதரப்பட்ட வாழ்க்கைத் தரங்களில் உள்ள மனிதர்களுடன் அவர்கள் பழக இது வழி ஏற்படுத்தும். ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சமுதாயம், கவனிக்கப்படாதவர்கள், வசதி வாய்ப்புக்களைப் பெறாதவர்கள், கல்வி அறிவு பெறாதவர்கள், வயதானவர்கள், பெற்றோர்களினால் ஒதுக்கப்பட்ட குழந்தைகள், பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புப் பெறாத குழந்தைகள், வயதானவர்கள் என்று பலதரப்பட்ட மக்களை அவர்கள் சந்திக்கும் போது வாழ்க்கையின் பலவிதமான சூழ்நிலைகளையும், துன்பங்களையும், தொல்லைகளையும் அவர்கள் அறிந்து கொள்ள முடியும்.



5. இதன் மூலமாக நாம் இவர்களை விட நல்ல நிலையில் இருக்கிறோம். நமக்கு உதவி செய்ய பெற்றோர், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் இருக்கிறார்கள். நாம் மிகவும் அதிருஷ்டம் செய்தவர்கள். நம்மிடம் இருக்கின்ற வசதிகளை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும். இவற்றை ஏற்படுத்திக் கொடுத்த கடவுளுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவிக்கவேண்டும். இல்லாதவற்றை பெரிதாக நினைத்து சலிப்படைவதோ, எரிச்சல் அடைவதோ, குறை கூறுவதோ அல்லது துன்பப்படுவதோ, அதற்காக குடும்பத்தில் சச்சரவு செய்வதோ கூடாது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.
6. மேலும் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் எனவே நம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு உடலாலும், பொருளாலும், பணத்தாலும் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் அவர்களது மனத்தில் ஆழமாகப் பதியும். இது குழந்தைகள் வளர வளர தானும் வளர்ந்து அவர்களை பெரிய சேவைகளில் ஈடுபட்டு செயலாற்ற வைத்துவிடும்.

7. எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் ஏழைகளுக்கு, முதியோர்களுக்கு, ஆதரவு இல்லாத குழந்தைகளுக்கு உதவி செய்யும் போது உதவி பெற்றவர்களின் முகம் மகிழ்ச்சியால் மலரும். அதை பார்க்கும் போது நமது மனமும் மகிழ்ச்சி அடையும். இதை ஒரு முறை ஓரு குழந்தை அனுபவித்து விட்டால் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான விலைமதிப்பே இல்லாத நேரம் அது தான் என்பதை தெரிந்து கொள்ளும். அதற்குப் பிறகு அந்தக் குழந்தை தன்னால் முடிந்த உதவிகளை தேவைப்பட்டவர்களுக்குச் செய்யத் தயங்காது.

8. உங்களது தகுதிக்கும், வசதிக்கும் ஏற்ற வகையில் ஒரு சேவை மையத்தையோ அல்லது அநாதை விடுதியையோ தேர்வு செய்து குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். இதனால் அந்த விடுதியில் உள்ளவர்கள் பயனடைவதோடு, உங்கள் குழந்தைகளும் மிகுந்த பயனடைவார்கள். அவர்கள் விலைமதிக்க முடியாத வாழ்க்கைப் பாடங்களை விளையாட்டாகக் கற்றுக் கொள்வார்கள்.

இதனால் நீங்கள் வசிக்கும் சமுதாயத்திற்கும் நன்மைகள் ஏற்படும். உங்களைப் பார்த்து மற்ற குடும்பத்தினரும் இந்த நல்ல வழியைப் பின்பற்ற வாய்ப்புக்கள் உருவாகும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/ladies/p7.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License