இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


1. பற்கள் அறிமுகம்

பற்களுக்கும் புன்னகைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரோக்கியமான பற்களை உடையவர்களே மனதிடத்துடன் புன்னகைக்க முடியும்.

‘புன்னகை ஒரு பெண் அணியக்கூடிய மிகச்சிறந்த ஒப்பனை’ என்கிறார் ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ. சிரிப்பு ஒருவர் சிரித்தால் அனைவரையும் தொற்றிக் கொள்ளும் அதிநன்மை வைரஸ்.

உலகப் புகழ்பெற்ற புன்னகையாளர்கள் சிலரை இங்கு பட்டியலிடுகிறேன்.

* ஜூலியா ராபர்ட்ஸ் (57 வயது ஹாலிவுட் நடிகை)

* ஈரானின் ஒன்பது வயது சிறுமி அனகிதா ஹாஸெம்ஜாதே.

* தீபிகா படுகோனே (இந்திய நடிகை)

* ராச்சல் மெக் ஆடம்ஸ் (45 வயதான கனடிய நடிகை)

* பிராட்லி கூப்பர் (அமெரிக்க நடிகர்)

* மைக்கேல் ஜாக்சன் (பாப் பாடகர் இறந்துவிட்டார்)

* டாம் க்ரூஸ் (அமெரிக்க நடிகர்)

சிரிப்பு மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கும், மன அழுத்தம் போக்கும், மனநிலையை இதமாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும், மன வலி உள்ளிட்ட அனைத்து வலிகளும் குறையும். வருத்தமான சூழலில் கூட சிலர் சோகப் புன்னகை செய்வதைப் பார்க்கலாம்.

பற்களுக்கான குறள்கள்
* சுவை ஈறு வேர்வலி நாற்றம் ஐந்தின்
வகை அறிவான் வைத்தியன்.

* பல்வலி மாந்தர் வேதனை முகச்சுளிப்பு
சொல்மொழி காட்டிவிடும்.
- தேஜஸ் சுப்பு என்கிற கனலி

மனிதனின் முக அழகு, முப்பத்திரண்டு பற்கள் எனும் முத்துகளால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கின்றது. பற்கள் இல்லையென்றால் முக அமைப்பு சீர் குலையும். முகத்தில் செங்குத்துச் சுருக்கங்கள் ஏற்பட்டு வயோதிகத் தோற்றம் வெளிப்படும். கீழ்தாடை தொங்கிப் போகும், உதடுகள் மெலிவாய்த் தெரியும். கடிக்கும் விதம் சொதப்பும். முகம் சுளிக்கும் தோற்றம் எதிராளியைப் பயமுறுத்தும்.

மனிதப் பற்கள் உணவைக் கடிக்க, கிழிக்க, நசுக்க என்று பல வழிகளில் உதவுகின்றன. பேசும் போது ஒலியை உருவாக்கி, பேச்சைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்கின்றன.

நடிகர் ராஜ்கிரண் ‘என் ராசாவின் மனசிலே’ எனும் படத்தில் ஒரு தட்டு, ஆட்டிறைச்சி எலும்புகளை சர்வ சாதாரணமாகக் கடித்துத் துப்புவார்.

உண்ணுதல் - மெல்லுதல் - ஊட்டச்சத்து மூன்றுமே பற்களின் தாரக மந்திரம்.

ஒரு மனிதனுக்கு இரு முறை பற்கள் முளைக்கின்றன. முதல் முறை முளைத்து விழும் பற்களைப் பால் பற்கள் என்பர். இரண்டாம் முறை முளைப்பது நிரந்தரப் பற்கள். இந்தப் பற்கள் ‘ஹைடிராக்சியாபடைட்’ எனப்படும் கிரிஸ்டலைன் கால்சியம் பாஸ்பேட்டினால் ஆனவை.



பற்கள் நான்கு வகை திசுக்களால் ஆனவை.

* பல்ப் (PULP) - மிக ஆழத்தின் வேர் பகுதி.

* டென்டைன் - எனாமலுக்கு அடுத்த மிகக் கடினமான திசு இது. 70% மினரல், 30% ஆர்கானிக்.

* எனாமல் (பற்களின் வெளிப்புறப் பகுதி)

* சிமென்ட்டம் (எலும்புகளுக்கும் பற்களுக்கும் இடையேயான நங்கூரம்).

ஒரு ஆணுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கோ இருக்கும் பற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1. கீறல் பற்கள் அல்லது வெட்டுப்பற்கள் (INCISOR) - 8 (இதனைப் புன்னகைப் பற்கள் என்றும் கூறுவர்)

2. கோரைப்பற்கள் (CANINE) - 4

3. முன் முனைப்பற்கள் (PREMOLAR) - 8

4. கடைவாய்ப் பற்கள் (MOLAR) - 12

இருபதாவது வயதில் அறிவுப்பல் முளைக்கும்.


பண்டையக் காலத்தில், தற்போது புழக்கத்திலிருக்கும் பற்பசைகள் இருந்தனவா? மக்கள் பல் துலக்கினார்களா? அல்லது பல் துலக்காமல் திரிந்தார்களா? எனக் கேட்கலாம்.

அன்றைய மக்கள் கரித்தூள், களிமண், வாசனைப் பொருட்கள் அடங்கிய பல் துலக்கும் தூள் தயாரித்துப் பயன்படுத்தினர். பசுமை மாறா நறுமண இலைச் செடி ரோஸ்மேரி தண்டுப் பகுதியை எரித்துச் சாம்பலாக்கி பல் துலக்கினர். உப்பைப் பற்களிலும் ஈறுகளிலும் தேய்த்தனர். வெள்ளைப்பூண்டு, கிராம்பு, கருமிளகு மென்றனர். புதர்செடிபிசின், சாம்பிராணி வைத்துப் பல் தேய்த்தனர். வெற்றிலை போட்டு வாயை மணக்கச் செய்தனர். பழங்குடிமக்கள் அரக்கு, குங்கிலியம் வைத்துப் பற்களுக்குக் கறுப்புச் சாயம் பூசினர். 1800 ஆம் ஆண்டுகளில் பன்றி முடிகளால் ஆன பல் துலக்கி, தயாரித்துப் பயன்படுத்தப்பட்டன. எலிசபெத் ராணி காலத்தில் கறை படிந்த பற்கள் கவர்ச்சிக்குரியதாகக் கருதப்பட்டன. ரோமானியர் காலத்தில் மனிதச் சிறுநீர் வைத்துப் பற்களை வெண்மைப் படுத்தினர் என்று படித்திருக்கிறோம்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பற்கள் உண்டு. சிம்பான்ஸி, கொரில்லா, உராங்குட்டன் குரங்கு வகைகளுக்கும் மனிதரைப் போன்றேப் பல் அமைப்பு உண்டு. நாய், பூனை, கரடி பற்களுக்கும் மனிதப் பற்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. ஆப்பிரிக்கன் ஆசியன் யானைகளுக்கு 26 பற்கள் உண்டு. இரு மேல் வெட்டுப் பற்களே, யானைகளுக்குத் தந்தமாகத் துருத்தி நிற்கின்றன. பௌத்த உருவகக் கதைகளில் ஆறு தந்தம் உள்ள சத்தன்தா ஜாடகா யானை இடம் பெற்றிருக்கிறது.

மாடுகளுக்கு 20 பால் பற்கள், 32 நிரந்தர பற்கள் இருக்கின்றன. ஆனால், கொசுக்களுக்குப் பற்களேக் கிடையாது. ஊசி போன்ற உறிஞ்சி உண்டு. அந்த உறிஞ்சி வழியாக உமிழ்நீரைச் செலுத்தி, மனித இரத்தம் உறைந்து விடாமல் பார்த்துக் கொள்கிறது. கொசுக்களில் 3600 வகைகள் உள்ளன. அட்டைப்பூச்சிகளுக்கு மூன்று தாடை உண்டு. ஒவ்வொரு தாடையிலும் 50 முதல் 60 ரம்ப பற்கள் உள்ளன. எதிராளியைக் கடிக்கும் போது, கடிக்காயத்தை திறக்க ரம்ப பற்கள் பயன்படுகின்றன. நத்தையின் நாக்கில் பற்கள் வரிசை அமைந்திருக்கும். தோட்ட நத்தைக்கு 14 ஆயிரம் பற்கள், மற்ற வகை நத்தைகளுக்கு 20, 000 பற்கள் என்று பற்களைப் பற்றி நிறையச் சொல்லிக் கொண்டேப் போகலாம்.

நீர் நத்தையின் பற்கள் டைட்டானியத்தை விட உறுதியானது. டால்பின் வயதை அதன் பற்களை வைத்துச் சொல்லிவிடலாம். மரங்களைப் போல டால்பின் பற்களுக்கும் வளையம் உண்டு. மெல்லுவதற்குப் பற்களை டால்பின் பயன்படுத்துவதில்லை. அவை இரையை முழுங்குகின்றன. ஒட்டகச்சிவிங்கிக்கு பின்பகுதி வாயில் 32 பற்கள் உள்ளன. முன்வாயில் உள்ள உதட்டையும் 20 அடி நீள நாக்கையும் இலை பறிக்கப் பயன்படுத்துகிறது. இலையைப் பின் வாய்க்குள் தள்ளி மென்று விழுங்குகிறது.


சுறா வாரத்துக்கு ஒரு பல்லை இழந்து விடும். கடற்கரையில் சர்வ சாதாரணமாகச் சுறா பற்களைக் காணலாம். விழுந்த பற்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் முளைத்து விடும். மனிதர்களுக்கும் மீண்டும் மீண்டும் பல் முளைக்க வைக்கும் மரபணு இருந்தது. பரிணாம வளர்ச்சியில் அந்தத் திறன் மறைந்து போய்விட்டது. முயல், அணில், எலி போன்ற கொறித்துண்ணிகளுக்கு, பற்கள் அவை சாகும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும்.

நீர்யானைக்கு மூன்றடி நீளமுள்ள கோரைப் பற்கள் உண்டு. அந்த பற்களால் சிறு படகைக் கடித்து துண்டித்து மூழ்கடித்து விடும். குதிரைகளுக்கு ஈறுகள் பின் வாங்கி, பற்கள் வளர்வது போல தெரியும். நார்வல் என்கிற கொம்பன் திமிங்கலத்துக்கு 8 அடி நீள கொம்பு போன்ற ஒரு பல் உண்டு. நீலத் திமிங்கலங்களுக்குப் பல் கிடையாது. அதற்குப் பதிலாக பலீன் எனும் தகட்டெலும்பு வளரும். பாம்பின் பல்லில் விசச் சுரப்பி இணைந்திருக்கும். வட அமெரிக்கப் பைக்கீரிகளுக்கு 50 பற்கள், ராட்சச நல்லங்குக்கு 80 - 100 பற்கள். பாட்டில் மூக்கு டால்பின்களுக்கு 72 -104 பற்கள். சுறாக்களுக்கு 3000-35000 பற்கள். கடல் நத்தைக்கு 750000 பற்கள் உண்டு.

பற்களைப் பற்றிய பல சுவையான தகவல்களைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/medicine/dental/serial/serial1/p1.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License