இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


10. கோரைப்பற்கள்

கடந்த பகுதியில் வெட்டுப் பற்களைப் பற்றி பார்த்தோம். இந்த பகுதியில் Canines எனப்படும் கோரைப்பற்களைப் பற்றிப் பார்ப்போம். Dentes Canini எனவும் கோரைப்பற்களை அழைப்பர். கோரைப் பற்களை, கண் பற்கள் என்றும் கூறுவர். ஏனென்றால், கோரைப்பற்கள் மிகச் சரியாகக் கண்ணுக்குக் கீழே அமைந்துள்ளன.

பாம்பின் நச்சுப்பல் போல, நாயின் கோரைப்பல் போல சாயல் கொண்டது மனிதரின் கோரைப்பல்.

பல்மருத்துவர்கள் கோரைப்பற்களை Cuspids என ஆங்கிலத்தில் அழைப்பர். ஹிந்தியில் Shabdkosh என்பர். பற்களில் நீளமானவை கோரைப்பற்கள்.

கோரைப்பற்கள் கூர்மையான நுனித்த கொடுக்கு போன்ற தோற்றம் கொண்டவை.

மேல்வாயின் வலது பக்கம் ஒன்று, மேல் வாய் இடது பக்கம் ஒன்று, கீழ்வாயின் வலது பக்கம் ஒன்று, கீழ்வாயின் இடது பக்கம் ஒன்று என்று மொத்தம் ஒரு மனிதருக்கு நான்கு கோரைப்பற்கள் இருக்கும். பால் கோரைப்பற்கள் கீறல் பற்களுக்கும் முதல் கடைவாய் பற்களுக்கும் பிறகு முளைக்கும். 17 முதல் 23 மாதங்களில் குழந்தைகளுக்கு முதல் கோரைப்பல் முளைக்கும். 23 மாத முடிவில் எல்லா கோரைப்பற்களும் முளைத்திருக்கும்.

பால் கோரைப்பற்களை குழந்தைகள் 9- 12 வயதில் இழப்பர்.

பற்களுக்கான குறள்கள்
* காலை மாலை தவறாது துலக்குவோருக்கு பற்களின்
ஓலை கிழியாமல் காக்கப்படும்.

* மொத்த வாழ்நாளில் முப்பத்தியெட்டு நாட்கள்
முத்துப்பல் துலக்கச் செலவு.
- தேஜஸ் சுப்பு என்கிற கனலி


கோரைப்பற்களின் பயன்பாடுகள் என்று கீழ்க்காணும் சில பயன்களைச் சுட்டலாம்.

* உணவை துண்டித்து கிழித்து சிறு சிறு துண்டுகளாக்கி உண்ண கோரைப் பல் உதவுகிறது. மிருகங்களில் மாமிசப் பட்சிணிகளுக்கு கோரைப்பற்கள் மிக உதவியாக இருக்கின்றன.

* பேசும்போது கோரைப்பற்கள் கீறல் பற்களுடன் இணைந்து பேச உதவுகின்றன.

* உதடுகளில் வடிவத்தை கோரைப்பற்கள் சரிவரப் பேணுகின்றன.

* மற்ற மூன்று வகை பற்கள் அதனதன் இடங்களில் சரிவர நிலை கொள்ள கோரைப்பற்கள் வழிகாட்டியாகச் செயல்படுகின்றன.

* கடைவாய்ப் பற்களை சேதமுறாமல் கோரைப்பற்கள் பாதுகாக்கின்றன.

* வாயின் அழகியலை கோரைப்பற்கள் நிர்வகிக்கின்றன.

* மனிதரின் சிரிப்பை மகிமைப்படுத்துவது கோரைப்பற்களே.

கோரைப் பற்களின் ஈறுகள் எளிதில் தேயும். காரணம் வாயில் அவைகளின் அமைப்பு. கீழ்த்தாடை கீறல் பற்களிலும் மேல்தாடை கோரைப் பற்களிலும்தான் ஈறு தேய்மானம் அதிகம் ஏற்படும். பற்களைத் துலக்கும் போது, கோரைப் பற்களின் மீது அதிகக் கவனம் தேவை. பற்களைத் துலக்கும் போது, பிரஷ்களின் அழுத்தம் அதிகமாக கோரைப்பற்களைத்தான் தாக்கும். ஆகவே, கோல்கேட் சூப்பர் பிளக்ஸி போன்ற மென்மையான வகைகளை வாங்குவது நலம். நிரந்தரப் பற்கள் முளைப்பதற்குத் தடையாக பால் கோரைப்பற்கள் இருந்தால் அவையை அகற்றி விடுவது நலம்.


மேல் வரிசை கோரைப்பற்களில் தெற்றுப்பல் இருந்தால் அதிர்ஷ்டம் என சிலர் கூறுவர். இது ஒரு கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புற நம்பிக்கை. ஆனால், அந்தத் தெற்றுப் பற்களால் பக்கத்து இரு பற்கள் பற் சொத்தையாலும் ஈறு நோயாலும் பாதிக்கப்படும் என்கிற உண்மையை அந்த மூட நம்பிக்கையாளர்களுக்கு யார் உணர்த்துவது?

மாமிச உணவு உண்பவர்களுக்குத்தானே கோரைப்பற்கள் தேவை? சைவர்களுக்கு கோரைப்பற்கள் எதற்கு? என்கிற கேள்வி எழலாம்.

கடைவாய் பற்களும் முன் கடைவாய் பற்களும் விரிசல் விழாமல் முறிந்து விடாமல் பாதுகாப்பது கோரைப் பற்களே. கோரைப்பற்களை அகற்றினால் வாய் சுத்தமும் தன்னம்பிக்கையும் பாழாகும். அபூர்வமாக சிலர் கோரைப்பற்கள் இல்லாமல் வளர்கின்றனர்.

சுறா மீன்களுக்கு கோரைப்பற்கள் விழுந்துவிட்டால் மீண்டும் முளைக்கும். மனிதர்களுக்கோ நாய்களுக்கோ கோரைப்பற்கள் விழுந்தால் மீண்டும் முளைக்காது.

கோரைப் பற்களின் உடற்கூறியல் பார்ப்போம்.

கோரைப்பற்களுக்கு மூன்று பாகங்கள் உண்டு.

1. கிரீடம் (Crown)

2. கழுத்து(Neck)

3. வேர் (Root) பல்லின் வேர்பகுதி பல்லுயிர் தசை நார் எனும் திசுக்கள் வழியாக எலும்பில் நங்கூரமிட்டு உள்ளது. பல் கிரீடத்தின் மேல் பகுதி எனாமலாலும் உட்பகுதி டென்டினாலும் ஆனவை. டென்டினின் உள்ளே ஒரு குழிவு உள்ளது. அந்தக் குழிவை ஒரு கூழ் நிரப்புகிறது. கூழை ஆங்கிலத்தில் Pulb என்பர். நரம்புக்குழாய் பின்னலே கூழ் அல்லது பல்ப் எனப்படும்.

இரத்தக் காட்டேரிப் பற்கள்
1897 ஆம் ஆண்டு பிராம் ஸ்டோக்கர் என்பவர் ட்ரான்ஸில்வேனியாவில் இருந்து இரத்தக் காட்டேரி வருவதாக கதை எழுதினார். 15 ஆம் நூற்றாண்டு ரோமானிய கவர்னர் விளாட் தி இம்பாலர் என்பவரை மனதில் வைத்துத்தான் இரத்தக் காட்டேரிக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாகக் கூறுவர். பேய் வேடம் போட்டு ஆட்டம் போடும் ஹாலோவீன் திருவிழா 2000 ஆண்டுகளுக்கும் மேலான மரபு வழியைக் கொண்டது. அயர்லாந்து, ஸ்காட்லாந்தில் இந்த ஹாலோவீன் திருவிழா புகழ்பெற்றது. இரத்தக் காட்டேரியாக நடிக்கும் சினிமா நடிகர்கள் உயர்தர ஒவ்வாமை தராத டென்டல் பிளாஸ்டிக் கோரைப் பற்களைத்தான் மாட்டிக் கொள்கின்றனர். பொய் இரத்தக் காட்டேரிப் பற்கள் இனிப்பால் செய்யப்படுகின்றன. நிகழ்வு முடிந்ததும் தின்று விடலாம். பொய் காட்டேரிப் பற்கள் 200 முதல் 400 ரூபாய் வரை அமேசானிலும் பிளிப்கார்ட்டிலும் கிடைக்கின்றன. சில பல பேருக்கு மேல் வரிசை கோரைப்பற்கள் பெரும்பாலும் இட வசதி இல்லாமல் தனித்து நிற்கின்றன.



ஆண்களை விடப் பெண்களின் கிரீடம் நீளம் அதிகம். பல்லின் அளவு ஆண்களுக்குப் பெரிது. பெண்களுக்கு ஒப்பீட்டு அளவில் சிறிது. கோரைப் பற்கள் தனித்த நீண்ட வேர்பகுதி உடையவை. கூம்பு அல்லது முக்கோண படிவ கூர் முனைக் கிரீடம் கொண்டவை. மேல் தாடை கோரைப்பற்களின் கிரீடம் மற்றும் வேரின் சராசரி உடற்கூறியல் நீளம் 9. 61 மிமீ/ 16. 28 மிமீ., கீழ்த்தாடை கோரைப்பற்களின் கிரீடம் மற்றும் வேரின் சராசரி உடற்கூறியல் நீளம் 8. 70 மிமீ / 15.51 மிமீ மனித கோரைப்பற்களின் அளவு ஆளுக்கு ஆள் இனத்துக்கு இனம் வேறுபடும். பல் அளவு மாறுபாட்டுக்கான காரணங்கள்.

* பல்லுறுத்தோற்ற நார்க்கழலை நேரம்.

* பற்சிப்பி தடிமன்

* உடல் அளவு

* ஹார்மோன் வேறுபாடுகள்

* எக்ஸ் குரோமோசோம் இருப்பு

* ஊட்டச்சத்து மேம்பாடுகள்

* வாய் சார்ந்த நோய்கள்

* குழந்தைப் பருவக் கோளாறுகள்

* சமூகப் பொருளாதார நிலை

* இன வேறுபாடுகள்

பாட்டில் மூடிகளைப் பல்லால் கடித்துத் திறக்கலாமா?
என். தென்னரசு திருப்பூர்.

பாட்டில் மூடிகளை கைகளால் திறக்க முடியாவிட்டால் வாயால் கடித்துத் திறப்பேன். சில நண்பர்கள் இப்படிச் செய்வதால் பற்கள் போய்விடும் என மிரட்டுகின்றனர். உண்மையில் என் பற்கள் போய்விடுமா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

ஒரு சாதனைக்காக, லாரியை கூடப் பற்களால் கடித்து இழுப்பவர்கள் உள்ளனர். ஆனால் அது சாதனை, உங்களது செயல் வேதனையே. பாட்டில் மூடிகளைத் திறக்க எத்தனையோ வழிகள் இருக்க, இந்த வலியான முயற்சி தேவைதானா? 10 ரூபாய்க்குப் பாட்டிலைத் திறக்கும் திறப்பான்கள் கிடைக்கின்றன. நகவெட்டியுடன் திறப்பான்கள் இணைந்து கிடைக்கின்றன. பற்களின் வலிமையை வீணாக்கு, வலியைத் தேடிக் கொள்ளாதீர்கள்.



கோரைப்பற்கள் பல் கூட்டமைப்பில் முக்கியமான அங்கம் வகிக்க உயிரியல் மற்றும் உயிரியல் வேதியியல் காரணிகளே முக்கியக் காரணங்கள். மேலும் சில காரணங்கள்:

* இடப்பற்றாக்குறை

* பற்கள் முளைப்பு வரிசையில் தொந்திரவுகள்.

* பால் கோரைப் பற்கள் பிடிவாதமாய் இடம் கொடுக்காமல் அப்படியே நிற்பது

* பல்மொட்டுகளின் சுழற்சி

* முந்திரி கொட்டை தனமான வேர் பகுதி மூடல்

* சிறுகட்டிகள் மற்றும் தீங்கில்லாத வளர்ச்சி கட்டிகள்

மொத்தத்தில் ஒரு மனிதன் உண்ண, பேச, கச்சித முக அமைப்புடன் திகழ கோரைப்பற்கள் அதி முக்கியம்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/medicine/dental/serial/serial1/p10.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License