இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


11. கடைப்பற்கள் மற்றும் ஞானப்பல்

கடந்த பகுதிகளில் கீறல் பற்கள் மற்றும் கோரைப்பற்கள் குறித்துப் பார்த்தோம். இந்தப் பகுதியில் முன் கடைப்பற்கள் பற்றிப் பார்க்கலாம்.

ஒரு ஆணுக்கோ ஒரு பெண்ணுக்கோ எட்டு முன் கடைப்பற்கள் இருக்கும்.

1. மேல்தாடை இடது முதல் கடைப்பல்

2. மேல்தாடை இடது இரண்டாம் கடைப்பல்

3. மேல் தாடை வலது முதல் கடைப்பல்

4. மேல் தாடை வலது இரண்டாம் கடைப்பல்

5. கீழ் தாடை இடது முதல் கடைப்பல்

6. கீழ் தாடை இடது இரண்டாம் கடைப்பல்

7. கீழ் தாடை வலது முதல் கடைப்பல்

8. கீழ்த்தாடை வலது இரண்டாம் கடைப்பல்

இந்தக் கடைப் பற்கள் வாய்க்குள் எங்கு வீற்றிருக்கும்? இவை கோரைப் பற்களுக்கும் கடைவாய்ப் பற்களுக்கும் இடையே ஒய்யாரமாக அமர்ந்திருக்கும்.

கோரைப்பற்களின் சில நிலைகளும் கடைவாய்ப் பற்களின் சில நிலைகளும் முன் கடைப்பற்களில் சேர்ந்தேக் காணப்படும்.

பற்களுக்கான குறள்கள்
* உடைந்த எயிறும் உருமாறும் என்றும்
உடையா மருத்துவம் உண்டு.

* தூய்மை உணர்வுடன் தூய்மைப்பல் லொடும்நல்
வாய்மை வளமொடும் வாழ்.
- தஞ்சாவூர் ஹரணி


இந்த எட்டு கடைபற்களும் உணவைக் கிழிக்க, நசுக்க, அரைக்கப் பயன்படும்.

கீழ்த்தாடைக் கடைப் பற்களின் அகலம் 7 மி.மீ. மேல்தாடைக் கடைப் பற்களின் அகலம் 6.5 முதல் 7.00 மி.மீ எனும் அளவிலும், மேல் முதல் கடைப் பல்லின் நீளம் 22.5 மி.மீ, கடைப் பற்களின் சராசரிக் கிரீடப் பகுதி 8.8 மி.மீ. வேர் நீளம் 13.7 மிமீ என்றும் இருக்கும்.

கீழ்த்தாடை இரண்டாம் கடைப்பல் அளவில் பெரியது. மேல்தாடை முதல் கடைப் பற்கள் மேல்தாடை இரண்டாம் கடைப் பல்லை விட, எல்லாப் பரிமாணங்களிலும் பெரிது. ஆனால், வேர்ப்பகுதி அளவில் குட்டையானது.

கீழ்த்தாடை முதல் கடைவாய்ப்பல் கீழ்தாடை நான்கு கடைப் பற்களினும் சிறியது.

மேற்கத்திய நாட்டு மக்களின் பற்களின் அமைப்பைப் போலவே அனைத்து நாட்டு மக்களின் பற்களின் அமைப்பும் இருக்கும் என்பது பேதைமை. இனத்தால், பண்பாட்டால், சமூக நடைமுறையால், சுற்றுச்சூழல் காரணிகளால் நாட்டுக்கு நாடு மக்களின் பல் அமைப்பு மாறுபடவேச் செய்கிறது.

ஜப்பான், பிரேசில், ஈரான் மற்றும் சௌதி அரேபியாவை சேர்ந்த மக்களுக்குக் கீழ்த்தாடை இரண்டாம் கடைப்பல் பிறவியிலேயே முளைக்காது. இதனை ஆங்கிலத்தில் Congenitally Missing Teeth என்பர். இதனைச் சுருக்கமாக CMT என்கின்றனர்.


பொதுவாக, தடய அறிவியலில் கைரேகை, மரபணு வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டறிவர். திராவிட மக்களுக்கு இரண்டாவது கடைப்பல் பிறவியிலேயே முளைக்காது. அது தடய அறிவியல் அடையாளப்படுத்தலுக்கு மிக உதவும்.

கீழ்த்தாடை முதல் கடைப்பல் கீழ்கண்ட நான்கு மடல்களால் உருவானது.

1. மையப்பகுதி (Mesial)

2. தொலைவுப்பகுதி (Distal)

3. வாய்ப்பகுதி (Buccal)

4. பேச்சுப்பகுதி (Lingual)

கீழ்த்தாடை இரண்டாம் கடைப்பல் கீழ்க்கண்ட ஐந்து மடல்களால் உருவானது.

1. மையப்பகுதி (Mesial)

2. வாய்ப்பகுதி (Buccal)

3. தொலைவுப்பகுதி (Distal)

4. மையப் பேச்சுப்பகுதி (Mesiolingual)

5. தொலைவுப் பேச்சுப்பகுதி (Distolingual)

மேல் தாடை கடைப் பற்கள் கீழ்க்கண்ட மூன்று வகை சாலகங்களை கொண்டவை

1. மைய வாய்ப்பகுதி (Mesio Buccal)

2. தொலைவு வாய்ப்பகுதி (Disto Buccal)

3. பேலடல் (Palatal)


* கடைப் பற்களின் விளிம்புகளின் குறுகிய இடைவெளியில் உணவுத் துகள்கள் சிக்கிக் கொண்டு பற்சொத்தை உருவாகும்.

* மேல்தாடைக் கடைப் பற்களைத் தவிர்த்து, கீழ்த்தாடைக் கடைப் பற்களுக்கு ஒரு வேர்தான் அமைந்திருக்கும்.

* மேல்தாடை முதல் கடைப் பல்லுக்கு இரண்டு வேர்கள் இருக்கும்.

* மேல் கடைவாய்ப் பல்லுக்கு மூன்று வேர்கள் அமைந்திருக்கும்.

* குழந்தைகளுக்கு முதல் கடைவாய்ப்பல் விழுந்த பின்பு, நிரந்தர முன் கடைப் பற்கள் முளைக்கும். அதாவது, 10 முதல் 12 வயதிற்குள் முன் கடைபற்கள் முளைக்கும்.

அடுத்து நாம் நம் வாயிலுள்ள கடைவாய் பற்களை பார்ப்போம்.


ஒரு வயதுக்கு வந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ மொத்தம் பன்னிரண்டு கடைவாய்ப் பற்கள் இருக்கும்.

1. கீழ்தாடை வலது கடைசியில் மூன்று கடைவாய்ப் பற்கள்

2. கீழ்த்தாடை இடது கடைசியில் மூன்று கடைவாய்ப் பற்கள்

3. மேல் தாடை வலது கடைசியில் மூன்று கடைவாய்ப் பற்கள்

4. மேல் தாடை இடது கடைசியில் மூன்று கடைவாய்ப் பற்கள்

மேல் தாடை கடைவாய்ப் பற்கள் மூன்று முகடுகள் கொண்ட மலை போல் காட்சியளிக்கும். பாலூட்டி இனங்களில் கடைவாய் பற்களின் வளர்ச்சி மேன்மையாக இருக்கும். உணவை அரைக்கக் கடைவாய்ப் பற்கள் பெரிதும் பயன்படும்.

கடைவாய் பற்களை ஆங்கிலத்தில் ‘மோலார்’ (Molar) என கூறுவர். மோலார் என்கிற வார்த்தை லத்தீன் மொழியின் ‘மோலாரிஸ் டென்ஸ்’ என்கிற வார்த்தையிலிருந்து உருவானது. பாலூட்டி வகைகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியாக கடைவாய்பற்கள் அமைந்திருக்கும். கடைவாய்ப் பற்களில் மூன்றாவது கடைவாய்ப் பல்லாக ஞானப்பல் இணைந்திருக்கும். சில பேர் ஞானப்பல் இல்லாமல் பிறந்திருப்பர். அவர்களுக்கு பனிரெண்டு கடைவாய்ப் பற்களுக்கு பதிலாக எட்டு கடைவாய்ப் பற்கள்தான் இருக்கும்.

நம்முடைய முன்னோர்கள் முரட்டுத்தனமான தாவரங்களையு,ம் கொட்டைகளையும், சரிவர வேக வைக்கப்படாத மாமிசங்களையும் தின்றனர். அதனால் அவர்களுக்கு ஞானப்பற்கள் தேவைப்பட்டன. இப்போது சமைக்கப்படும் உணவுகள் மிகவும் மென்மையாகி விட்டன. அதனால் ஞானப்பற்களின் தேவை இல்லாமல் போய்விட்டது.

ஆண் குழந்தைகளுக்குத் தாய்மார்கள் வாய்வழி முத்தம் கொடுப்பது சரியா?

எம். ஜெகனாரா பேகம், பாலக்காடு

சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு, குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு வாய் வழி முத்தம் தருகிறார்கள். அது கலாசார ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் சரிதானா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

முழுக்க முழுக்கத் தவறு. தாயாக இருந்தாலும், மகனாக இருந்தாலும் வாய் வழி முத்தம் உணர்வுகளைத் தூண்டும் செயல். அக்குழந்தைக்குச் சிறு வயதிலேயே பாலுணர்வைத் தூண்டிவிடும் தவறை அந்தத் தாய் செய்கிறார். தவிர, தாயின் வாயில் இருக்கும் கிருமிகள் குழந்தையின் வாய்க்குள் போய் சில தொற்று நோய்களை உருவாக்கி விடும். முத்தம் கொடுக்கும் தாயை அவரது கணவரோ, அவரது பெற்றோரோ, அவரது நெருங்கிய உறவினர்களோ தகுந்த அறிவுரை கூறி தடுத்திட வேண்டும்.



பரிணாம வளர்ச்சியில் நமது தாடைகள் சிறுத்து விட்டன. அதனால் குறுகிய வாய்பகுதியில் ஞானப்பற்கள் முளைக்கப் போதிய இடம் இருப்பதில்லை. 53 சதவீதம் பேருக்கு ஒரே ஒரு ஞானப்பல்தான் முளைத்திருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. சிலருக்கு நான்கு ஞானப்பற்களும் தவ்றிப்போய் விட்டன. ஞானப்பற்களுக்கு பொதுவாக இரண்டு அல்லது மூன்று வேர்கள் உள்ளன. அபூர்வமாக சில ஞானப்பற்களுக்கு நான்கு வேர்கள் உள்ளன. பொதுவாக ஞானப்பற்கள் 17 முதல் 25 வயதில் முளைக்கின்றன.

ஞானப்பற்கள் முளைக்கும் போது கடைசி கடைவாய்ப்பகுதி ஈறு சிவந்து வீங்கியிருக்கும். தாடை வலி இருக்கும். முகத்திலும் வலி தோன்றும். சிலருக்கு ஞானப்பல் ஈறை விட்டு வெளி வராமல் அல்லது தவறான முறையில் முளைத்துப் பிரச்சினை கொடுக்கும்.

பிரச்சனை தரும் ஞானப்பல்லை அகற்றி விடுவதே மிகச் சிறந்தது. எந்த வயதிலும் அகற்றலாம். ஞானப்பல் உணவைக் கடிக்கவோ, மெல்லவோப் பயன்படுவதில்லை. ஆகையால், அகற்றப்படும் ஞானப்பல்லுக்கு மாற்று தேவையில்லை.

ஒரு தடவை ஞானப்பல்லை அகற்றினால் மீண்டும் முளைக்காது. உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஞானப்பல்லால் ஏற்படவில்லை என்றால், அதனை அகற்றாமல் விட்டு வைக்கலாம். ஞானப்பல் தேவை, தேவை இல்லை என்பதனை பல் மருத்துவரிடம் கேட்டு உறுதி செய்யலாம்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/medicine/dental/serial/serial1/p11.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License