இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


14. எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவருக்கான சிகிச்சை

மனித நோய் எதிர்ப்புக் குறைபாடு தீநுண்மம் (Human Immunodeficiency Virus) எனும் நோயினை ஆங்கிலத்தில் எச்ஐவி (HIV) என்று சுருக்கமாகச் சொல்வார்கள். இதனை பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி (Acquired Immune Deficiency Syndrome) என்றும் சொல்வார்கள். இதனை ஆங்கிலத்தில் எயிட்ஸ் (AIDS) என்று சுருக்கமாகக் குறிப்பிடுகின்றனர். இந்நோயினைத் தமிழில் உடற்தேய்வு நோய், உயிர்க் கொல்லி நோய், ஏமக்குறை நோய், வலியுறுக்கி வேட்டை நோய் என்றும் சொல்வதுண்டு.

பத்தாண்டுகளுக்கு முன் இந்நோய் உலகம் முழுவதும் பரபரப்பாய் பேசப்பட்டது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்தூசியினை (Syringe) கிருமி நீக்கம் செய்யப்படாமல் பயன்படுத்தும் போது, அந்த மருந்தூசியின் வழியாக எய்ட்ஸ் நோய்த் தொற்று பரவிவிடும் எனும் பயமிருந்தது. எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய்த் தொற்று இருக்கும் என்று மருத்துவ உலகம் அச்சமடைந்தது. கருப்பின மக்கள் அதிகமாக இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சில கணக்கெடுப்புகள் சுட்டிக்காட்டின. குறிப்பாகம் ஆப்பிரிக்காவிலிருப்பவர்களில் இருபத்தைந்து பேர்களில் ஒருவருக்கு இந்நோய் இருந்தது என்று சொல்லப்பட்டது. ஓரினச்சேர்க்கை வழியாக, இந்நோய் வேகமாகப் பரவியது என்றும் சொல்லப்பட்டது. கடந்த ஆண்டில் வெளியான ஒரு கணக்கெடுப்பில், உலகில் மொத்தம் 4 கோடி எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆன்ட்டிரெட்ரோ வைரஸ் சிகிச்சை மூலம் இந்நோய் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.

சரி, பல் மருத்துவம் தொடர்பான இக்கட்டுரையில் எயிட்ஸ் நோய்த் தொற்று பற்றிச் சொல்ல வேண்டியது ஏன் என்று இவ்வேளையில் தாங்களேச் சிந்தித்திருப்பீர்கள்.

பற்களுக்கான குறள்கள்
*மாற்றடுக்கு பல்லெனினும் மாற்றிட நேராகும்
மாற்றிய பின் வாழ்த்தி மகிழ்.

* சிறப்புப்பல் நுட்பமுண்டு சீராக்கும் தேர்ச்சி
திறமும் அறிந்து தெளி.
- தஞ்சாவூர் ஹரணி


எய்ட்ஸ் நோய்த் தொற்று கொண்ட எய்ட்ஸ் நோயாளிகள் பலரும் கடுமையான பல் தொடர்புடைய பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். அவற்றுள் குறிப்பாக,

1. உலர்ந்த வாய்

எயிட்ஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வாய்ப்பகுதி வறண்டிருக்கும். அதனால் அவர்களால் சரிவரச் சாப்பிடவோ, மெல்லவோ, விழுங்கவோ, பேசவோ முடியாது. உலர்ந்த வாயால் பற்சொத்தையும் பல் நோய்த் தொற்றுகளும் எளிதில் ஏற்படும்.

2. ஈறுநோய்

எயிட்ஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு ஈறு அழற்சி (Gingivitis) எனும் பல் ஈறு நோய் பொதுவாகப் பீடிக்கும்.

3. எலும்புத் தேய்மானம்

எயிட்ஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குப் பற்புறத்திசு நோய் (Periodontitis) ஏற்படும்.


4. வாய்ப்புண்கள்

எயிட்ஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வரும் வாய்ப்புண்கள் மிக மிக வலியைத் தரக்கூடியவை. இந்த வாய்ப்புண்கள் சுவை இழப்பையும் பல்லுறுப்புகள் இழப்பையும் ஏற்படுத்தக் கூடியவை.

5. வாய் மருக்கள் அல்லது வாய் பாலுண்ணிகள்

எயிட்ஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வாயில் மருக்கள் அதிகமாகக் காணப்படும்.

6. காய்ச்சல் கொப்பளம்

எயிட்ஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வரும் பொதுவான பிரச்சனை இது.

இவை தவிர, வாய்த் தெளிவநோய் (Oral Candidiasis), நாக்கில் வெண்படலம் நோய் (Leukoplakia), பற்சொத்தை போன்றவைகளும் ஏற்படுகின்றன.


எயிட்ஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர் மூடிய வாயால் முத்தமிட்டாலோ, எச்சில் பரிமாற்றத்தாலோ மற்றவர்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றுவதில்லை.இந்நோய்த் தொற்றுடையவர்களின் இரத்தத்தில் கலக்காத எச்சிலால், கண்ணீரால், வியர்வையால், மலத்தால் மற்றும் சிறுநீரால் நோய் தொற்றும் ஆபத்து இல்லை. ஆனால் எயிட்ஸ் நோய்த் தொற்றானது, விந்து, பெண்ணுறுப்புத் திரவம், இரத்தம், மலக்குடல் சீதம், தாய்ப்பால் போன்றவைகளின் வழியாக வெகு வேகமாகப் பரவுகிறது. மேலும், பாதுகாப்பற்ற உடலுறவு, தவறான வழிகளிலான உடலுறவு, மாசுபட்ட இரத்தக் கொடை, மாசுபட்ட உடலுறுப்புக் கொடை, போதை மருந்து ஊசிப் பயன்பாடு போன்றவைகளில் வழியாகவும் எயிட்ஸ் நோய்த் தொற்று பரவுகிறது.

இந்நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சந்தேகம் வந்தால் 72 மணி நேரத்துக்குள் பெப் (Post Exposure Prophylaxis - PEP) மருத்துகளை உட்கொள்ள வேண்டும். அதாவது, த்ருவடா (Truvada), ரால்ட் கிராவிர் (Raltegravir), டோலூட் கிராவிர் (Dolutegravir), பிரிஜிஸ்ட்டா (Prezista) எனும் மருந்துகளில் ஒன்றைத் தினம் ஒரு முறை அல்லது இருமுறை 28 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டியிருக்கும். இம்மருந்துகளை எடுத்துக் கொண்டால் வாந்தி மயக்கம் தலைவலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். பெப் மருந்துகளை உட்கொண்டபின் எய்ட்ஸ் நோய்த் தொற்று சோதனைகளை மேற்கொண்டு மருந்து வேலை செய்தததை உறுதி செய்து கொள்ளலாம்.

இந்நோய்ச் சந்தேகமுடையவர்களுக்குச் சிகிச்சை மேற்கொள்ளும் போது, பல் மருத்துவர்களும் பல் மருத்துவ உதவியாளர்களும் கையுறை, முக உறை, கண் பாதுகாப்பு கண்ணாடி அணிதல் பாதுகாப்பானது. எய்ட்ஸ் நோய்த் தொற்று நோயுடையவர்கள், எந்தவொரு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் செல்லும் போது, தனக்கு எய்ட்ஸ் நோய்த் தொற்று இருப்பதை மருத்துவருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்பது சட்டப்படி அவசியமல்ல எனினும், நோய்த் தொற்று இருப்பதைத் தெரிவிப்பது நல்லது. இதேப் போன்று, எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவருக்குச் சிகிச்சை செய்யும் மருத்துவர்களும், அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பிறருக்குத் தெரிவிக்காமலிருப்பது நல்லது.

எய்ட்ஸ் நோய்த் தொற்றுடைய பல் மருத்துவர் சிகிச்சை அளிப்பது சரியா?

ஆர். காடேஸ்வரி, ஒண்டிப்புதூர்

எய்ட்ஸ் நோயாளி பல் மருத்துவராகப் பணிபுரியலாமா? இந்தியாவில் அவர்கள் மருத்துவம் செய்ய அனுமதிக்கப்படுகிறதா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

இந்தியாவில் எய்ட்ஸ் நோய்த் தொற்றுடைய பல் மருத்துவர் இருப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் எய்ட்ஸ் நோய்த் தொற்றுடைய பல் மருத்துவராகப் பணிபுரிகின்றனர். இந்தியாவிலும் எய்ட்ஸ் நோய்த் தொற்றுடைய பல் மருத்துவர்கள் பல் மருத்துவப் பணி செய்யத் தடை ஏதுமில்லை. காப்பு மூக்கு கண்ணாடி, கையுறைகள், முகஉறை, கிருமி நீக்கம் செய்யப்பட்ட கருவியை வைத்து பாதுகாப்பாகச் செயல்படுதல் போன்றவைகளின் வழியாக, பல் மருத்துவத்தைச் சிறப்பாகச் செய்யலாம். அவரால் செய்ய முடியாது என்று கருதும் சில பல் மருத்துவச் சிகிச்சைகளுக்கு உரிய பல் மருத்துவர்களைப் பரிந்துரை செய்து அனுப்பலாம்.



பல் மருத்துவத்திற்காக வரும் எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர் பல் மருத்துவரிடம் தனது நோய் குறித்துச் சொல்லிவிட்டால், அதற்கேற்ப அவருக்கு விரைவான சிகிச்சை அளிக்க முடியும். மேலும், எய்ட்ஸ் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டிருப்பவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவரிடம் கலந்தாலோசித்தும் அவருக்கேற்ற சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

ஒரு சாதாரண பல் நோயாளிக்கு வெள்ளணுக்கள் 500 முதல் 1500 வரை இருக்க வேண்டும். எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர்களுக்குப் பல் மருத்துவம் பார்க்கும் போது, நோயாளியின் வெள்ளணுக்கள் இரத்தத்தில் 200-க்கும் குறைவாக இருக்கக் கூடாது. எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர்களுக்குப் பல் மருத்துவம் பார்க்கும் போது நோயாளியின் நோய் வரலாறு, அவரது எய்ட்ஸ் நோய்க்கான நடப்புச் சிகிச்சை, அவருக்கு கொடுக்கப்படும் மருந்துகளின் செயலாக்கம் முதலியவற்றை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர்களுக்குப் பல் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது, குறுக்குத் தொற்று (Cross Infection) ஏற்படாமல் பல் மருத்துவர் கவனமாகச் செயல்படவேண்டும். இவ்வகை நோயுற்றவர்களுக்கு அடிக்கடி உறிஞ்சக் குடிநீர், சர்க்கரை இல்லாத பானங்கள், சர்க்கரை இல்லாத சுவிங்கங்கள் வழங்க வேண்டும். உலர்ந்த வாயைப் போக்கும் வாய்த் தூய்மிப்புப் பற்பசையினைப் பரிந்துரை செய்ய வேண்டும். மொத்தத்தில் ஒரு பல் மருத்துவர் ஒரு எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர்களுக்குப் பல் மருத்துவம் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/medicine/dental/serial/serial1/p14.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License