இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


15. ஆண் நீரிழிவு நோயாளிகளுக்கான சிகிச்சை

கடந்த பகுதியில் எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர்களுக்கான பல் சிகிச்சை குறித்துப் பார்த்தோம். இந்தப் பகுதியில் ஆண் நீரிழிவு (Diabetes mellitus) நோயாளிகள் பற்றியும், அவர்களுக்கான பல் மருத்துவச் சிகிச்சை பற்றியும் பார்க்கலாம்.

உலகில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளன. அவைகளில் சில உயிர்க் கொல்லி நோய்களாக இருக்கின்றன. அவற்றில், இருதய நோய், புற்றுநோய், கோவிட் 19, பக்கவாதம், நீண்ட கால சுவாச நோய்கள், அல்ஜைமர் நோய், நீரழிவு நோய் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

உலகில் 537 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர். வருகிற 2045 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 783 மில்லியனாக உயரக்கூடும் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 70 இலட்சம் பேர் நீரிழிவு நோயால் இறக்கின்றனர். ஒவ்வொரு ஐந்து நொடிக்கும் ஒரு நீரிழிவு நோயாளி இறக்கிறார்.

இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகமாகும் நீண்டகால வளர்சிதை மாற்ற நோயே நீரிழிவு நோய் எனப்படும். நீரிழிவு நோயால் இதயம், இரத்தக் குழாய்கள், கண்கள், சிறுநீரகம் மற்றும் நரம்புகளுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இன்னும் சுருக்கமாகச் சொன்னால், நீரிழிவு நோயை நிர்ணயித்துச் சொல்வதென்றால், உடலில் கணையச் சுரப்பு நீர் (Insulin) போதுமான அளவு சுரக்கவில்லை அல்லது தேவைக்கேற்பச் செயல்படவில்லை எனலாம்.

பற்களுக்கான குறள்கள்
*கவசமாய் காக்கும் கவனித்துப் போக்கும்
அவதாரம் மருத்துவ(ர்) அன்பு.

* பற்கள் உதவும் பயனுறுப்பு என்றுமே
கற்களல்ல பற்கள் கவனி.
- தஞ்சாவூர் ஹரணி


கணையச் சுரப்பு நீர், கணையத்தின் உயிரணுக்களின் வலியுணர்வு செல்களின் திட்டுகளில் சுரக்கிறது. ஒரு ஆரோக்கியமான ஒல்லியான நபருக்கு தினம் 18 முதல் 40 U எனும் அளவில் கணையச் சுரப்பு நீர் சுரக்கிறது. நீரிழிவு நோயில் முதன்மையாக நான்கு வகைகள் இருக்கின்றன.

1. நீரிழிவு நோய் வகை 1

2. நீரிழிவு நோய் வகை 2 - உடல் உழைப்பு இல்லாத பருமனானவர்களுக்கு இவ்வகை நோய் வரலாம்.

3. நீரிழிவு நோய் வகை 3 - கர்ப்பிணிப் பெண்களுக்கு வரும் நீரிழிவு நோய்

4. நீரிழிவு நோய் வகை 4 - இளம் வயதினரைத் தாக்கும் நீரிழிவு நோய் (Gestational Onset Diabetes of Young - MODY)

இவ்வகை நீரழிவு நோய்களைத் தவிர, சில துணை நீரழிவு நோய் வகைகளும் உள்ளன.

1. புதிதாகப் பிறந்த குழந்தைகள் சார்ந்த நீரிழிவு நோய் (Neonatal Diabetes)

2. அரிதான மரபியல் நரம்புச் சிதைவு நோய் சார்ந்த நீரிழிவு நோய் (Wolfram Syndrome)

3. தன்னியக்கப் பின்னடைவு மரபணுக் கோளாறு சார்ந்த நீரழிவு நோய் (Aalström Syndrome Diabetes)

4 இளம் பருவத்தில் தொடங்கி, மெதுவாக உடலை ஆக்கிரமிக்கும் நீரிழிவு நோய் (Latest Auto Immune Diabetes in Adults)

5. மூளையசதி நோய் அறிகுறிகளை கொண்ட மூன்றாம் வகை நீரிழிவு நோய்.

6. நுரையீரல் மற்றும் செரிமான அமைப்பைப் பாதிக்கும் நீர்மத் திசுவழற்சி (Cystic Fibrosis)

இதுவரை நீரிழிவு நோயின் அடிப்படை நிலைகளைப் பார்த்தோம். இனி, நீரிழிவு ஆண் நோயாளிகளுக்கான பல் மருத்துவத்தைப் பார்க்கலாம்.


ஆண்களில் மூன்று வகையினர் உள்ளனர்.

* நீரழிவு நோய் இல்லாத உடல் நலமுடைய ஆண்கள்

* நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஆண்கள்

* நீரிழிவு நோய்க்கு முந்திய நிலை ஆண்கள்

* நீரழிவு நோய் இல்லாத நிலைக்கும் நீரழிவு நோய் ஏற்பட்ட நிலைக்கும் இடையிலான நிலை ஆண்கள்

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பொதுவாக இரண்டு வழிகளில் பரிசோதனைக் கூடத்தில் சோதிக்கலாம்.

வெறும் வயிற்றில் காலையில் எழுந்தவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது எனப் பரிசோதனைக் கூடத்தில் சோதிக்கலாம். காலையில் சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் இரத்தச் சர்க்கரை அளவு 100 mg/dl (ஒரு டெசி லிட்டருக்கு இத்தனை மில்லி கிராம்கள்) இருக்க வேண்டும். காலை சிற்றுண்டி உண்ட பின்பு இரத்த சர்க்கரை அளவு 140 mg/dl முத்ல் 215 mg/dl அளவில் இருக்க வேண்டும். இரத்த சர்க்கரையின் அளவு தாண்டினால் அது நீரிழிவு நோய் என்று உறுதி செய்து விடலாம்.

. உணவு உண்ட பின் இரத்த சர்க்கரை 140 லிருந்து 180 mg/dl இருந்தால், பாதுகாப்பானது. நீரழிவு நோய் உங்கள் வாயில் சுரக்கும் உமிழ்நீரின் குணாதிசயங்களை மாற்றுகிறது. உமிழ்நீர் வாயின் ஈரத்தன்மையை பாதுகாக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவருக்கு வாய் உலர்ந்திருக்கும். உமிழ்நீர் பல் சொத்தையைத் தடுக்கிறது, பேக்டீரியா கிருமி வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. கிருமிகள் உருவாக்கும் அமிலங்களுடன் போராடுகிறது. நீரிழிவு நோயாளிகளின் உமிழ் நீரில் சர்க்கரை அதிகரித்திருக்கும். அந்தக் கூடுதல் சர்க்கரை வாயிலுள்ள கிருமிகளை வளர்க்கும் தன்மையுடையவை. அதனால், மென்மையான பிசுபிசுவென ஒட்டும் காரை உருவாகும். அந்தக் காரையினால் பற்சொத்தை தோன்றலாம்.


நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பல் பிரச்சனைகளைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.

* பல் கூச்சம் (Tooth Sensitivity)

* பல்லில் காரை படிதல் (Plaque Formation)

* ஈறுகளுக்குள் தொற்று (Bacterial Gum Infection)

* ஈறுகள் அழற்சி அல்லது ஈறுகள் வீக்கம் (Gingvitis)

* பற் சொத்தை (Tooth Cavities)

* வாய் துர்நாற்றம் (Halitosis)

* பற்குறித் தொற்று (Periodontitis)

* வாய் வறட்சி (Xerostomia)

* வாய்ப்புண்கள் (Oral Thrush)

* வாய் எரிச்சல் (Burning Mouth Syndrome)

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைப்பதுதான் பற்களின் நலத்தைப் பேணுவதற்கான அடிப்படைத் தகவல். இது தவிர, அதிகமாகத் தண்ணீர் பருகுதல், ஏராளமான காய்கறிகள் மற்றும் புரதச் சத்துகளை உணவில் சேர்த்தல், மாவுச் சத்து மற்றும் மாவுச்சத்து உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. நல்ல உணவுப் பழக்கம் உடற்பயிற்சி முக்கியம்.

நீரிழிவு நோயாளிகள் ஆண்டுக்கு இருமுறை பல் மருத்துவரை நேரில் சந்தித்து சோதனைகள் மேற்கொண்டு மருத்துவ ஆலோசனை பெறுதல் நலம். புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள், அதனை நிரந்தரமாக நிறுத்திவிடுவது நல்லது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பல் இடுக்குகளைச் சுத்தம் செய்ய உதவும் நூல் (Floss) கொண்டு, அதில் சேர்ந்திருக்கும் உணவுத் துணுக்குகளை அகற்ற வேண்டும்.

நீரிழிவு நோயுற்ற கணவன் மனைவிக்கு முத்தம் கொடுக்கலாமா?

எஸ் கௌரி மனோகரி, கோயம்புத்தூர்.

நீரழிவு நோயுடைய கணவர் மனைவிக்குக் கொடுக்கும் ஆங்கில முத்தம், மனைவிக்குப் பாதுகாப்பானதாக இருக்குமா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

வாய்வழி முத்தத்தால் நீரழிவு நோய் பரவாது. வாய் சுத்தம் இல்லாமல் தரப்படும் ஆங்கில முத்தம் பல நோய்த் தொற்றுகளை உருவாக்கும். ஆனால் விதிவிலக்காக, ஆங்கில முத்தங்கள் உமிழ் நீர் அளவை அதிகமாய் சுரக்கச் செய்யும். அதனால் வாய், பற்கள், ஈறுகளின் நலம் மேம்படும். வாயைத் துலக்கி விட்டு, வாய்க்கழுவிகளைக் (Mouth Wash) கொண்டு கொப்பளித்து விட்டு முன்னெச்சரிக்கை முத்தம் பரிமாறிக் கொள்வது மேலும் நலம் தரும்.



நீரிழிவு நோயாளிகளுக்கு பல் மருத்துவம் செய்யும் போது பல் மருத்துவர் சில முன்னெச்சரிக்கைகளைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

* பல் மருத்துவத்துக்கு வரும் நோயாளி 40 வயதுக்கு மேற்பட்டவராகவும், உடல் பருமனாகவும் இருப்பவராக இருந்தால், அவர் நீரிழிவு நோயாளியாக இருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

* நீரிழிவு நோயாளிக்குப் பல் மருத்துவம் மேற்கொள்ளும் முன் அவர் நீரிழிவு நோய்க்கு எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளைப் பற்றிக் கேட்டறிவது சிறப்பு. அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், சிகிச்சைக்கு வந்திருக்கும் நீரிழிவு நோயாளியின் நீரிழிவு சிறப்பு மருத்துவருடன் தொடர்பு கொண்டு தேவையான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.

* நோயாளியின் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கண்டறிந்து, அதற்கேற்றபடி பல் மருத்துவரின் செயல்பாடுகள் அமைந்தால், நீரிழிவு நோயின் நோயுற்ற தன்மையையும் (Morbitity) இறப்பு சதவீதத்தையும் (Mortality) வெகுவாகk குறைக்கலாம்.

* பல் மருத்துவம் செய்யவிருக்கும் நீரழிவு நோயாளிக்கு 70 மிகி / டெசிலி - 300 மிகி / டெசிலி சர்க்கரை அளவு இருந்தால் பல் சிகிச்சையினைத் தொடரலாம். சர்க்கரையின் அளவு மிகி / டெசிலிக்குக் கீழ் இருந்தால் கார்போஹைட்ரேட் கொடுத்து குறை இரத்த சர்க்கரையை (Hypoglycemia) தடுக்கலாம்.

* பல் சிகிச்சைக்குப் பின் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் (Antibiotics) பரிந்துரைப்பது சாலச் சிறந்தது. பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளுக்குப் பல் மருத்துவம் காலை உணவுக்கு பின் கணையச் சுரப்பு நீர் (Insulin) எடுத்துக் கொண்ட பின் செய்வது பாதுகாப்பானது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/medicine/dental/serial/serial1/p15.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License