இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


16. முதியோர் பல் மருத்துவம்

தற்போதைய உலக மக்கள் தொகை 820 கோடிக்கும் மேலாக இருக்கின்றது. இம்மக்கள் தொகையில் 10.3 விழுக்காடு முதியோர்கள் இருக்கின்றனர். 1974 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் உலக மக்கள் தொகையில் முதியவர்கள் 5.5 விழுக்காடு என்றிருந்தனர். இந்த விழுக்காடு வருகிற 2050 ஆம் ஆண்டில் 20.7 விழுக்காடாக அதிகரித்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அடிப்படையாக இரண்டு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.

* வாழ்நாள் காலம் அதிகரிப்பு

* கருவுறுதல் விகிதம் குறைவு.

பொதுவாக, உலகளவில் மனிதரின் வாழ்நாள் 67.2 ஆண்டுகளிலிருந்து 70.8 ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது. 2045 ஆம் ஆண்டில் மனிதரின் சராசரி வாழ்நாள் காலம் 77 வருடங்களாக அதிகரிக்கும். அப்போது வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை இளைஞர்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்கின்றன. வளரும் நாடுகளின் மக்கள் தொகையில் 25 விழுக்காடு முதியவர்களே. இந்தியாவின் மக்கள் தொகை 145 கோடியை எட்டியிருக்கிறது. இது உலக மக்கள் தொகையில் 17.78 விழுக்காடாகும். 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை 153 மில்லியன் என்று இருக்கிறது. இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் 347 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, இந்தியாவின் அனைத்து நோய்களும், முதியோர் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21-ஆம் நாளில் உலக மூத்த குடிமக்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த உலக மூத்த குடிமக்கள் நாள் 1991 ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உடல் நலக் குறைபாடு மற்றும் முதியவர்களைப் புறக்கணிப்பது போன்ற வயது அதிகமான பெரியவர்களைப் பாதிக்கும் பல்வேறு காரணிகள் பற்றிய பிரச்சனைகள் சார்ந்த விழிப்புணர்வுவை அதிகரிப்பதே இந்த நாளின் நோக்கமாக இருக்கிறது. இந்திய அரசு மூத்த குடிமக்கள் நலனுக்காக,

* ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB –PMJAY).

* முதியோர்களுக்கான தேசியக் கொள்கை 1999.

* பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நிர்வகிப்பு மற்றும் மேம்பாட்டுச் சட்டம் 2007.

* முதியவர்களுக்கான சுகாதார கவனிப்புக்கான தேசிய நிகழ்ச்சி நிரல் (NPHCE).

எனும் சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

பற்களுக்கான குரல்கள்
*ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
கற்றுக் கொடுத்த தமிழ் ஆசான்
ஈறு கெட்டு வந்தார்
பல் மருத்துவராகிய பழைய மாணவனிடம்.

* முப்பத்திரெண்டு பெற்று பெருவாழ்வு வாழ வைப்பார்
பல் மருத்துவர்
- ரிஷிவந்தியா


1979 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்களின் மூத்தக் குடிமக்களில் 60 விழுக்காட்டிற்கு மேல் முழுப் பற்களையும் இழந்த பொக்கை வாய் கொண்டவர்களாக இருந்தனர். 1989 ஆம் ஆண்டில், இந்நிலை குறைந்து 44 விழுக்காட்டினராக மாற்றம் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் இந்நிலை 20 விழுக்காடு எனும் அளவில் குறைந்திருக்கின்றது.

ஒருவரின் 32 பற்களும் உதிர்ந்து, முழுப்பற்களும் இல்லாத நிலையில், அவர் ‘பொக்கைவாய்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார். இதனை ஆங்கிலத்தில் Edentulism என்கின்றனர். ஆஸ்திரேலியாவில் முதியோர் பல் மருத்துவம் ‘பல் மருத்துவத்தின் சிறப்புத் தேவைகள்’ எனும் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது. இதனை ஆஸ்திரேலியப் பல் மருத்துவ மன்றம் அங்கீகரித்துள்ளது.

இங்கிலாந்தின் பொதுப் பல் மருத்துவ சபை 13 பிரிவுகளில் பல் மருத்துவம் செய்ய அங்கீகரிக்கிறது ஆனால், அதில் முதியோர் பல் மருத்துவத்தை தனிப் பிரிவாக அங்கீகரிக்கப்படவில்லை. அமெரிக்காவின் பல் மருத்துவச் சங்கமும், கனடாவின் ராயல் காலேஜ் ஆஃப் கனடாவும் முதியோர் பல் மருத்துவத்தைத் தனிப் பிரிவாக அங்கீகரிக்கவில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.


முதியோர்களுக்கு பொதுவாய் வரும் மருத்துவப் பிரச்சனைகளாக, கீழ்க்காணும் நோய்கள் இருக்கின்றன.

* முதுமை மறதி நோய் (Dementia)

* கீல்வாதம் (Arthritis)

* நோய் தணிப்பு பேணல் (Palliative Care)

* எலும்புப்புரை (Osteoporosis)

* முதுமை மூட்டழற்சி (Osteoarthritis)

* உடல் தளர்ச்சி நோய் / நடுக்குவாதம் (Parkinsons Disease)

* பெருந்தமனி தடிப்பு (Atherosclerosis)

* இருதய நோய் (Heart Disease)

* உயர் இரத்த அழுத்தம் (Hypertension)

* உயர் இரத்தக் கொழுப்பு (Cholesterol)

* பல் பிரச்சனைகள் (Dental Problems)

65 வயதுக்கு மேற்பட்டோரில் 23.7 விழுக்காடு முதியோருக்கு பல் சிதைவு, பல் விழுதல், பல் நிரப்பல் போன்றவை நடந்திருக்கின்றன.

வயதானால் நோய்கள் தானாகவே வரும் என்பது அறியாமை. எந்த வயதினர் ஆனாலும் நோய் தொற்று வராமல் தடுப்பது சிறப்புடையது. வாய் என்பது ஒட்டுமொத்த மனித உடலின் நலத்துக்கான கண்ணாடி. வாய் நலம் பாதுகாக்காதவர்களுக்கு நோய்கள் அவ்வப்போது வந்து தாக்கும்.

வயதான முதியவர்களுக்கு,

* சர்க்கரை சார்ந்த உணவுகள் எடுத்துக் கொள்வது.

* 24 மணி நேரமும் ஏதாவது தின்று கொண்டே இருப்பது.

* பற்சுத்தம் பேணாமை.

* எச்சில் சுரப்பு - குறைபாடும் அதன் செயல்பாடும்.

* ஈறு சுருக்கம் (Gingival Recession)

என்று பல பல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

வயதானவர்கள் முறுக்கு, சீடை சாப்பிடலாமா?

எம். பி. சிவானந்த், துடியலூர்.

எனக்கு எழுபது வயதாகிறது. தீபாவளிப் பலகாரங்களில் எனக்கு முறுக்கு, சீடை, தட்டை மிகவும் பிடிக்கும். இந்த வயதில் அவற்றைச் சாப்பிடலாமா? அதைச் சாப்பிட நான் என்ன செய்ய வேண்டும்?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

வயதான காலத்தில் பற்களுக்குப் பாதிப்பில்லாமல் சாப்பிடலாம். அச்சு முறுக்கு கொஞ்சம் மென்மையாக இருக்கும். அதனைத் தண்ணீர் அல்லது பாலில் நனைத்துச் சாப்பிடலாம். கடினமான முறுக்கு போன்ற பலகாரங்களைத் தவிர்க்கலாம். தவிர்க்க வேண்டிய பலகாரங்களைச் சாப்பிட வேண்டுமென்று அடம் பிடிப்பவர்கள், கிராமங்களில் முன்பு வெற்றிலை போடும் வயதானவர்கள், வெற்றிலை, பாக்கு இடிக்கச் சிறு உரல் வைத்திருப்பார்கள். அந்த உரலில் தாங்கள் விரும்பும் முறுக்கு, சீடைகளை போட்டு இடித்து மாவாக்கிச் சாப்பிடுங்கள். பற்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது.



உலகம் முழுவதும் 2024 ஆம் ஆண்டில், 40 லட்சம் முதியவர்கள் முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருக்கும் முதியவர்களில் 7.4% பேர் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2050 ஆம் ஆண்டில் 134 லட்சம் என்று மறதி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். இந்தியாவிl மாநிலத்துக்கு மாநிலம் மறதி நோயாளிகளின் எண்ணிக்கை மாறுபடும். ஆண்களை விடப் பெண்கள் அதிக அளவில் மறதி நோயால் பாதிக்கப்படுகின்றனர். நகர்புறங்களை விடக் கிராமப்புறங்களில் மறதி நோய் அதிகமாக இருக்கிறது. கல்வியறிவு குறைந்தவரை மறதி நோய் அதிகம் பாதிக்கிறது. சரிவிகித சத்துணவு உண்ணாதோர், கட்டுபடுத்தாத இதய நோயாளிகள், காற்று மாசால் பாதிக்கப்பட்டோர் போன்றவர்கள் மறதி நோய்க்கு அதிகம் பாதிப்படைகின்றனர்.

முதியோர்க்கான பல் மருத்துவத்தில் கீழ்க்கண்ட செயல்முறைகளை வரிசைபடுத்தலாம்.

* நோய்க்குறி அறிதல் (Diagnosis)

· நோய்த் தடுப்பு (Prevention)

· நோய் நிர்வகிப்பு (Management)

· நோய் சிகிச்சை (Treatment)

· நோய் கண்காணிப்பு (Health Monitoring)

முதியோர்களுக்கான பல் மருத்துவத்தை முதியோர் பல் இயல் (Gerodontology) எனக் குறிப்பிடுவர்.

முதியோர் பல் மருத்துவம் குறித்து அடுத்த பகுதியில் முழுமையாக அறிவோம்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/medicine/dental/serial/serial1/p16.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License