இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


2. உதடுகள் அறிவோம்

பல் மருத்துவத்தின் சிறப்பைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பாக, மனிதர்களின் தலை மற்றும் வாய் பற்றி அறிந்து கொள்வது நல்லது.

பொதுவாக, மனிதர்களின் தலையானது, 6 முதல் 7 அங்குலம் அகலமும், 8 முதல் 9 அங்குலம் நீளமும் கொண்டிருக்கும். அதாவது, மனிதத் தலையின் சராசரிச் சுற்றளவு 21 முதல் 23 அங்குலம் எனும் அளவில் இருக்கும். மனிதர்களில் ஆண் தலையின் சுற்றளவு 57 செ.மீ என்றும், பெண் தலையின் சுற்றளவு 55 செ.மீ என்றும் இருக்கும். தலையின் அளவு நாட்டுக்கு நாடு 5 செ.மீ எனும் அளவில் சிறிது கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.

தலையின் முன்பகுதியில் இடம் பெற்றிருக்கும் வாய் திறப்பின் அளவானது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடுகிறது. ஆண்களின் வாய் திறப்பு 51.3 மி.மீ (5.13செமீ) என்றும், பெண்களின் வாய் திறப்பு 44.3 மிமீ (4.43 செமீ) என்றும் வேறுபடுகிறது. வயது அதிகரிக்கும் நிலையில் வாயின் நீளம் சுருங்கத் தொடங்குகிறது.

வாய் வழிக் குழிவு (Oral Cavity) 10 செ.மீ நீளம், குரல்வளை (Pharynx) 5 செ.மீ நீளம், உணவுக்குழாய் (Esophagus) 25 செ.மீ நீளம் என்று சராசரியாக இருக்கிறது. வாயின் நீள அகலத்தை வரைகோல் வைத்தோ, அளவி வைத்தோக் கையால் அளக்கலாம். தற்போது வாயின் நீளத்தை அளக்க 3டி எலக்ட்ரோ மேக்னட்டிக் ஆர்டிக்ளோகிராபி எனும் புதியக் கருவி வந்துவிட்டது.

வாய் என்றால், உதடுகள் (Libs), தலைவாயில் (Vestibule) எனும் வாய்க்குழிவு, ஈறுகள் (Gums), பற்கள் (Teeth), வல்லண்ணம் (Hardpalate) மற்றும் மெல்லண்ணம் (Staphyloplasty), நாக்கு (Tongue), உமிழ் நீர் சுரப்பிகள் (Saliva) எனும் உறுப்புகள் உள்ளடங்கியதாகக் கருதப்படுகிறது.

ஒட்டுமொத்த வாயின் உட்பகுதியை உள்வாய் (அ) வாயறை (அ) வாய்க்குழி (Buccal Cavity) என்பர். இதனை மருத்துவத்தில் கன்னப்பொந்து என்று சொல்கின்றனர்.

வாய் என்பது உணவு செல்லும் பாதையின் முதல் பகுதியாக இருக்கிறது. இது, தகவல் தொடர்பின் ஒரு அங்கமாகவும் அமைந்திருக்கிறது. மனிதர்களின் பேச்சில் உள்ள ஒலியின் வரம்பை உருவாக்க நாக்கு, உதடுகள், தாடை என்று மூன்றும் இணைந்து செயல்படுகின்றன.

பற்களுக்கான குறள்கள்
* எல்லா பல்லும் பல்லல்ல தினமிருவேளை
துலக்கும் பல்லே அழகுப்பல்.

* மொத்த வாழ்நாளில் முப்பத்தியெட்டு நாட்கள்
முத்துப்பல் துலக்கச் செலவு.
- தேஜஸ் சுப்பு என்கிற கனலி

வாயின் முதல் உறுப்பான உதடுகளை எடுத்துக் கொள்வோம். உதடுகளை அதரம் அல்லது இதழ்கள் என்றும் தமிழ் மொழி குறிப்பிடுகிறது.

உதடுகள் என்றதும் சிலருக்கு ‘செல்லமே’ திரைப்படத்தில் வரும்

‘ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் இரண்டும்
கலக்கட்டுமே
ஆனந்தப் போர்க்களம் இங்கே
தொடங்கட்டுமே’

என்கிற பாடல் நினைவுக்கு வரலாம்.

சிலருக்கு உதடுகள் என்றவுடன் ஆங்கிலத் திரைப்படங்களில் காட்டப்படும் முத்தம் கொடுக்கப் பயன்படும் முதல் உறுப்பு என்று தோன்றும்.

திரைப்படங்களைத் தவிர்த்து, அறிவியல் வழியில் நாம் உதடுகளைப் பற்றிப் பார்க்கலாம்...


வாய்ப் பகுதியின் வெளியில் தெரியும் உடற்பகுதியான உதடுகளை மேல் உதடு, கீழ் உதடு என்று இரண்டாகப் பிரிக்கலாம். உதடுகள் ஒரு தொட்டறிவு உணர்வு கொண்ட உறுப்பு. ஒரு காதலி, காதலனை உதடுகளால் முத்தமிடும் போது, காமம் வெளிப்படும். ஒரு தாய், உதடுகளால் தன் குழந்தையை முத்தமிடும் போது தாய்மை உணர்வு பொங்கும். ஒரு செவிலியர் நங்கை, நோயாளியின் நெற்றியில் முத்தமிடும் போது மனிதநேயம் வெளிப்படும். ஒரு இந்து அல்லது முஸ்லிம் சகோதரனைக் கட்டியணைத்து முத்தமிடும் போது சகோதரத்துவம் வெளிப்படும். உதடுகள் தரும் முத்தம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வை வெளிப்படுத்துகிறது.

உணவுக்குழாயின் நுழைவாயிலாக அமைந்திருக்கும் வாயின் முதற்பகுதியான உதடுகள் திறப்பின் மூலம் மனிதனின் உடலுக்குள் செல்லும் உணவு, வயிறுப்பகுதியில் செரிமானம் செய்யப்பெற்று, உணவின் கழிவு மலக்குடலின் முடிவுப் பகுதியான குதம் எனப்படும் மலவாயில் வழியாக வெளியேறுகிறது.

உதடுகளும், மலவாயிலும் ஒரே வகை திசுக்களால் ஆனவை. உதடுகள் மாற்றியமைக்கப்பட்ட சளி சவ்வுக் கலவை. அது முடிகள் இல்லாத நாளம்சார் கெரட்டின் இல்லாத பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்ட தட்டுத்தசை எனும் தசையாகும். உதடுகள் 3.5 அணு அடுக்கு தடிமன் கொண்டவை. முகத் தோலோ 16 அணு அடுக்கு தடிமம் கொண்டது. ஆகவே உதடுகள் முகத்தை விட மென்மையானவை.

பொதுவாக, உதடுகள் வெளிர் சிகப்பு நிறமாக இருக்கும். சிலருக்குக் கருப்பு நிறமாக இருக்கும். கருப்பு நிறமாய் உதடுகள் இருந்தால், அவர்களுக்கு வைட்டமின் குறைபாடு இருப்பதாகப் பொருள். சிலருக்கு நாவல் நிற உதடுகள் இருக்கும். புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தால், உதடுகள் நிக்கோட்டின் படிந்து அதிகமான கருப்பு நிறமாகி விடுகிறது.

உதடுகளில் ஏற்படும் நிறமாற்றத்தைக் கொண்டு, உடலில் ஏற்பட்டுள்ள உடல் நலக் குறைபாடுகளை, சில மாற்றங்களைக் கண்டறிய முடியும். உதாரணமாக,


வெளுத்த உதடுகள் - இரத்தசோகை பாதிப்பு.

வீங்கின உதடுகள் - ஒவ்வாமை, விபத்து காயம், நோய் தொற்று மிதமிஞ்சிய சூரிய வெளிச்சம்.

புண்கள் உள்ள உதடுகள் - அமில உணவு அதிகம் உட்கொள்ளுதல், பற்களால் உதடு கடித்தல்.

உதட்டின் வெடிப்புகள் - வெட்ப சீதோஷ்ண நிலை, அடிக்கடி உதட்டை நக்குதல்.

உதட்டில் நிறமின்மை மற்றும் பல அசாதாரண நிறமிகள் - இரும்பு சத்துக் குறைபாடு, தோல் நோய்.

உலர்ந்த உதடுகள் - ஒவ்வாமை, பூஞ்சைத் தொற்று

என்று கண்டறிய முடியும்.

சிலருக்கு மேலுதடும், கீழுதடும் சமமான அளவில் இருக்கும். ஆனால், சிலருக்கு இரு உதடுகளின் அளவும் மாறுபட்டிருக்கும்.

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி என்பவரின் கீழ் உதடு கனத்திருக்கும். அவரின் கீழ் உதடு சிறிது பெரிதாகத் தெரிவதால், அவரது உதடுகள் பார்ப்பவருக்கு மிகக் கவர்ச்சியாகத் தெரிகிறது.


பொதுவாக, உதடுகளில் மேலுதடும் கீழுதடும் 1:1.6 எனும் அளவில் இருக்கும். இந்த உதடுகளுக்கான விகிதத்தைச் சொன்னவர் உலகப்புகழ் பெற்ற ஓவியர் லியனர்டோ டாவின்ஸி.

மேலுதடானது, சிறிது முன்பக்கம் நீண்டிருத்தல் (சற்றே துருத்தியிருத்தல்) அழகாக இருக்கும். அசாதாரணமாய், உதடுகள் நீண்டு கொண்டிருந்தால், வாத்து உதடுகள் என்று கிண்டல் செய்வற்குள்ளாகி விடும்.

உதடுகளை இலத்தீன் மொழியில் லேபியா ஓரிஸ் (Labia Oris) என்று சொல்வார்கள். உதடுகள் பற்றிய உடற் கூறியலைப் பற்றிப் பார்க்கலாம்.

உதடுகள் மூன்று வகை உள்ளுறுப்புகளால் ஆனவை.

1. தமனி (சுத்த இரத்தம்) – கீழ்ப்புற உதட்டுத் தமனி, மேல்புற உதட்டுத் தமனி.

2. சிரை (அசுத்த இரத்தம்) - கீழ்ப்புற உதட்டுச் சிரை, மேல்புற உதட்டுச் சிரை.

3. நரம்பு - முன்புற நரம்பு மற்றும் பரிதிபடி நரம்பு (Frontal Nerve and Infra Orbital Nerve).

மனித இன வேறுபாடுகளுக்கேற்ப உதடுகள் மாற்றம் கொண்டதாகவும் இருக்கின்றன.

கருப்பின மக்களின் இரு உதடுகளும் அசாதாரணமாக வீங்கித் தடித்திருக்கின்றன.


சுர்மா கறுப்பின ஆதிவாசிகள், தங்கள் கீழ் உதட்டை மிகவும் பெரியதாக்கி, அதில் வட்ட வடிவத் தகட்டைப் பொருத்திக் கொள்கிறார்கள். முர்ஸி இனப் பெண்கள், இரு உதடுகளும் கொள்ளாத அளவு ஒரு பெரிய வட்டத் தட்டைப் பொருத்திக் கொள்கிறார்கள்.


ஆன்ட்ரியா இவனோவா என்கிற பல்கேரிய உடற்பயிற்சி வீராங்கனைக்கு ராட்சச உதடுகள் உள்ளன. அவர் அதிக அளவில் பணம் செலவழித்து 26 முறை உதடுகளைப் பெரியதாக்கும் ஊசி மருந்தினைப் பயன்படுத்தி, உலகின் மிகப்பெரிய உதடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆன்ட்ரியாவை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்தனர். அவரது குடும்பத்தினர், அவரைத் தங்கள் குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைத்து விட்டனர்.

தங்கள் உதடுகளைப் பற்றி அதிருப்தி கொள்பவர்கள், சிலோபிளாஸ்டி (Cheiloplasty) எனும் அறுவை சிகிச்சை செய்து, தங்களது விருப்பப்படி உதடுகளை மாற்றிக் கொள்கின்றனர். இந்தியாவில், இது போன்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ள 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.

உதடுகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் உடல் நலத்திற்குப் பாதிப்பாகவே அமைகிறது. சில வேளைகளில், பிளாஸ்டிக் சர்ஜரி எனும் அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்து, பல விபரீத விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

முக அழகு கேள்வி பதில்
ஆர். செல்வராணி:

அழகு நிலையங்களுக்குச் சென்று பற்களை செயற்கையாய் வெண்மைப்படுத்திக் கொள்வது சரியா?
மருத்துவர்கள் நிலாமகன் மற்றும் பஹிமா:

பல் மருத்துவமனையில் கற்றுத் தேர்ந்த பல் மருத்துவர் தகுந்த கருவிகளுடனும், முன்னெச்சரிக்கையுடனும் பற்களை ஆரோக்கியமான முறையில் பளிச்சிட வைக்கலாம். அழகு நிலையங்களில் பற்களை வெண்மைப் படுத்திக் கொள்வதில், சில வேளைகளில், ஈறுகளில் பாதிப்பும் பற்கூச்சமும் ஏற்படும். பொதுவாக, மருத்துவர்கள் ஆலோசனை இன்றி செயல்படுவது தவறானதுதான்.



உதடுகளை அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல் மாற்றி அமைக்க முடியும். சில வகை ஒப்பனைகளால் உதடுகளின் அளவில் மாயத்தோற்றத்தை உருவாக்கி கொள்ள முடியும். சில வகை முகப் பயிற்சிகளின் வழியாகவும், உதடுகளின் அளவை மாற்றிக் கொள்ள முடியும்.

ஒருவரின் பல்வரிசை அமைப்பைக் கொண்டும், உதடுகள் அழகாகவோ அல்லது அழகற்றதாகவோத் தெரியலாம். உதாரணமாக, தெற்றுப்பல் இருந்தால் உதடுகள் ஒட்டகச்சிவிங்கி போலத் துருத்தி அழகற்றதாகத் தோன்றும்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/medicine/dental/serial/serial1/p2.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License