இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


25. பல் மருத்துவத்தில் ரெய்கி மருத்துவம் தேவையா?

ரெய்கி என்கிற வார்த்தையைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ரெய்கி என்பது ஒரு மாற்று மருத்துவம். அது உடல் வழியிலான, உணர்வு வழியிலான, மன வழியிலான நோய்களைக் குணப்படுத்துகிறது என்கின்றனர். ஜப்பானியப் புத்தத் துறவியான மிகாவோ உசாய் (1865-1926) என்பவர் முதன் முதலில் ரெய்கியை உருவாக்கினார். ரெய் (Rei) என்றால் உலகம் கி (Ki) என்றால் உயிர்களின் சக்தி. மனித உயிர்கள் உலகம் மற்றும் இயற்கை சக்திகளைச் சார்ந்து வாழ்வதாகக் கூறுகிறது. ரெய்கி ஒரு ஆற்றல் சார்ந்த குணப்படுத்தும் மருத்துவ முறை என்கின்றனர். மிகாவோ உசாய் தன் வாழ்நாளில் 2000 பேருக்கு ரெய்கியை கற்றுக் கொடுத்தார்.

ரெய்கி மருத்துவர் மருத்துவம் பார்க்கும் போது மந்திரக்கோல் வைத்திருப்பாரா? வினோதமான மொழியில் மநதிரங்கள் உச்சரிப்பாரா? என்றால், இரண்டும் இல்லை. ரெய்கி என்கிற என்கிற கூடுதல் மருத்துவச் செய்முறையில் ரெய்கி மருத்துவர் நோயாளியின் உடலை மெதுவாகத் தொட்டு குணப்படுத்துதலை விரைவுப்படுத்துவார். தொடுதலின் வழியிலான இம்முறை, ஒரு தாய் தன் குழந்தைகளைத் தொட்டுத் தூக்குவது, ஒரு குழந்தை தன் தாயைத் தொட்டுக் கொள்வது, காதலர்கள் ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வது, மிருகங்கள் ஒன்றுக்கு ஒன்று மூக்கால் உரசி கொள்வது, ஆங்கில முறைப்படி மக்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொள்வது, தொடுதலின் மகத்துவமான சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன.

ரெய்கி மருத்துவர் தன் உடல் ஆற்றலை நோயாளிக்கு இடமாற்றம் செய்கிறார். ரெய்கி மருத்துவரின் கைகள் நோயாளியின் பல உடல் பாகங்களுக்கு ஒரு படவருடி (Scanner) போலப் பயணிக்கின்றன. ரெய்கி மருத்துவரின் ஆற்றல் நோயாளி இயற்கையாக குணமாவதை ஊக்குவிக்கிறது. ரெய்கி மருத்துவம் உடலின் சமநிலையைப் பத்திரப்படுத்துகிறது. ரெய்கி மருத்துவம், உடல் ஆற்றல் தங்கு தடை இல்லாமல் நதி போல் ஓட ஊக்குவிக்கிறது.

பல் கவிதை
* நீ சிரிக்கும் போது
லட்சம் பூக்கள் மலர்கின்றன
நிறுத்தி விடாதே,
காதல் தேனீக்களின்
தேன் நயாகரா
தொடர்ந்து கொட்டட்டும்
- முகமது பாட்ஷா


ரெய்கி மருத்துவம் கீழ்க்காணும் நோய்களை நீக்கி நலம் பெறச் செய்யும் என்று சொல்லப்படுகிறது.

1. மாரடைப்பு (Heart Attack)

2. உள் மூலம், வெளி மூலம், பவுத்திர மூலம் (Hemorrhoids)

3. விக்கல் (Hiccups)

4. மூக்கில் இரத்தம் ஒழுகுதல் (Nose Bleed)

5. நுரையீரல் காற்றுக்குமிழி அடைப்பு நோய் (Emphysema)

6. பராகச் சுரப்பி பிரச்சனைகள் (Prostate Problems)

7. விரி சுருள் சிரை நோய் (Varicose Problems)

ரெய்கி மருத்துவம் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்துகிறது என்பதற்கு அறிவியல் முறையிலான ஆதாரங்கள் உண்டா? என்று கேட்டால், இல்லை.

ரெய்கி மருத்துவம் போன்றே, உலகில் பல மாற்று மருத்துவ முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை;

1. குத்தூசி மருத்துவம் (Accupuncture)

2. ஹோமியோபதி (Homeopathy)

3. ஆயுர்வேதம் (Ayurvedic)

4. சித்த மருத்துவம் (Siddha)

5. மலர் மருத்துவம் (Flower Medicine)

6. இயற்கை மருத்துவம் (Naturopathy)

7. கைநுட்பச் சிகிட்சை (Manual Theraphy)

8. வர்ம மருத்துவ முறை (Chiripractic)

9. மூலிகை மருத்துவம் (Herbal Medicine)

10. உடலைப் பிடித்து விடுதல் (Massage)

11. டாய் சி சீன உடற்பயிற்சி மருத்துவம்.

மேற்காணும் அலோபதி தவிர்த்த மாற்று மருத்துவ முறைகளில் ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் போன்ற மருத்துவ முறைகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டு, மருத்துவ முறையினைப் பொதுமக்களிடையேப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. மற்ற மருத்துவங்கள், அனுபவத்தின் வழியில், மக்களின் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன.

இம்மாற்று மருத்துவ முறையினை புதுயுக மருத்துவம், பாவனை மருத்துவம், வழக்கத்துக்கு மாறான மருத்துவம், முழுமையான மருத்துவம், இழை விளிம்பு மருத்துவம், மரபுசாரா மருத்துவம் என்று பல பெயர்களில் அழைக்கின்றனர்.


சரி மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றாக இருக்கும் ரெய்கி மருத்துவத்துக்கும் பல் மருத்துவத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்துப் பார்ப்போம்.

இந்திய மருத்துவக் குழு ரெய்கி மருத்துவத்தை ஒரு முழுமையான மருத்துவச் சிகிச்சையாக அங்கீகரிக்கவில்லை. ரெய்கி மருத்துவம் ஒரு ‘மருந்து போலி விளைவு’ என்றேக் கருதப்படுகிறது. ரெய்கி என்பது, பொதுவாக ஒரு பணக்கார மருத்துவம் என்றேச் சொல்லலாம். இம்மருத்துவ முறையில் தனி அமர்வுக்கு அதிகக் கட்டணமும் கூட்டு அமர்வுக்கு குறைவான கட்டணமும் பெறப்படுகிறது.

ரெய்கி மருத்துவ முறையினை,

1. மரபு வழியிலான ஜப்பானியர் ரெய்கி

2. மேற்கத்திய முறை ரெய்கி

என்று இரண்டாக வகைப்படுத்துகின்றனர்.

ரெய்கியை ஒரு குணப்படுத்தும் ஆற்றல் முறையாக பல் மருத்துவத்தில், பல் மருத்துவத்துக்கு முன்னும், மருத்துவத்தின் போதும் மருத்துவத்துக்குப் பின்னும் பயன்படுத்தப்படுகிறது.

ரெய்கி பல் மருத்துவத்தில் வலி மற்றும் பதட்டத்தை தணிக்க, நலமடைவதை விரைவுப்படுத்த, ஈறு நோய்களை மட்டுப்படுத்த, குளிர் புண்களை துரத்தியடிக்க உதவுகிறது. பல் மருத்துவத்தில் ரெய்கி மன அமைதி, ஆறுதலை வழங்குவதாகப் பல் நோயாளிகள் நம்புகின்றனர்.

புத்தகம் எழுதுவது கூடுதல் தகுதியா?

பி. அகமது ஷரீப், மதுரை.

ஒரு பல் மருத்துவர் மருத்துவம் பற்றி தமிழில் புத்தகம் எழுதுவது, அவருக்கான கூடுதல் தகுதியா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

தான் கற்றுக் கொண்டதை பிறருக்குச் சொல்லித் தருவதும், அதனை நூலாக்கம் செய்து தருவதும் மிகச் சிறந்த பணியாகும். அவர் கல்வி நிறுவனத்திலும், அனுபவத்திலும் கற்றுக் கொண்டதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதையும், நூலாக வெளியிடுவதையும், அவருக்கான கூடுதல் தகுதி என்று நினைப்பதை விட, நமக்கான கூடுதல் உதவி என்றேச் சொல்லலாம். பொதுவாக, மருத்துவம் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆங்கில மொழியிலேயே அதிக அளவில் இருக்கின்றன. அதனைத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துப் புத்தகமாகத் தருவதும், தன்னுடைய பணி அனுபவங்களுடன் தொழில்நுட்பங்களைப் புதிய புத்தகமாகத் தருவதும் வரவேற்கத்தக்கதே. கதை, கவிதை எழுதுவதை விட, மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான நூல்கள் எழுதுவது மிகக் கடினமானது. மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான புத்தகம் எழுதுவதற்கு, தான் கற்றுக் கொண்டதைக் கடந்து, கூடுதல் தகவல்களுக்கான தேடல்கள், மொழியறிவு, எளிய முறையில் விளக்குதல் என்று எத்தனையோ திறன்களும் தேவையாக இருக்கிறது. அதனைச் செய்வது உண்மையில் அவருக்கான கூடுதல் தகுதி என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமிருக்க முடியாது.



இந்தியாவில் ரெய்கி மருத்துவம் அங்கீகரிக்கப்படாத நிலையில், அதனைப் பல் மருத்துவத்தில் பயன்படுத்துவது சரியா? என்று கேள்வி எழலாம்.

உலகில் குறைந்தது பத்து லட்சம் ரெய்கி மருத்துவர்கள் வரை உள்ளனர். ரெய்கி பல் மருத்துவம், கூட்டாண்மை நிறுவனமாகச் (Corporate) செயல்படும் பல் மருத்துவமனைகளில் ரெய்கி மருத்துவ முறை குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது.

ரெய்கி மருத்துவம் மட்டுமில்லாது, நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் எந்தவொரு முறையையும் பல் மருத்துவத்தில் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. இருப்பினும், பல் மருத்துவத்தினை முறையாகச் செய்திடுவது இங்கு அவசியமாகிறது. உதாரணமாக, நோயாளியிடம் அன்புடன் பேசி, அவரின் கருத்தறிந்து செயல்படல் அவரின் நம்பிக்கைக்கு ஆதாரமாக இருக்கும்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/medicine/dental/serial/serial1/p25.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License