இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


26. பல் மருத்துவக் காப்பீடு

இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் பல் சொத்தையாலும், 85 சதவீதம் பேர் ஈறு நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பற்சொத்தையும், ஈறு நோய்களும் வராமல் தடுக்க, பல் மருத்துவம் உதவுகிறது. அதற்கு அரசு அமைப்புகளும் தனியார் அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டுவது அவசியமாகிறது.

இந்திய மக்களிடையே பல் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு மிகமிகக் குறைவு. இந்திய மக்களில் 23.96 சதவீதம் பேர் மட்டுமே ஆண்டுதோறும் பல் மருத்துவரிடம் சென்று, தங்களது பற்கள் குறித்து நுண்ணாய்வு (Check Up) செய்து கொள்கின்றனர். தென்னிந்தியாவில் 30.02 சதவீதம் பேர் பற்கள் குறித்து நுண்ணாய்வு செய்து கொள்கின்றனர்.

இந்திய மக்களிடையேப் பல் மருத்துவம் தொடர்புடைய விழிப்புணர்ச்சி ஏன் குறைவாக இருக்கிறது?

* ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று, பற்கள் தொடர்பாக நுண்ணாய்வு செய்து கொள்வதற்கான செலவு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, கிராமத்து மக்களின் கீழ்நிலையிலான பொருளாதார நிலை பல் மருத்துவச் செலவிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

* பொருளாதாரத்தில் வசதியுடையவர்களிடம், பற்களைப் பாதுகாக்க, ஆறு மாதத்துக்கு ஒரு முறை பல் மருத்துவமனைக்குச் சென்று நுண்ணாய்வு செய்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வமும் விழிப்புணர்ச்சியும் இல்லை.

* தங்கள் உடல் நிலையில் கவனம் கொள்பவர்கள், பல்லும் உடலின் ஒரு பகுதிதான் என்று கருதுவதில்லை. மேலும், பல் வலி வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையில் இருக்கின்றனர்.

* பல்லிற்கு இயற்கை வைத்தியங்களில் பார்த்துச் சரி செய்துவிடலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

* மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பல் மருத்துவர்கள் இல்லை.

* நகர்ப்பகுதிகளில் பல் மருத்துவமனைகள் அதிக அளவில் இருக்கின்றன. கிராமப்பகுதிகளில் பல் மருத்துவமனைகள் இல்லை.

* அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது.

* பற்கள் நுண்ணாய்வு செய்வதற்கான பல் மருத்துவர்களின் கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது.

என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

பல் கவிதை
* சோளிகளை குலுக்கிப் போடாதே
மீண்டும் மீண்டும்
தாயங்களை உருவாக்கி பரிகசிக்காதே
எத்தனை முறை நான்
பரமபத பாம்புகளால் கடிபட்டு
அடிவாரம் வீழ்வது?
- ஜன்னத்துல் பிர்தௌஸ்


இந்தியாவில் உடல் நலம் காக்க விரும்பும் பலரும், பொதுவான உடல் நலம் காப்பதில் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், பல் மருத்துவத்துக்குச் சிறிது கூட ஆர்வம் காட்டுவதில்லை. பல் வலி வந்தால், அந்தப் பல்லை அகற்றிவிட்டால் போதும் என்கிற மனநிலையேப் பலரிடமும் இருக்கிறது. பல்லைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க எவரும் முன் வருவதில்லை. குறிப்பாக, பல் மருத்துவச் செலவுகள் அதிகம் என்கிற எண்ணமும் பலரிடம் இருக்கிறது. பல் மருத்துவத்தில் ஒரு நோயாளிக்குத் தேவையான சிகிச்சை, அதற்கான அமர்வு எண்ணிக்கை போன்ற சில காரணிகளே மருத்துவச் செலவினைத் தீர்மானிக்கின்றன.

பொதுவான உடல் நலத்திற்குக் காப்பீடு செய்து கொள்வது போன்று, பல் மருத்துவத்திற்கும் காப்பீடு செய்து கொள்ள முடியும் என்பதைப் பலரும் அறிந்திருக்கவில்லை.

பல் மருத்துவம் செய்து கொள்வதற்கான காப்பீடு எடுத்துக் கொள்ளும் முன்பு, அந்தக் காப்பீடு பல் மருத்துவ செலவை முழுமையாக ஏற்றுக் கொள்ளுமா? என்பதை முதலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulaory and Development Authority of India - IRDAI) 2018 ஆம் ஆண்டு விதிமுறைகளில், பல் மருத்துவக் காப்பீடு குறித்து பல்வேறு தகவல்களைக் குறிப்பிடுகிறது. அதிலிருந்து நமக்குச் சரியான காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

பல் மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகளில்,

* பல் மருத்துவத்தின் பொதுவான செலவுகள்

* பல் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான செலவுகள்

* பல் மருத்துவ மருந்துகளுக்கான செலவுகள்

* மற்றும் பிற செலவுகள்

வழங்கப்படுவதற்கான காப்பீட்டுத் திட்டத்தையேத் தேர்வு செய்திட வேண்டும்.

இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), பல் மருத்துவக் காப்பீட்டில் நம்பிக்கையூட்டப் பல பரிந்துரைகளை காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிறது.

இங்கு நாம் இந்தியாவில் செயல்பட்டு வரும் சில காப்பீட்டு நிறுவனங்கள் பல் மருத்துவத்திற்கு வழங்கும் காப்பீடு குறித்தத் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


1. ஐசிஐசிஐ புரூடென்சியல் நிறுவன உடல் நலச் சேமிப்புக் கொள்கை (ICICI Prudential Health Saver Policy)

பல் மருத்துவம் சார்ந்த அனைத்து செலவுகளையும் காப்பீடு செய்கிறது.

2. தி நியூ இண்டியா மருத்துவ உரிமைக் கோரல் கொள்கை (New India Mediclaim Policy)

இந்திய அரசுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தத் திட்டம் மூலம் இரண்டு வருடங்களுக்கு மருத்துவ உரிமை வேண்டப்படாத நிலையில் பல ல்மருத்துவ செலவுக்கு திட்டம் A மூலம் ரூபார் 5000, திட்டம் B மூலம் 10000 வழங்கும் திட்டத்தைக் கொண்டிருக்கிறது.

3. தி ஹெச்டிஎப்சி எர்கோ உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் (HDFC ERGO Maxima Health Insurance Plan)

அழகு சாராத பல் மருத்துவச் செலவுகளை இந்தத் திட்டம் வழங்குகிறது.

4. டிஜிட் உடல்நலக் கூடுதல் காப்பீடு (Digit Health Care Plus Policy)

இந்தியப் பல் மருத்துவக் குழுவில் பதிவு செய்யப் பெற்ற மருத்துவரிடம் செய்யும் அழகு சாராத பல் மருத்துவ செலவுகளை இத்திட்டம் வழங்குகிறது.

5. பஜாஜ் அலையான்ஸ் வரி ஆதாய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Bajaj Allianz Tax Gain Health Plan)

பல் அறுவை சிகிச்சை மற்றும் வெளி மருத்துவ செலவுகளை இத்திட்டம் அனுமதிக்கிறது. செயற்கைப் பல் கட்டுதல் மற்றும் விபத்து சார்ந்த பல் மருத்துவம் இதன் கீழ் வராது.

6. அப்போலோ முனிச் மேக்ஸிமா திட்டம் (Apollo Munich Maxima Plan)

விபத்து சாராத, முக அலங்கார பல் மருத்துவச் செலவு வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் மட்டும் தரக்கூடியது.


7. அப்போலா முனிச் எளிய உடல்நலக் கட்டணம் உடல் நலக் கொள்கை (Apollo Munich Easy Health Premium Health Insurance Policy)

பற்களுக்கான ஊடுகதிர், பல் சொத்தை அடைத்தல், பல் அகற்றுதல், வேர் சிகிச்சை போன்றவைகளுக்காக ஆண்டுக்கு 5000 வரை வழங்கும் திட்டம் இது. இத்திட்டத்தின் பலனைப் பெற மூன்று வருடம் காத்திருக்க வேண்டும்.

8. பாரதி ஆக்ஸா திறன் உடல் நலக் காப்பீட்டுத் திட்டம் (Bharti AXA Smart Super Health Insurance Policy)

விபத்து சார்ந்த பல் காயங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

9. பிஎஸ்எல்ஐ சாராள் உடல் நலக் காப்பீட்டுத் திட்டம் (Birla Sun Life Saral Health Plan)

பல் மருத்துவ நுண்ணாய்வு, சிறு அறுவைச் சிகிச்சை போன்றவைகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டப் பலனைப் பெற ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியிருக்க வேண்டும்.

. 10. ஐ சி ஐ சி ஐ லம்பார்டு உடல் நலக் காப்பீட்டு கூடுதல் திட்டம் (ICICI Lombard Health Advantage Plan)

வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பல் மருத்துவ செலவு அனுமதிக்கப்படுகிறது.

11. எல்ஐசி உடல் நலப் பாதுகாப்புக் கூடுதல் திட்டம் (LIC's Health Protection Plus)

அனைத்துப் பல் மருத்துவச் செலவுகளும் அனுமதிக்கப்படுகிறது.

12. எஸ்பிஐ உடல் நலத் திறன் காப்பீடு (SBI Life Smart Care)

விபத்து சாராத அனைத்துப் பல் மருத்துவ செலவுகளும் அனுமதிக்கப்படுகிறது.

13. சோழா எம் எஸ் பயணக் காப்பீட்டு (Chola MS Travel Insurance)

பயணத்தின் போது ஏற்படும் விபத்தின் காரணமாக வரும் அனைத்துப் பல் மருத்துவச் செலவுகளையும் அனுமதிக்கிறது.

14. ஓகேர் பல் மருத்துவக் காப்பீடு (OCARE Dental Insurance)

இந்தியாவின் முழு முதல் பல் மருத்துவக் காப்பீடு திட்டம். இது ஒரு கூட்டுக் காப்பீட்டுத் திட்டம். வருடத்திற்கு 25,000 ரூபாய் காப்பீடு கிடைக்கும். ஆண்டிற்கு ரூ 1699/- செலுத்த வேண்டியிருக்கும். பல் அகற்றம், அனைத்து வகையான செயற்கைப் பல் கட்டுதல், பல் தொப்பி, பாலம் அமைத்தல், வேர் சிகிச்சை அனைத்தும் உள்ளடக்கம். ஆண்டுக்கு இருமுறை பல் நுண்ணாய்வு செய்வதற்கான செலவையும் ஏற்கிறது.


இந்தக் காப்பீடு முதலில் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பல் மருத்துவக் கட்டணம்

எஸ். திகழன்பு, குனியமுத்தூர்.

சில பல் மருத்துவச் சிகிச்சை செய்து கொள்வதற்கு அதிகமான கட்டணம் பெறப்படுகிறதே. இந்தக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்களுக்குக் கடன் ஏதும் வழங்கப்படுகிறதா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

சில வகை சிகிச்சைகளுக்குப் பல் மருத்துவக் கட்டணம் அதிக அளவில் பெறப்படுகிறது என்பது உண்மைதான். இந்தக் கட்டணத்தை உடனடியாக செலுத்த முடியாதவர்களுக்கு SAVE- IN எனும் நிறுவனம் சிறிய வட்டித் தொகையில் கடனாக வழங்குகிறது. உதாரணமாக, நீங்கள் இருபதாயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்றால் சேவ் இன் (SAVE- IN) எனும் குறுஞ்செயலி மூலம் மாதம் இரண்டாயிரம் வீதம் பத்து மாதங்களுக்குத் தவணை முறையி செலுத்த முடியும். நீங்கள் இந்தக் கடனுக்குத் தகுதியானவர்தானா? என்பதனை சேவ் இன் குறுஞ்செயலி வழியாக, உங்களின் ஆதார் அட்டை, சிபில் மதிப்பெண்களைக் கொண்டு சோதித்து, கடனுக்குப் பொருத்தமானவர் எனும் கருதும் நிலையில் இந்நிறுவனம் கடன் வழங்குகிறது. இதன் மூலம் முழு மருத்துவக் கட்டணத்தைச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு ஷேவ் ஆப் நிறுவனம் வழங்கி விட்டு, வாடிக்கையாளர்களிடம் மாதாந்திர தவணைகளில் பெற்றுக் கொள்கிறது. இதற்குச் சிறிய அளவில் வட்டியும் செலுத்த வேண்டியிருக்கும். இத்திட்டத்தைப் பல் மருத்துவச் சிகிச்சை செய்து கொள்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சில பல் மருத்துவர்க்ள் தொடர்ச்சியாகத் தங்களது பல் மருத்துவமனைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், சிகிச்சைக்கான பணத்தை மாதாந்திரத் தவணையில் பெற்றுக் கொள்கின்றனர்.



சில அரசுத் திட்டங்களில் பல் மருத்துவச் செலவு மீளளிப்பு ((Medical Reimbursement) செய்யப்படுகிறது.

* யாஸ்ஹாஸ்வினி அட்டை (Yeshasvini Card)

* மேற்குவங்காள ஆரோக்கிய அட்டை (West Bengal Health Card)

* ராஜீவ் காந்தி ஜீவன்தஸி ஆரோக்ய யோஜனா (Rajiv Gandhi Jeevandayee Arogya Yojana)

* பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana)

* ஊழியர்களின் மாநில காப்பீடு (Employees State Insurance)

* இந்திய அரசின் உடல் நலத் திட்டம் (India Govt Health Scheme)

உள்ளிட்ட மேலும் சில திட்டங்களில் பல் மருத்துவம் பெறக்கூடிய மருத்துவமனைகளின் பெயர் பட்டியல் இடம் பெற்றிருக்கும். பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் செய்து கொள்ளும் பல் மருத்துவச் சிகிச்சைகளுக்குக் கட்டணத்தை மீளளிப்பு பெறலாம்.

பல் மருத்துவக் காப்பீட்டில் முழுக் காப்பீட்டுத் தொகை என்ன? மாதந்தோறும் எவ்வளவு செலுத்த வேண்டும்? பல் மருத்துவரை நம் விருப்பத்துக்கு மாற்றிக் கொள்ளும் தெரிவு உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பல் மருத்துவக் காப்பீட்டில் அறிந்து கொள்ள வேண்டிய மேலும் பல தகவல்கள் இருக்கின்றன. என்ன தகவல்கள் அவை...?

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/medicine/dental/serial/serial1/p26.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License