இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


3. வாய்ச் சுத்தம்

ஒவ்வொரு மனிதனின் வாயிலும் 20 பில்லியன் கிருமிகள் உள்ளன. அதாவது, இரண்டரை மடங்கு உலக மக்கள் தொகைக்குச் சமமான கிருமிகள் ஒவ்வொரு மனிதனின் வாய்க்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு ஆங்கில முத்தம் கொடுக்கும் போது எட்டு கோடி கிருமிகள் இரு வாய்களுக்குள்ளும் இடம் பெயர்கின்றன.

வாய்க்குள் வசிக்கும் 20 பில்லியன் கிருமிகளில் 500 முதல் 650 வகையான இனங்கள் உள்ளன. குடல் பகுதியை அடுத்து அதிக எண்ணிக்கையில் கிருமிகள் இருப்பது மனிதனின் வாயில்தான்.

வாயில் இருக்கும் கிருமிகள்;

* பேக்டீரியா எனப்படும் நுண்ணுயிரி (கோள வடிவம், பிரம்பு வடிவம், சுருள் வடிவம், காற்புள்ளி வடிவம் கொண்ட பேக்டீரியாக்கள்)

* பூஞ்சைக் கிருமிகள்

* வைரஸ் என்கிற தீநுண்மி

* நுண்ணிய ஓரணு உயிரி எனப்படும் புரோட்டோஜோவா

ஒரு மனிதன் வாயை வைத்து என்னென்ன செய்யலாம்? சாப்பிடலாம் (எதிர்மறையாக, புகைக்கலாம் வெற்றிலைப் பாக்கு போடலாம்), பேசலாம் (நல்லதும் கெட்டதும்), தற்காப்புக்குக் கடிக்கவும் செய்யலாம். மூக்கால் சுவாசிக்க முடியாத போது, வாய்வழியேச் சுவாசிக்கலாம், மகிழ்ச்சியாகச் சிரிக்கலாம்.


பற்களுக்கான குறள்கள்
* பட்டென பட்டாணி கடிக்க பல்லில்லாதோருக்கு
டைட்டானிக் பல்லுக்கு வேர்.

* பல்லிலார் எல்லாம் கரைத்து உண்பர்
பல்லுடையார் உண்பர் கடித்து.
- தேஜஸ் சுப்பு என்கிற கனலி

எல்லாவற்றுக்கும் முதன்மையான பயன்பாடு ஒன்று உள்ளது. அது வாயால் முத்தமிடுவது.

தாய்லாந்தில் பட்டாயா எனும் இடத்தில் 12-02-2013 அன்று எக்காசாய் - லக்சனா திரனாத் எனும் இணையர் தொடர்ந்து 58 மணி நேரம் 35 நிமிடங்கள் முத்தமிட்டு, தங்கள் முத்த மராத்தானைக் காதலர் தினத்தில் நிறைவு செய்தனர். இது ஒரு கின்னஸ் உலகச் சாதனை. இது ஒரு தகவலுக்காக... மட்டும்.


முத்தத்தில் பல வகைகள் உள்ளன. அவைகளில் சில கீழே;

* கொசுறு முத்தம்- எவ்விதக் குறிக்கோளும் இல்லாது மிகச் சாதாரணமாக, அன்பைக் காட்டக் கொடுக்கப்படும் மூன்று நொடி முத்தம்.

* கன்னத்தில் முத்தம் - வன்முறை இல்லாத சைவ முத்தம்.

* நெற்றி முத்தம் - ஆசிர்வாத முத்தம்.

* கையில் முத்தம் - நன்றி சொல்லும் முத்தம்.

* பிரஞ்ச் முத்தம் - காதலர் மற்றும் தம்பதியினர் தரும் முத்தம்.

* காதுமடல் முத்தம் - குழந்தைகளுக்குத் தரலாம்.

* கழுத்து முத்தம் - ரசனையான முத்தம். (வசந்த மாளிகை படத்தில் சிவாஜி, வாணிஸ்ரீக்குக் கொடுத்த முத்தம்)

* மூக்கு முத்தம் - அதிகப் பிரசங்கிதனமான மூக்கைச் செல்லமாகக் க(ண்)டிக்கும் முத்தம்.


நாம் கொடுக்கும் இந்த முத்தத்தால் பத்து பைசா பயன் உண்டா? முத்தம் நேர விரயம் என்போருக்கு, விஞ்ஞானப் பூர்வமான பதில் இதோ;

* முத்தம் மனிதர்களுக்குள் உணர்வுப்பூர்வமான பிணைப்பைத் தருகிறது.

* முத்தம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

* தாம்பத்யத்தை முழுமைப்படுத்துகிறது.

* ஜீரண சக்தியை துரிதப்படுத்துகிறது.

* உமிழ்நீர்ச் சுரப்பை அதிகப்படுத்தி வாய் நலத்தை மேம்படுத்துகிறது.

* நோய் எதிர்ப்புச் சக்தியை வீரியப்படுத்துகிறது.

எந்த வயதில் முத்தமிட ஆரம்பிக்கலாம் என்கிறீர்களா?

15 வயதுக்கு மேல் முத்தங்கள் தர, பெறத் தொடங்கலாம்.

முத்தங்களில் எவ்வகை முத்தம் முதலிடம்? எனில், சந்தேகமில்லாமல் பிரஞ்ச் முத்தம்தான்.

மனிதர்கள் மட்டுமில்லை, நாய்கள், ஒட்டகச் சிவிங்கிகள், அணில்கள், டால்பின்கள், பாண்டா கரடிகள், பஞ்சவர்ணக் கிளிகள், பூனைகள் என்று மிருகங்களும் முத்தம் கொடுத்துக் கொள்கின்றன.

முத்தமிடுவதில் லாபக் கணக்கும் உண்டு, நஷ்டக் கணக்கும் உண்டு. முத்தம் தருபவர்கள் வாய்ப் பராமரிப்பு சரியாக மேற்கொண்டிருந்தால், அவர்களின் முத்தம் முழுக்க லாபக்கணக்குதான். முத்தமிடும் போது நமக்குள் ஆக்ஸிடோஸின் ஹார்மோன் பீரிடுகிறது. உடன் டோபோமைனும் செரட்டோனினும் இலவச இணைப்பாய்ச் சுரக்கின்றன.

* ஸ்ட்ரப்போகாக்கஸ் மைடிஸ் – பாக்டீரியா

* பிரிவோடெல்லா – பாக்டீரியா

* ஆக்டினோமைசெஸ் – பாக்டீரியா

* நைஸெரியா- பாக்டீரியா

* ரோத்தியா – பாக்டீரியா

ஆக்ஸிஜன் தேவையே இல்லாமல் உயிர் வாழும் இரு கிருமிகளைப் பார்ப்போம்.

* ட்ரைபோனிமா டென்டிகோலா, போர்பைரோமோனாஸ் ஜிஞ்சிவாலிஸ்.


உமிழ்நீரில் காணப்படும் கிருமிகளின் பட்டியல் ஒன்றிருக்கிறது. அவை;

* சோலோபேக்டீரியம்

* ஹீமோபிலஸ்

* கோர்னி பேக்டீரியம்

* ஸ்ட்ரப்டோகாக்கஸ்

* காம்பைலோபேக்ட்டர்

* செல்லுலோசி மைக்ரோபியம்

தீமை பயக்கும் கிருமிகள் மட்டும்தான் வாய்க்குள் வசிக்கின்றனவா? மனிதருக்கு நன்மை பயக்கும் சாதுக்கிருமிகள் வாயில் இல்லையா? என்றால் அதுவும் இருக்கத்தான் செய்கின்றன. அவை;

* லாக்டோபேசிலஸ் ரூடெரி

* லாக்டோபேசிலஸ் சலைவாரியஸ்

* ஸ்ட்ரப்டோகாக்கஸ் சலைவாரியஸ் கே 12

* லாக்டோபேசிலஸ் சகேய்

முக அழகு கேள்வி பதில்
ஆயிஷா பேகம்:

குழந்தைகள் விரல் சூப்புதல் நல்லதா, கெட்டதா? தெற்றுப்பல் அதிர்ஷ்டம் என்கிறார்களே, உண்மையா? தெற்றுப் பல்லைச் சரி செய்ய முடியுமா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில், அதற்குத் தேவையான பால், உணவு கிடைக்காத போது, அக்குழந்தை விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. விரல் சூப்பும் பழக்கம் தற்காலிகமாகத் தொடங்கினாலும், பிற்காலத்தில் அதை நிறுத்துவது சிறிது கடினமாகி விடுகிறது. விரல் சூப்பும் பழக்கத்தால் குழந்தைகளின் முக அமைப்பு மாறிப் போய் விடுகிறது. அதனால், கிராமப் பகுதிகளில் சிறு வயதில் குழந்தைகள் விரல் சூப்புவதைத் தடுக்க, சூப்பும் விரல்களில் வேப்பெண்ணெய் தடவும் வழக்கம் இருக்கிறது. விரல் சூப்பும் பழக்கத்தால் குழந்தைப் பருவத்திலேயேத் தெற்றுப்பல் ஏற்படுகிறது. இந்தத் தெற்றுப் பல்லை 12 முதல் 30 வயதிற்குள் பல் மருத்துவம் மூலம் சரி செய்து விடலாம். இந்தப் பல் சீரமைப்புச் சிகிச்சைக்கு பல் மருத்துவத்தில் Orthodontics எனும் சிறப்புப் பாடத்தில் முதுநிலை படித்தவர்களைக் கொண்டு, கிளிப் பொருத்திச் சரி செய்யலாம்.



இருப்பினும், இங்கு முத்தமிடுவதில் சில தகவல்களைக் கருத்தில் கொள்ளலாம்.

* வாய்ப்புண் உள்ளவர் முத்தமிட்டால் எதிராளிக்கு நோய்கள் பரவும். குறிப்பாக, ஹெச்ஐவி எனப்படும் எய்ட்ஸ்

* டூத் பிரஷ் எனப்படும் பல் துலக்கியை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டால் ஹெபடைடிஸ் பி எனும் மஞ்சக்காமாலை நோய் தொற்றும்.

* ட்ரை குளோசான் மற்றும் கோபாலிமர் இரசாயனம் உள்ள பற்பசைகளைப் பயன்படுத்தி வாய்கிருமிகளை அழித்தொழிக்கலாம்.


வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ள எளிய வழிகள் இருக்கின்றன. அவற்றில்;

* நாள்தோறும் இரு முறை பல் துலக்குதல்

* எதனைச் சாப்பிட்டாலும் வாயை நன்றாகக் கொப்பளித்தல்.

* பெராக்ஸைடு கலந்த மவுத் வாஷ்களை பயன்படுத்துதல்.

* உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

* நாக்கைச் சுத்தப்படுத்துதல்.

* நிறையத் தண்ணீர் அருந்துதல்.

* ப்ரோபயாட்டிக் (உணவாய் எடுத்துக் கொள்ளப்படும் நுண்ணுயிர்கள்) குடித்தல்.

* நார்ச்சத்து உணவை நிறைய உண்ணுதல்.

* நாள்தோறும் நல்ல, சுத்தமான தேன் குடிக்கலாம். (அமிலச் சுரப்பைத் தடுக்கும். கிருமிப் பெருக்கத்தை நிறுத்தும். டெக்ஸ்ட்ரான் சுரக்கும்)

* கிராம்புத் தைலம், லெமன் கிராஸ் எண்ணெய், தேயிலை மர எண்ணெய், லாவண்டர் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவை வாய்ப் பராமரிப்புக்கு நல்லது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/medicine/dental/serial/serial1/p3.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License