இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
இயன்முறை மருத்துவம்

உடல்நலத்திற்கு உதவும் மிதிவண்டிப் பயிற்சி!

டாக்டர். தி. செந்தில்குமார்


காலபோக்கில் நிறைய உயிர்க்கொல்லி நோய்கள் ஆக்கிரமித்துவிட்ட கொடிய கால கட்டத்தில் நாம் பயணித்து கொண்டுள்ளோம் அது தவறாகாது. எண்ணில் அடங்காத நோய்கள் இன்று மனித சமுதயாத்தைக் கொன்று குவிக்க தயாராகிவிட்ட ஒரு முறையற்ற வாழக்கையை நாம் பின்பற்றத் தொடங்கி விட்டோம். நம் அவசர ஓட்டத்தில் எதுமே நம் கை தூரத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் ஆரோக்கியத்தை அள்ளித்தந்த மிதிவண்டி ஓட்டும் பயனுள்ள பழக்கத்தை மறந்தே போய்விட்டோம். தொழில்புரட்சியின் காரணமாகக் கணக்கில் அடங்கா வாகன உற்பத்தி, அதை கையாளும் எளிமை போன்ற காரணங்களால் நம் சமுகம் இந்த ஆரோக்கிய பயணத்தைத் தொலைந்து போக செய்துவிட்டது. அது மட்டுமில்லாமல் வாகன பெருக்கம், சாலை நெரிச்சல், மக்கள் தொகை, குறித்த காலத்தில் சேர வேண்டும் போன்ற பல காரணங்களால் நாம் மிதிவண்டி உபயோகிக்கும் பழக்கத்தை தூர எரிந்து விட்டோம்.

உடல்நலம் நம் முழு மூச்சாக இருக்கும் பட்சத்தில் மிதிவண்டிப் பயணம் ஒரு நல்ல தேர்வாக அமையும். நான் அதற்காக உங்களை மிதிவண்டியை எடுத்து கொண்டு உச்சி வெயிலில் தார்ச் சாலையின் நடுவில் பயணிக்க சொல்லவில்லை. அப்படி செய்தாலும் நாம் மீண்டும் வீடு வந்து சேருவோம் என்ற உத்திரவாதம் இல்லை. எல்லோரும் பெட்ரோலிய வாகனங்களைப் பயன்படுத்தப் பழகி விட்ட காலத்தில் நாம் மட்டும் மிதிவண்டியில் பயணித்தால் இந்த சமுதாயம் நம்மை ஒரே வார்த்தையில் முட்டாள் என்று கூறி விடும். அதற்காகக் கண்டுபிடிக்கபட்ட ஒன்று தான் நிலையான மிதிவண்டி இதை ஆங்கிலத்தில் (static bicycle or stationary bicycle) என்று கூறுவர். அதாவது வெளியே போகாமல் நின்ற நிலையிலேயே மிதிவண்டியை மிதிப்பது. இதைப் பயிற்சியாக செய்வதால் என்ன பயன்கள்? எப்படிப் பயணிக்க வேண்டும்? எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது போன்ற சில தகல்களை இங்கே உங்களுக்குத் தருகிறேன். இதனை எளிதாக உங்களுக்குப் புரிய வைப்பது இயன்முறை மருத்துவரான என் கடமை.

மிதிவண்டிப் பயணம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற ஒரு உடல்நலப் பயணம். மிதிவண்டி மிதிப்பதால் நம் கால்கள் வலுப் பெறுவதோடு நம் இதயத்தின் இயங்கு திறனை வலுபடுத்தும் என்பது மருத்துவர்கள் நிருபித்த ஒன்று. இது போன்ற உபகரணம் இப்பொழுது அனைத்து உடற்பயற்சி நிலையங்களிலும் நாம் காணலாம். அதில் யாராவது ஒருத்தர் அமர்ந்து அதனை ஓட்டிக் கொண்டு இருப்பதை நீங்கள் காணலாம், என்னடா இது உட்கார்ந்த இடத்திலேயே ஓட்டிகிட்டு இருக்கான் என்று சிரிப்பு கூட வரலாம். உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் இதனை வீட்டில் வாங்கி வைத்து கொண்டு தங்கள் பயிற்சியைத் தொடரலாம்.

இதற்குப் பெரிய பரிந்துரைகளோ ஆலோசனையோ தேவை இல்லை. நீங்க உடல்நலமாக இருக்கும் பட்சத்தில் இந்த உடற்பயிற்சியைக் காலையிலோ, மாலையிலோ உங்களால் முடிந்தால் இந்த மிதிவண்டியை வீட்டில் வாங்கி வைத்து கொண்டு பயிற்சியைத் தொடருங்கள். குறைந்தது தினமும் அரை மணி நேரம் மிதிவண்டி மிதிப்பதால் இதயமும் அதனைச் சுற்றி உள்ள தசைப் பகுதியும் வலுப்பெரும். இதய தசைகள் வலுப்பெருவாதால் நம் உடலில் ரத்த இயக்கம் சீராக்கப்படுகிறது. நாம் நம்மை இருதய நோய்களில் இருந்து முற்றிலும் காத்துக் கொள்ளலாம்.



மிதிவண்டிப் பயிற்சியின் பயன்கள்

1. உங்கள் உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து, அதாவது அரைமணி நேர மிதிவண்டி பயிற்சி குறைந்தது உடம்பில் உள்ள 300 கலோரி கொழுப்பின் அளவை எரிக்கும் சக்தி வாய்ந்தது. அதாவது தொடர்ந்து வாரத்திற்கு 5 அல்லது 6 முறை செய்வதால் 1500 முதல் 2000 கலோரி கொழுப்பு எரிக்கப்படும். இதனால் உடல் பருமன் உள்ள அனைவருக்கும் இது ஒரு சிறந்த பயிற்சியாகும்.

2. உடம்பில் சேரும் தேவையற்ற கொழுப்பின் அளவைக் குறைத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதால் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை தவிர்த்து இரத்தக் கொதிப்பு, இதய நோய்களிலிருந்து நம்மை முற்றிலும் பாதுகாக்கிறது.

3. மிதிவண்டி மிதிப்பதற்கு நம் கால்களை உபயோகிக்கும் போது, கால்களில் உள்ள தசைகள் வலுப்பெறுகிறது. அதாவது, கால்களின் பின் புறத்தில் உள்ள இரண்டு வலுவான தசைகள் (calf muscle) நம் காலுக்கு வரும் இரத்த ஓட்டத்தைப் புவிஈர்ப்பு விசைக்கு எதிராக மேல் நோக்கி உந்தி இதயத்தை நோக்கித் தள்ளிக் கால்களில் இரத்த ஓட்டம் தேங்காமல் இருக்க உதவுகிறது. இதற்கு மிதிவண்டி பயற்சி மிகவும் பயனுள்ள ஒன்று.

4. மேலும் நீங்கள் செய்யும் அரை மணி நேர பயிற்சியின் போது சுவாசம் சீராக்கபடுவதால் மூளைக்குத் தேவையான சுத்தமான பிராணவாயு (oxygen) கிடைக்கிறது. இதனால் மூளை சீராக இயக்கப்படும் போது தேவையற்ற பயம், மன அழுத்தம் போன்ற நோய்கள் நம்மை அண்டாது. அதோடு மட்டும் இல்லமால் நம் அன்றாடச் செயல் திறனை அதிகபடுத்தி, சோம்பல் தனத்தில் இருந்து விடுவிக்க உதவுகிறது.

5. இந்த பயிற்சி மூட்டு வலி உள்ளவர்களுக்கும் ஆரோக்கியமான ஒன்று. கால்களின் தசைகள் வலு பெரும் போது, தொடைப் பகுதியில் உள்ள தசையான (quadriceps) வலுப்பெற்று எலும்புத் தேய்மானத்தைத் தடுத்து வலியில் இருந்து முழு நிவாரணம் அளிக்கும்.

6. இடுப்பில் அதிகமாகத் தேங்கும் கொழுப்பைக் குறைக்க மருத்துவர்களாலும், உடற்பயிற்சி வல்லுனர்களாலும் பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சியில் மிதிவண்டிப் பயற்சி மிக முக்கிய இடம் வகிக்கிறது.

7. தொடர்ந்து இதனைச் செய்து வருவதால் இதயத்தின் இயக்கம் நல்ல செயல் திறனை அடைந்து மாரடைப்பு (Heart Attack) நோயில் இருந்து நம்மை முழுதும் பாதுகாத்து கொள்ள முடியும். அது மட்டும் இல்லாமல் ரத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக்கி சர்க்கரை நோயால் வரும் பாதிப்புகளை தடுப்பதற்கும் உதவும்.

8. உடற்பயிற்சி செய்யும் போது உடம்பில் உள்ள தேவையற்ற அழுக்கு வியர்வை மூலம் வெளியேறுவதால் நாம் புத்துணர்ச்சி பெறுவதோடு சிறப்பான உடல்நலத்தையும் தரும்.

9. கொழுப்பு உடலிருந்து எரிக்கப்படுவ்தால் இரத்த நாளங்களில் ஏற்படும் (artherosclerosis) என்ற நோயை (கொழுப்பு தேங்குவதை) தடுக்கிறது, இதனால் இரத்தக் கொதிப்பு, பக்கவாதம் போன்ற நோய்களிருந்து பாதுகாக்கிறது. இதனால் நம் வாழ்நாள் கூடுவதோடு, நோயற்ற வாழ்வு வாழலாம்.



யார் இதனைச் செய்யலாம்?

வயது வந்த அனைவருக்கும் இந்த பயிற்சி ஒரு நல்ல தடுப்பு நிவாரணி. அதாவது, இதய நோய்களிலிருந்து முற்றிலும் நம்மைப் பாதுகாப்பதால் இதனை ஆரோக்கியமாக உள்ள யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதாவது நோய் வரும்முன் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் சிந்தனை உள்ள அனைவரும் இதனைச் செய்யலாம்.

இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள், உடம்பில் கொழுப்பின் அளவு அதிகம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், இதய இயக்கத்தின் அல்லது அதன் செயல் திறன் குறைவாக உள்ளவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இதனைச் செய்யலாம்.



எவ்வளவு நேரம் செய்யலாம்

1. தினமும் குறைந்தது பதினைந்து நிமிடம் முதல் அரை மணி நேரம்.

2. வாரத்திற்கு குறைந்தது 4 அல்லது 5 நாட்கள் செய்வது

மேற்சொன்ன அனைத்துப் பயன்களையும் மிதிவண்டிப் பயிற்சி உங்களுக்கு அள்ளித்தரும். தொடருங்கள்...தொலைத்துவிட்ட உங்கள் மிதிவண்டிப் பயணத்தைத் தொடருங்கள்!

உடற்பயிற்சிக்கான, நிலையான மிதிவண்டியை வாங்கிப் பயிற்சி எடுப்பதை விட, உண்மையாகவே மிதிவண்டியை வாங்கி ஓட்டினால் பெட்ரோலியச் செலவுகள் மிச்சப்படுவதுடன் சிறந்த உடல் நலமும் மருத்துவச் செலவும் மிச்சமாகும் என்று சிந்திக்கிறீர்களா?

அப்படியே செய்யுங்கள் உடல்நலத்துடன் உங்கள் பணமும் சேமிப்பாகும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/medicine/physiotheraphy/p4.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License