|
....... ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
கிறுக்குத்தனம்-7
குறுந்தகவல் மூலம் கிறுக்குத்தனம்...
கடந்த வாரத்தில் எனக்கு வந்த 10 க்கும்
மேற்பட்ட குறுந்தகவல். தகவல் ஒன்றுதான். "திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு இன்று
பிறந்தநாள். இந்த தகவலை அலட்சியப்படுத்தாமல், நீங்கள் உங்களின் நலம்
விரும்பிகளுக்கு அனுப்பினால் உங்களுக்கு நல்லதே நடக்கும்" என்று…! என்ன கொடுமை
சார் இது. இந்த குறுந்தகவல் எனக்கு மட்டுமில்லை , சிங்கப்பூரில் இருக்கும்
எனக்குத் தெரிந்த பலருக்கும் வந்திருக்கிறது. அதை அனுப்பிய அவர்களோட நம்பிக்கையை,
இந்த முட்டாள்தனமான நம்பிக்கையை என்னவென்று சொல்வது? இந்தியாவில், அதுவும்
குறிப்பாக தமிழ்நாட்டில் துண்டுச்சீட்டில் எழுதி அல்லது அச்சடிச்சு இது போன்ற
முட்டாள்தனமான தகவல் தாங்கிய செய்தி வரும். "இந்த செய்தியை நீங்களும்
துண்டுச்சீட்டில் எழுதி அல்லது அச்சடிச்சு உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு,
குறைந்தது பத்து பேருக்காவது அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பாவிட்டால் ஏதாவது
விபரீதம் நடக்கும்" என்று அந்த செய்தியின் கடைசியில் இருக்கும் எச்சரிக்கைக்குப்
பயந்து அவர்களும் பத்து நபருக்கு அனுப்பி விடுவார்கள். சிலர் இதை கண்டு
கொள்ளாமல் விட்டு விடுவார்கள். இப்போதெல்லாம்... இப்படி செய்திகள் காணாமல்
போய்விட்டது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்த நமக்கு... இப்போ புதிய ஷாக்...
இப்ப டெக்னாலஜி வளர்ந்து விட்டதால இதுபோன்ற செய்திகளை குறுந்தகவலாக தங்களுக்குத்
தெரிந்த கைத்தொலைபேசிக்கு அனுப்பத் துவங்கி விட்டனர். நல்லவேளை, மின்னஞ்சலை
விட்டு வைத்திருக்கிறார்கள். இதுல என்ன கொடுமைன்னா இந்த குறுந்தகவலை
அனுப்புவதில் இரண்டு ரகம் இருக்காங்க
-பாண்டித்துரை, சிங்கப்பூர்.
|