........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சிறுவர் பகுதி-27          கதை.

நம்மால் முடிந்ததை நாமே...

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு மக்கள் எதற்கெடுத்தாலும் அரசனையோ அல்லது அரசையோ குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

இந்த மக்களுக்கு எப்படி பாடம் புகட்டுவது என்று யோசித்தான்.

ஒரு நாள் அனைவரும் நடமாடும் கடைவீதியில் இரவோடு இரவாக ஒரு பெரிய பாறாங்கல்லை வைக்கச் செய்தான். அந்தக்கல் ஒருவரே தூக்கக் கூடியதாகவும் இருந்தது.

மறு நாள் காலை, அந்த வழியாக வந்த பலரும் நடுவீதியில் கிடந்த கல்லைத் தாண்டிச் சென்றார்கள்.

"என்ன கொடுமை நடு வீதியில் இவ்வளவு பெரிய கல் கிடக்கிறதே. இதை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்த அரசனுக்கும் தெரியவில்லை, அரசுக்கும் தெரியவில்லை. இப்படி இருந்தால் நாடு எப்படி முன்னேறும்? " என்றபடி முணுமுணுத்துக் கொண்டே சென்றார்கள்.

இப்படியே ஒரு வாரம் கடந்து விட்டது. அந்தக்கல் மட்டும் அகற்றப்படாமல் கிடந்தது.

அந்த நகரத்து மக்களை எல்லாம் கடைவீதியில் கூடச் சொன்னான் அரசன்.

என்ன நடக்கிறது என்பதை அறிய மக்களும் அங்கே கூடினார்கள்.

அரசன் வீரன் ஒருவனைப் பார்த்து, நடு வீதியில் கிடந்த அந்தக் கல்லைத் தூக்கி ஓரமாகப் போடு என்று கட்டளையிட்டான்.

அப்படியே அந்த வீரனும் கல்லைத் தூக்கினான். அதனடியில் ஒரு பெரிய பெட்டி ஒன்று இருந்தது. அதில் இந்தக் கல்லை எடுத்து ஓரமாகப் போட்டவர்களுக்கு இதிலுள்ள ஆயிரம் பொற்காசுகளும் பரிசு என்று எழுதியிருந்தது.

அங்கிருந்த எல்லோரும் ஆயிரம் பொற்காசுகளை இழந்து விட்டோமே என்று வருந்தினார்கள்.

"எதற்கு எடுத்தாலும் அரசைக் குறை கூறுகிறீர்களே நாட்டு மக்களுக்கும் பொதுப்பணி என்கிற சிறு சேவை மனப்பான்மை இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் நாடு முன்னேறும்." என்றான் அரசன்.

தங்களுடைய சோம்பேறித்தனத்திற்காக வெட்கப்பட்ட மக்கள், " இனி நாங்கள் அரசைக் குறை சொல்ல மாட்டோம். எங்களால் முடிந்தவற்றை நாங்களே செய்து விடுவோம்." என்றார்கள்.

நம்மால் முடிந்ததை நாமே செய்து விட வேண்டும். பிறரை எதிர்பார்த்து காலம் கடத்தக் கூடாது. அப்படி காலம் கடக்கும் போது நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய்விடும்.

முந்தைய சிறுவர் பகுதிக்குச் செல்ல

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.