........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 232

புலிகள் தீவிரவாதிகள்...?

 

கண்ணீர்ச் சொட்டாய் இருக்கும்
எம்தேசத்திலிருந்து வரும்
உப்புக்காற்றில் ஒட்டியிருக்கும்
மரங்களில் மோதி உடைத்த சிறார்களின்
மூளை துகள்கள்

33 லட்ச கபாலங்களில்
உதிரம் ஊற்றி குடித்தும்
ஊழி வாய் நிரம்பாத துட்டமினுவின்
வாளேந்திய சிங்கத்தின்
வாயிலிருக்கும் புத்தனின் பல்

பிச்சியாய் அரைப் பிரேதமாய் கிடக்கும்
வன்புணர்ந்த எம்பெண்ணுக்கருகே கிடக்கும்
மலமூத்திரக்குடுவைகள்

ஷெல்லடித்த புகைப்புழுதி
அடங்கி புலர்த்தும் நரக ஓலங்கள்

மானிட்டர் திரை நிரப்பும்
மாண்டோர் பட்டியல்

சிப்பிகளுக்கதிகமாய்
சில்லுகளாய் சிக்கும் மண்டையோடுகள்

உரக்கச் சொல்லுங்கள்
புலிகள்...
தீவிரவாதிகள்...!
பெருங்கருணை பேரரசு சிங்கள
நல் அரசு....

-மித்ரா நேசமித்ரன்

 

 

 

 

 

 

m

 

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.