........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-64 சித்திரை முழுநிலவு நினைவுகள்
சித்திரை பெளர்ணமி நாள். அன்னை எனும் தெய்வத்தை இழந்தோர்கள் புனிதநாளாக தமது அன்னையரை நினைந்து வழிபடும் நாள். இந்நாளில் நானும் எனது அன்னையின் நினைவுகளில் மூழ்குவதுண்டு. என்னடா இவன் சித்திரை பெளர்ணமி என்கிறான்! அன்னையின் நினைவுகள் என்கிறான்! ஆத்திகவாதத்தின் அடிமட்டத்திலிருந்து கூவுகிறானோ? என்றொரு எண்ணம் உங்கள் மனங்களில் ஏற்படக் கூடும். அன்னை எனும் தெய்வம் மதங்களைக் கடந்த ஒரு அன்பாலயத்தின் ஆத்மஜோதி. அந்த ஜோதிக்கு ஈடு இணையாக எதுவுமே கிடையாது. என் அன்னையின் நினைவுகளோ அன்றி அந்த நினைவுகள் கொடுத்த நிழல்களின் குளிர்மையால் விளையும் ஆனந்த அனுபவங்களோ என் நெஞ்சத்தை ஆக்கிரமிக்காத நாட்களே இல்லை எனலாம். இருந்தாலும் அன்னையரின் பெருமைகளை, அன்னையரை நோக்கி வழிபடும் கடமைகளை ஞாபகமூட்டும் நாட்களை எந்த மதமோ அன்றி எந்த மனிதரோ சுட்டிக் காட்டினாலும் அதை மிகவும் உன்னிப்பாக அவதானித்து ஒழுகக்கூடிய முறையில் ஒழுகுவது என் அன்னையின் மீது நான் காட்டும் அளவு கடந்த பக்திக்கு ஒரு முத்திரை எனும் எண்ணம் கொண்டவன் நான்.
என் அன்னை
என்னோடு இப்புவியில் வாழ்ந்த காலங்களில் ஓர் உன்னதமான மகனாக எனக்குரிய
கடமைகளைச் செய்திருக்கிறேனா? என்பது கேள்வியே! ஏனெனில் எனது மனதுக்குள் நான்
எனது கடமைகளைச் சரிவரச் செய்திருக்கிறேன் என்று எண்ணினாலும் கூட என் அன்னையின்
ஏக்கங்கள் அனைத்தையும் போக்கினேனா? என்பதை என் அன்னையே சொல்லக்கூடும். ஆனால்
அவள் இப்போ காற்றோடு கலந்து விட்டாளே! ஆனால் என் அன்னையை அறிந்த மட்டும் நான்
அவளுடைய ஏக்கங்கள் அனைத்தையும் போக்கி, லட்சியங்களை நிறைவேற்றியிருக்காமல்
விட்டிருப்பினும் அதைச் சொன்னால் எங்கே எனது மனம் புண்பட்டு விடுமோ என்று
சொல்லாது விட்டிருந்திருப்பாள்.
பத்து
மாதங்கள் அம்மா , நீயென்னை -என்ற புலம்பலை அவர் பாணியில் பின்வருமாறு கூறுகிறார்.
ஐயிரண்டு
திங்களாய் அங்கம் எல்லாம் நொந்துபெற்றுப் அவர் மனம் ஆறவில்லை. முற்றும் துறந்த முனிவர் என்றால் என்ன? அவர் தாயும் அவரின் உறைவிடம் தானே, அன்பின் ஊற்றே அவர் தாய் தானே!
என்னைப்
பெறுவதற்காய் என் என்று கதறுகிறார் பாருங்கள்,
முந்தித்
தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்தே ஒருநாள், ஒருவேளை எதையாவது சுமப்பது என்றாலே எம் மனம் பதைபதைக்கிறது ஆனால் அன்னையர் தமதுடலில் முன்னூறு நாட்கள் எமைச் சுமப்பது மட்டுமல்லாமல் எமக்காக . எம்மை நலமாக ஈன்றெடுக்க தாம் பத்தியம் காக்கின்றனரே அதற்கீடாகுமா? எதுவும் இவ்வையகத்தில்?
தோள்களில்
சுமந்து, துளியில் தலாட்டி ஞாபகங்களை எரித்து சித்தத்தை சீராக்கிய சித்தரின் மனதில் கூட அன்னையின் அன்பு விளையாடும் விதத்தைப் பாருங்கள்,
வட்டிலிலும்
தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
தனது உடலை
எனது அன்னை வருத்தினாள் ஆமாம் ஆசா, பாசங்களைத் துறந்து ஆதியும், அந்தமும் அற்றவனின் அடிதேடி ஓடிய அந்த அற்புதச் சித்தரின் மனதில் அன்பின் வித்தாம் தாய்மையின் பெருமைகள் கிளர்ந்தாடின வகையைப் பாருங்கள்,
நொந்து
சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை ஆமாம் வாழ்வெலாம் சோறுட்டிப் பார்த்த அந்தத் தாயின் வாயில் ஆக்காமல் போடும் வாய்க்கரிசிதான் நான் அவளுக்குப் போடும் இறுதிச் சாப்பாடோ எனக் கூப்பாடு போடும் பட்டினத்தார் வரிகளைப் பாருங்கள்,
அரிசியோ நான்
இடுவேன் ஆத்தாள் தனக்கு மீண்டும் தன்னைக் கொஞ்சி மகிழ்ந்த அன்னையின் இறுதிக்கடனை தான் முடிக்கும் வேளையில் எம் பட்டினத்துச் சித்தரின் மனதில் தன் தாய் தனைக் கொஞ்சி மகிழ்ந்த நினைவுகள் அலைமோதுவதை எப்படிக் கூறுகிறார் பாருங்கள்,
அள்ளி இடுவது
அரிசியோ தாய்தலைமேல் நெஞ்சில் பொங்கி வந்த துயரத்தை, அன்புத்தெய்வத்தின் மறைவு கொடுத்த வேதனை இதயத்தை முட்டி மோதும் வகியை விளக்கும் அருமையான் பத்துப் பாடல்களைக் கொடுத்தும் பற்றவில்லை வாழை மட்டை. நகைத்தனர் ஊரார். கலங்கவில்லை நம் பட்டினத்தார். விருத்தத்தை விளாசினார்.
முன்னை இட்ட
தீ முப்புரத்திலே இதிலே கூறப்பட்டது என்ன? முப்புறத்தையும் யார் பொசுக்கினாராம்? முக்கண்ணனார் முன்+ஜ ஆமாம் முதலும், முடிவுமற்ற ஆதிமூலமாகிய முக்கண்ணன் இட்ட தீ முப்புறத்தையும் பொசுக்கியதாம். பின்+ஜ, பின்னை ஆமாம் பெண் தெய்வமாகிய சீதாப்பிராட்டியின் தூய கற்புதான் இலங்கையில் தீயை இட்டது என்கிறார். அன்னையின் மறைவு கொடுத்த தீ அடிவயிற்றைக் கவ்வியது போன்ற அடக்க முடியாத் துயரம் சரி இச்சித்தன் இப்போது வைக்கும் இத்தீ மூளட்டுமே என்றது, அப்பச்சை வாழை மட்டை தீ பற்றிக் கொண்டதாம். அன்புள்ளங்களே! பட்டினத்தார் என்னும் அற்புதச் சித்தரின் அருமையான் பாடல்கள் பத்து அன்னையின் இறுதிக் கடனின் போது எமக்கீன்றவை அதனை எனது வரிகள் சில சேர்த்துத் தொகுத்துப் பார்ப்பது இச்சித்திரை பெளர்ணமித் தினத்திலே எனது அன்னைக்குச் செய்யும் ஓர் வழிபாடு என்னும் வகையிலே உங்களோடு இதைப் பகிர்ந்து கொண்டேன்.
|
முகப்பு |