ரசிய சிறையில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர். அவர்கள் இறக்கும் முன்பாக, “உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன...?” என்று கேட்கப்பட்டது.
முதல் கைதி, “நல்ல பெண், நல்ல சாப்பாடு, நல்ல மது, லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்” என்றான் அவன்.
அவனது மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.
இரண்டாவது கைதி, “நல்ல பெண், நல்ல உணவு, விளாடிமிர் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்” என்று கூறினான்.
அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
மூன்றாவது கைதி, “தனது முதல் ஆசையாக மாம்பழம் வேண்டும்” என்று கேட்டான்.
அப்போது மாம்பழ சீசன் இல்லை, எனவே... தூக்கு தண்டனை ஆறு மாதகாலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஆறு மாதகாலத்திற்குப் பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து, அவனது இரண்டாவது ஆசை என்ன...?” என்று கேட்டனர்.
அவன், “செர்ரிப் பழம் வேண்டும்” என்றான்.
அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால், தூக்கு தண்டனை மீண்டும் ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டது.
ஆறு மாதத்திற்குப் பின்பு, அவனுக்கு செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
பின்னர் அவனிடம், “மூன்றாவது ஆசை என்ன” என்றுகேட்டனர்.
''என் உடல்... தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்...”என்றான்.
அதிகாரிகள் அதிர்ந்து போய்விட்டனர்.
“நீ என்ன சொல்கிறாய்? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்” என்று அதிகாரிகள் சொல்ல, அந்தக் கைதி அமைதியாகச் சொன்னான்,
"அவர் இறக்கும் வரை... நான் காத்திருக்கிறேன்”