இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

தலைமைப் பதவிக்கு வந்தால்...


தேவர்களின் அரசனான இந்திரன், தங்களைத் துன்புறுத்தி அடிமைப்படுத்திய அசுரனான விருத்திராசுரனை எதிர்த்துக் கடும் போர் புரிந்து அவனைக் கொன்றான்.

தேவர்கள் கொலை புரிந்தால் அது பாவக்கணக்கில் சேர்ந்து, அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். இறைவனே என்றாலும் இந்தத் தோஷத்தில் இருந்து தப்ப முடியாது. இந்திரனுக்கும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுப் பதவியை இழந்து மறைவாக வாழ்ந்தான்.

தலைமை இல்லாத தேவர்களால் எந்த விஷயங்களிலும் முடிவெடுக்க முடியவில்லை. இதுபற்றி அனைவரும் ஆலோசித்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். இந்திரப் பதவிக்குத் தகுந்தவர் யாரென்ற பரிசீலனையில் பூலோகத்தில் பல நற்செயல்களை செய்து மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையைப் பெற்ற அரசனான நகுஷன் பெயர் முடிவு செய்யப்பட்டது. அவனிடம் சென்று தேவர்கள் அனைவரும், தங்களுக்கு தலைவனாகும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினர். அவன் தன்னடக்கத்துடன் மறுத்தாலும் தேவர்கள் விடவில்லை.

“நீங்கள் எங்களுக்குத் தலைவனாக பொறுப்பேற்றால் நாங்கள் செய்யும் தவத்தின் பலன் உங்களையேச் சேரும். அதனால் உங்கள் உடல் அழகு மேலும் பொலிவு பெறும். அத்துடன் அனைவரிலும் சிறந்த பலசாலியாகவும் திகழ்வீர்கள்” என ஆசை காட்டினர்.

விதியும்... பதவி ஆசையும் யாரை விட்டது? நகுஷனும் ஒப்புக் கொண்டான். தேவர்களின் தலைமைப் பதவியை ஏற்றான்.

பதவிக்கு வந்த புதிதில் நீதியுடன் ஆட்சி நடத்திய அவனின் குணம், நாளடைவில் மாறத் தொடங்கியது. தேவர்களிடம் தனது சர்வாதிகாரத்தை காட்டினான். தாங்களே விரும்பி அவனைப் பதவியில் அமர்த்தியதால் தேவர்களால் அவனை எதிர்க்கவும் முடியவில்லை.

தேவர்களுக்குப் பல துன்பங்களைத் தந்தவன் தேவலோகப் பெண்களையும் விட்டு வைக்கவில்லை. பூமியில் நல்லவனாக இருந்த நகுஷன் உயரிய பதவி கிடைத்ததும் தன் நற்குணங்களை இழந்து புத்தி தடுமாறினான்.

ஒரு நாள் அவன் கண்களில் இந்திரனின் மனைவியான இந்திராணி பட்டுவிட்டாள். அவள்மீது மோகம் கொண்ட நகுஷன், அவளை அடையவேண்டி அவளுக்குப் பல துன்பங்களைத் தந்தான். அவனது இழிவான எண்ணத்தை அறிந்த இந்திராணி தேவகுருவான பிரகஸ்பதியிடம் சென்று தன்னைக் காத்துக் கொள்ள வழி சொல்லுமாறு வேண்டினாள்.

அவர் ‘நகுஷன் பலம் பெற்றவனாக இருப்பதால் அவனை எதிர்க்கும் வலிமை யாருக்கும் இல்லை. ஆனால் தகுந்த முனிவரின் சாபம் கிடைத்தால் அவனின் பதவி பறிபோகும். அதன்பின் இந்திரனே ஆட்சிக்கு வந்துவிடுவான்’ என்றும் சொல்லி அதை நிறைவேற்ற அவளுக்கு ஒரு வழியையும் கூறினார்.

அதன்படி நகுஷனிடம் சென்ற இந்திராணி ‘என் கணவர் இருக்குமிடம் தெரியவில்லை. அவர் இந்த உலகில் எங்குமே இல்லை என்று தெரிந்தால்தான் உன்னை நான் மணக்க முடியும். அப்படிச் செய்வதால் நாம் இருவருமே பழியில் இருந்தும், தோஷத்தில் இருந்தும் தப்பிக்கொள்ளலாம். எனவே என்னை இந்திரனைத் தேடிச் செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்று அனுமதி கோரினாள். அவனும் அனுமதித்தான்.

இந்திராணி, மகாவிஷ்ணுவை வேண்டித்தவம் இருந்து, இந்திரன் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தாள். இந்திரன் நகுஷனின் பதவியைப் பறிக்கத் தக்க வழியைக் கூறி, அதன்படி நடக்குமாறு இந்திராணியிடம் ஆறுதல் தந்தான்.

கணவன் தந்த தைரியத்தில் மீண்டும் தேவலோகம் வந்த இந்திராணி நகுஷனிடம் ‘மூன்று லோகங்களிலும் தேடிப்பார்த்து விட்டேன். எங்கும் இந்திரனைக் காணவில்லை. ஆதலால் என்னைத் தாங்கள் மணக்க எனக்கு பரிபூரண சம்மதம். ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள். நானே இந்தத் தேவலோகத்தின் ராணி என்பதால், தாங்கள் நான் இருக்குமிடத்திற்கு சப்தரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் வந்து, என்னை ஏற்றுக்கொண்டால் எனக்கு பெரும் கவுரவமாக இருக்கும்’ என்றாள்.


நகுஷனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. மணமகனாகத் தன்னை அலங்கரித்து, சப்தரிஷிகளை அழைத்துத் தன்னைப் பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்லும்படி உத்தரவிட்டான்.

முனிவர்கள் அவன் செயல்கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தாலும், தேவர்களின் தலைவனான அவனின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அவன் அமர்ந்த பல்லக்கைச் சுமந்து சென்றனர்.

முனிவர்களின் வயது முதுமை காரணமாக, மெதுவாகப் பல்லக்கைச் சுமந்து நடக்க, நகுஷனோ ரிஷிகளைப் பழித்துப் பேசி விரைவாகச் செல்லக் கட்டளையிட்டான். இதனால் அவனை முனிவர்கள் பாம்பாக மாறும்படி சபித்தனர். மறு கணமே அவன் தன்னுடைய சக்திகளை இழந்து, பாம்பாக மாறிப் பூமியில் வந்து விழுந்தான். இந்திரனின் தோஷம் நீங்கி அவனே மீண்டும் தலைவன் ஆனான்.

பாம்பாக மாறிய நகுஷனுக்கு சுயபுத்தி வந்து, தன் தவறுகளுக்கு வருந்தி தவ வாழ்க்கையை மேற்கொண்டான்.

கிடைத்தற்கரிய பதவி கிடைத்தும், தவறான போக்கினால் பாம்பாக மாறித் தண்டனையை அனுபவித்த நகுஷன், பதவி மோகத்தில் தவறு செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இன்றும் உதாரணமாகயிருக்கிறான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/parable/p1251.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License