ஒரு நாள் பிரபல மருத்துவர் ஒருவரிடம் ஒரு நோயாளி வந்தார். "டாக்டர் என்னைச் சோதித்து பாருங்கள்" என்றார்.
"ஏன் உங்களுக்கு என்ன செய்கிறது" என்றார் டாக்டர்.
அவ்வளவுதான் தமக்கிருப்பதாகத் தாமே நினைத்துக் கொண்ட ஆயிரம் நோய்களை அழாக்குறையாகக் கூறி முடித்தார். "அப்படியா" என்று கேட்டு கொண்டே வந்த டாக்டர் எல்லாச் சோதனைகளையும் செய்து முடித்தார்.
"எனக்கு என்ன வியாதி என்பதைக் கண்டுபிடித்து விட்டீர்களா?" என்று பதட்டத்தோடு கேட்டார் நோயாளி.
"உங்களுக்கு எந்த நோயும் இல்லை. நீங்கள்தான் கண்டதையும் நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்"
"என்ன டாக்டர் சொல்கிறீர்கள்?"
"ஆமாம் இப்போது உங்களுக்குத் தேவை மருத்துவமல்ல. மன மகிழ்ச்சி. நான் சொல்வது போல் செய்யுங்கள். இன்று நம்மூரில் நடக்கும் சர்க்கசுக்குச் செல்லுங்கள். அங்கே கிரிபால்டி என்னும் கோமாளி வருவான். அவன் ஏராளமான வேடிக்கைகள் செய்வான். நிச்சயமாக அவன் தன் வேடிக்கைகளால் உங்களை சிரித்து மிரள வைத்து விடுவான். நான் சொல்கிறேன். நம்புங்கள். உலகில் உள்ள எல்லா மருந்துகளை விடவும் இப்போது உங்களுக்கு நன்மை தரக்கூடியது இதுதான்"
அந்த நோயாளி மருத்துவரைப் பரிதாபத்தோடு பார்த்தார். பின்னர், "டாக்டர், அந்த கிரிபால்டியே நான்தான்" என்றார் அழாக்குறையாக...