நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், ஒரு வேதியியல் விஞ்ஞானி, ஒரு உயிரியல் வல்லுநர், ஒரு மின்சாரப் பொறியாளர் என்று மூவருக்கும் மின்சார இருக்கையில் இருத்திச் சாகடிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பை நிறைவேற்றுபவன் வேதியியல் விஞ்ஞானியிடம் வந்து "உங்களுக்கு ஏதேனும் கூற விருப்பமா...?" என்று கேட்டான்.
அவர் "இல்லை" என்றார்.
அவன் இருக்கையில் அவரை அமர்த்திச் சுவிச்சை அழுத்தினான். மின்சார நாற்காலி வேலை செய்யவில்லை.
தண்டனையை ஒரு தடவை நிறைவேற்ற முடியாவிட்டால் விடுதலை செய்ய வேண்டுமென்று அந்த நாட்டில் சட்டம். அதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.
அடுத்து உயிரியல் வல்லுநர் அமர்த்தப்பட்டார். அப்போதும் நாற்காலி வேலை செய்யவில்லை. அவரும் விடுவிக்கப்பட்டார்.
அடுத்து மின்சாரப் பொறியாளர் அமர்த்தப்பட்டார்.
அவரிடம், “உங்களுக்கு ஏதேனும் கூறுவதற்கு உள்ளதா...?" என்று கேட்கப்பட்டது.
“ஆமாம்" என்ற அவர், “அந்த நீல நிற ஒயரையும் சிகப்பு நிற ஒயரையும் இணைத்தால், இந்த நாற்காலி சரியாக வேலை செய்யும்" என்று சொன்னார்.
அதன் பிறகு, அந்த மின்சாரப் பொறியாளர் உடல் கருகிச் செத்தார்.
உண்மையைக் கூறக் கூடாத இடத்தில் கூறியதால் அவர் உயிரிழக்க வேண்டியதாயிற்று.
சில நேரங்களில் நமக்கு அனைத்தும் தெரிந்திருந்தாலும் மௌனமாயிருப்பதே மிகச் சிறந்தது.