இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

மகனைத் திருத்த என்ன வழி?


ஒரு ஊரில் ஒரு பணக்காரர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வாழ்நாளில் ஒவ்வொரு நிமிடமும் கடினப்பட்டு, தன் வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு வந்தவர். அவரிடம் அனைத்துச் செல்வங்களும் இருந்தன. எல்லாம் இருந்தாலும், அவர் சற்று வேதனையுடனே வாழ்ந்து வந்தார். காரணம், அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பயங்கரமான சோம்பேறி. தன்னுடைய நேரத்தை வீணாகச் செலவழித்து, வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருந்தான். தன்னுடைய மகன் தன்னைப் போல் இல்லாமல் பெரும் சோம்பேறியாக இருப்பதைப் பார்த்த அந்தப் பணக்காரன், அவனை எப்படித் திருத்துவது? என்று யோசித்துக் கொண்டு இருந்தார். தன் மகனிடம் எத்தனையோ முறை எடுத்துக் கூறியும், அதை அவன் கண்டு கொள்ளாமல் போனதையும் நினைத்து வருந்திக் கொண்டிருந்தார்.

ஒருநாள், தன் வீட்டின் அருகில் இருந்த பூங்காவிற்குச் சென்று, சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது, அங்கே சில பிச்சைக்காரர்கள் இருப்பதைப் பார்த்த பணக்காரருக்குத் திடீரென ஒரு யோசனை வந்தது.

உடனடியாக, தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு அவருடைய வீட்டுக்குச் சென்றார். அங்கு டீவியில் கால்பந்தாட்டப் போட்டியினைப் பார்த்துக் கொண்டிருந்த மகனைத் தன்னுடன் வருமாறு அழைத்தார். மகனோ ஒன்றும் புரியாமல், தந்தையுடன் காரில் ஏறினான். கார் வேகமாக அருகிலுள்ள பூங்காவிற்குச் சென்றது.

பூங்காவிற்குத் தன் மகனை அழைத்து வந்த தந்தை, அங்கு வெகு நாட்களாகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மூன்று பிச்சைக்காரர்களை அழைத்தார். ஒவ்வொரு பிச்சைக்காரர்களையும் தனித்தனியே அழைத்து, தன் மகனின் கையால் ரூபாய் ஒரு லட்சத்தை அந்தப் பிச்சைக்காரர்களுக்கு தரச் சொன்னார். ஒன்றும் புரியாத மகனும், தந்தை சொன்னபடி அந்தப் பிச்சைக்காரர்களுக்கு அந்தப் பணத்தைக் கொடுத்தான்.


வீட்டிற்கு வந்த மகனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஏன் தந்தை இவ்வளவு பணத்தை அந்தப் பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கச் சொன்னார் என்று யோசித்துக் கொண்டே இருந்தான். தன் தந்தையிடமும் அதைப் பற்றிக் கேட்டான். ஆனால், அவரோ வாய் திறக்கவே இல்லை‌. சிறிது நாட்கள் அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்த மகனும் அதை மறந்து போனான்.

அந்த நிகழ்ச்சி நடந்து ஆறு மாதங்கள் ஆனது.

பின் ஒரு நாள், தன் மகனை காரில் ஏற்றிக்கொண்டு மீண்டும் அதேப் பூங்காவிற்குச் சென்றார் அந்தப் பணக்காரர்.

அங்கே, அவர் கை நிறைய பணம் கொடுத்த மூன்று பிச்சைக்காரர்களில் ஒருவர் மட்டும், இன்னும் அதே இடத்தில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அவனிடம் சென்று, “என்னை நினைவு இருக்கிறதா? உங்களுக்குக் கை நிறையப் பணம் கொடுத்தேனே...” என்றார்.

“ஆமாம் ஐயா, உங்களை எனக்கு நினைவு இருக்கிறது” என்றான்.

“சரி நான் உங்களுக்குக் கொடுத்தப் பணத்தை நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்களுடன் இருந்த இன்னும் ரெண்டு பேர் எங்கே?” என்று கேட்டார்.

“ஐயா நீங்கள் கொடுத்த பணத்தை வைத்து, எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதை வைத்து, இரண்டு மாதங்கள் நிம்மதியாகச் சாப்பிட்டேன். பணம் தீர்ந்து போனதும், மீண்டும் இங்கு வந்து பிச்சை எடுக்கிறேன்” என்றான்.

“உன்னுடன் இன்னும் இருவர் இருந்தார்களே, அவர்கள் எங்கே?” என்று கேட்டார்.

“அதில் ஒருவன் எங்கு இருக்கிறான் எனக்குத் தெரியவில்லை. ஆனால், இன்னொருவன், இதோ அருகில் ஒரு ஐஸ்கிரீம் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறான்” என்றான்.

பணக்காரர், தன் மகனை அந்த ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்து சென்றான்.

அங்கு கடை முதாலாளியை சந்தித்து, “என்னை நினைவு இருக்கிறதா?” என்று கேட்டார்.

உடனே அந்த முதலாளி, “உங்களை என்னால் மறக்க முடியுமா? உங்களால்தான் இந்த வாழ்க்கை எனக்குக் கிடைத்தது” என்றார்.

பின் தொடர்ந்து, “நீங்கள் கொடுத்த பணத்தால் தான் ஒரு சிறிய கடை வைத்துப் படிப்படியாக உயர்ந்து, இப்போது ஒரு பெரிய ஐஸ்கிரீம் கடையைத் திறந்துள்ளேன். உங்களுக்குக் காலம் முழுவதும் நன்றிக் கடன்பட்டவனாக இருப்பேன்” என்றான்.

“சரி, உன்னுடனிருந்த மூன்றாவது நபர் எங்கே?” என்று கேட்டார்.


அந்தக் கடை முதலாளி, “இங்கிருந்து நேராக சென்றால், அங்கே ஒரு சூதாட்ட விடுதி இருக்கும். அங்குதான் அவன் சூதாடிக் கொண்டிருப்பான். நீங்கள் தந்த பணத்தைச் சூதாடிச் சூதாடி இழந்தான். இப்போது அந்த பழக்கத்தை விட முடியாமல், காலையில் பிச்சையெடுத்து வரும் பணத்தில் மாலை சூதாடுவான். நீங்கள் அவனுக்குக் கொடுத்த பணம் வீணாகி போனது. அவனும் சூதாடி கெட்டுப் போனான்” என்றான்.

அதைக் கேட்ட தந்தை தன் மகனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.

இப்போது அவரது மகனுக்குத் தான் எப்படியிருக்க வேண்டுமென்று ஓரளவு புரிந்திருந்தது.

மறுநாளிலிருந்து தந்தையுடன் அவரது தொழிலைக் கவனிக்க உடன் செல்லத் தொடங்கினான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/parable/p1428.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License