இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

கடவுளை ஏமாற்றியக் கஞ்சன்


ஒரு ஊரில் எண்ணற்ற சொத்துக்களை வைத்திருந்த ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அவனிடம், அவ்வளவு சொத்துக்கள் வைத்திருந்தாலும், ஊருக்குள் யாரும் அந்தப் பணக்காரனை மதிப்பது இல்லை. ஏனென்றால், அவன் தன்னிடம் இருக்கும் சொத்துக்களைப் பயன்படுத்தி இதுவரை யாருக்கும் உதவி செய்ததே இல்லை. ஒரு கோயிலுக்குக் கூட அன்னதானம் செய்ததில்லை. ஏழை எளியவர்களுக்கு எந்தவொரு உதவியும் செய்ததில்லை. அவ்வளவு சொத்துக்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு தனியாக அனுபவித்து வந்தான். அதனால் ஊருக்குள் அனைவரும் அவனை மகாக் கஞ்சன் என்றே அழைத்தனர்.

அவன் முன் அவனுக்கு மரியாதை கொடுத்தாலும், அவனுக்குப் பின்னே அவனைத் தரக் குறைவாகவே மக்கள் பேசி வந்தனர். அதற்கு ஏற்றார் போலவே அவனும் நடந்து கொண்டான். மிகவும் சுயநலமாகவும் கஞ்சத்தனமாகவும் நடந்து வந்தான். ஒரு ரூபாய் கூட, மற்றவர்களுக்காகச் செலவு செய்ய மனம் வந்தது இல்லை அவனுக்கு...

அந்த நிலையில்தான் அந்தப் பணக்காரன் ஒருநாள் பக்கத்து நாட்டிற்கு சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவனுக்குக் கடல் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும். எப்பொழுதும், எங்கு சென்றாலும் பெரும்பாலும், அவன் கடல் வழிப் பயணத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் வழக்கம். அதுபோலவே அந்த முறையும் கடல் வழியாகவே அந்த நாட்டிற்கு செல்ல முடிவு எடுத்தான்.

அதற்காக ஒரு கப்பலில் ஏறினான். அந்தக் கப்பலில் அவனுடன் அந்த ஊர் மக்கள் பலரும் வந்தனர். அமைதியாக, அந்தக் கடல் பயணம் தொடங்கியது. ஒரு நாள் இரவு தென்றலுடன் அழகான நிலவைப் பார்த்துக் கொண்டே அந்த பணக்காரன் இரவைக் கழித்தான். மறுநாள் காலையில் கடலில் அலைகள் ஆவேசமாக வீசத் தொடங்கின. அனைவரும் சற்று பயம் கொள்ள ஆரம்பித்தனர். அப்பொழுது அந்த கப்பலும் ஆட்டம் காண ஆரம்பித்தது.

உடனே அனைவரும், கப்பலின் தலைவனிடம் சென்று, “ஏன் கடல் அலைகள் இவ்வளவு வேகமாக வீசுகிறது?” என்று கேட்டனர்.

அதற்கு அந்தத் தலைவனும், “புயல் வீசத் தொடங்கியுள்ளது. அதனால்தான், இவ்வளவு ஆக்ரோஷமாக அலைகள் அடிக்கன்றன. இந்தப் புயலில் இருந்து நாம் விடுபடுவது சற்று கடினம்தான். நாம் உயிர் பிழைப்பது இறைவனின் கையில்தான் இருக்கிறது” என்று கூறினான்.


அதைக் கேட்ட அனைவரும் நிலை தடுமாறி கதிகலங்கிப் போய் நின்றனர். என்ன செய்வது என்றேத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். தற்போது இருக்கும் ஒரே வழி இறைவனை வேண்டுவது ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டு அனைவரும் கடவுளை வணங்க ஆரம்பித்தனர்.

ஒவ்வொருவரும் தங்கள் வேண்டுதலைத் தொடங்கினர்.

கப்பலில் இருந்த அந்தக் கஞ்சனானப் பணக்காரனும் முதல்முறையாகத் தன் உயிருக்காக இறைவனிடம் வேண்டத் தொடங்கினான்.

எல்லோரும் அவரவர் தகுதிக்கு ஏற்றபடி, “நான் உனக்கு அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன்” என்று சொல்லிக் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.

“அந்தப் பணக்காரனோ தன்னிடம் நிறைய பணம் இருக்கிறது என்பதை மற்றவர்களுக்குக் காட்டவேண்டும்” என்று தன்னுடைய மதிப்பைக் கூட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, எல்லோர் முன்னிலையிலும் “இந்தக் கப்பல் புயலில் இருந்து தப்பித்தால், நான் என் பெரிய மாளிகையை விற்று, அந்தக் காசைக் கோயில் உண்டியலில் என்னுடைய காணிக்கையாகப் போடுகிறேன்” என்று வேண்டிக் கொண்டான்.

கேட்ட ஊர்மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் அந்தப் பணக்காரனை பார்த்தனர். இறைவனே, அவனை மாற்றியுள்ளார் என்று நினைத்தனர். அந்த புயல் வந்ததே இவனுடைய கஞ்சத்தனத்தை போக்குவதற்காகத்தான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் வேண்டியது போலவே புயலும் நின்றது. கப்பல் புயலில் இருந்து சேதம் எதுவும் இன்றி தப்பித்தது. கப்பலில் இருந்த மக்கள் யாருக்கும் எதுவும் நேரவில்லை.

அந்த நிமிடம் கஞ்சன் மனதில், அதாவது அந்த பணக்காரனின் மனதில் குடி கொண்டிருந்த நிம்மதியும் சேர்ந்தே போனது. ஏனென்றால், இந்தப் புயல் நின்று அவனுக்கு எதுவும் நேரவில்லை என்றால் அவன் தன்னுடைய பெரிய மாளிகையை விற்று அதனைக் கோயிலுக்கு கொடுப்பதாக வேண்டியதுதான்.

தற்போது அந்தக் கப்பலில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களும் அவனுடைய வேண்டுதலுக்கு சாட்சியாளர்கள். தற்பொழுது, அவனால் அந்த வேண்டுதலை மறைக்கவும் முடியவில்லை. எனவே, ஊருக்கு சென்றவுடன் அந்த மாளிகையை விற்றுத்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்தான்.

கப்பல் மீண்டும் அவனுடைய ஊருக்கேச் சென்றது. எல்லோர் முன்னிலையிலும் தன்னுடைய மாளிகையை விற்பதாக வேண்டிக் கொண்டதால், தற்போது அந்த மாளிகையை விற்க முடிவு செய்தான். இரவெல்லாம் தூக்கம் வரவில்லை எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். இறுதியில் ஒரு முடிவெடுத்து காலையில் சந்தைக்கு சென்று என்னுடைய மாளிகையை விற்கப் போகிறேன் என்றும் அறிவிப்பை வெளியிட்டான்.

தன்னுடைய மாளிகையின் அருகில் சென்று அங்கே ஒரு பலகையை வைத்து அதன் அருகில் ஒரு பூனைக் குட்டியையும் கட்டி வைத்தான். அந்தப் பூனை குட்டி அவன் ஆசை ஆசையாய் வளர்த்தது. அங்கே அவனிடம் அந்த மாளிகையை வாங்க வந்தவர்களிடம், அந்த மாளிகையின் விலை ஒரு ரூபாய் என்றும், அதன் அருகே அந்தப் பலகையில் கட்டப்பட்டிருக்கும் பூனைக்குட்டி 50 கோடி ரூபாய் என்றும் விலை வைத்திருந்தான். ஆனால், “மாளிகை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தப் பூனையையும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும் அப்படி வாங்கினால் தான் நான் இந்த மாளிகையைத் தருவேன்” என்றும் சொன்னான்.


தற்பொழுது ஒரு நபர் அந்த மாளிகையோடு பூனையையும் சேர்த்து 50 கோடியே ஒரு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டார். அப்பொழுது அவன் வேண்டிக் கொண்டது போல் மாளிகையை விற்ற அந்த ஒரு ரூபாயை மட்டும் கோயிலுக்குத் தானமாக வழங்கினான். அந்தப் பூனையை விற்ற 50 கோடி ரூபாயை அவனே வைத்துக் கொண்டான்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த ஊர் மக்கள் அவனை வித்தியாசமாகப் பார்த்தனர். சிலர், கடவுளையே ஏமாற்றியக் கஞ்சன் இவன் என்று சொல்லிச் சிரித்தனர்.

எப்படியோ, அவனது கஞ்சத்தனம் வென்றது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/parable/p1429.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License