வெகு நட்களாய் வேலை தேடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன், திடீரென ஒரு சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம் என்று எண்ணினான்.
ஆனால், அதற்கு முதலில் ஒரு முதலீடு வேண்டுமே, அதற்கு எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுதுதான் அவனுக்கு அவனுடைய தாத்தா கொடுத்த ஒரு பழைய புத்தர் சிலை ஒன்று நினைவிற்கு வந்தது. அது ஒரு ஆண்டிக் பீஸ் என்று தாத்தா அடிக்கடிக் கூறி வந்தார். அதுமட்டுமல்லாமல் அந்தச் சிலையை 5000 டாலர்களுக்கு விற்கலாம் என்றும் கூறிச் சென்றிருந்தார்.
அப்பொழுது அந்த இளைஞனுக்கு ஒரு யோசனை வந்தது.
அந்தப் புத்தர் சிலையை விற்றுவிட்டு அதன்மூலம் கிடைக்கும் 5,000 டாலரைக் கொண்டு தன்னுடையத் தொழிலைத் தொடங்கலாம் என்று எண்ணினான்.
முதல் வேலையாக தன்னிடம் இதுபோன்ற ஒரு ஆண்டிக் சிலை இருக்கிறது என்பதை ஆன்லைனில் பதிவு செய்தால், அதைப் பார்த்துவிட்டுப் பலரும் தன்னை தொடர்பு கொள்வார்கள் என்று எண்ணினான். அந்த இளைஞன் எண்ணியது போலவே நடந்தது, இந்தச் சிலையைப் பார்த்துவட்டு ஐந்தாறு நபர்கள் அவனுக்கு உடனடியாகப் போன் செய்தனர்.
ஆன்லைனில் பதிவு செய்த உடனேயே, அதாவது ஒரு ஐந்து நிமிடத்திலேயே ஒரு நபர் அந்த இளைஞனுக்குப் போன் செய்தார். அந்த நபர் தனக்கு இந்தச் சிலை வேண்டும் என்றும், எனக்கு இது மிகவும் பிடித்தது என்றும், இதை வெகுநாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார்.
நான் இதை ஆறாயிரம் டாலர் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறினார்.
அதைக் கேட்ட அந்த இளைஞன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். உடனே சரி என்று ஒப்புக் கொண்டான்.
மீண்டும் ஒரு 15 நிமிட இடைவெளியில் ஒரு நபர் போன் செய்தார். அந்த நபரும் முதலில் பேசிய நபர் போலவே, தனக்கு அந்தச் சிலை வேண்டும் என்றும் அது மிகவும் பிடித்திருக்கிறது என்றும் கூறித் தானும் அதை வாங்க விரும்புவதாகக் கூறினார்.
அந்த நபரிடம் அந்த இளைஞன் முதல் நபர் அதை 6000 டாலர் விலைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறினார் என்று கூறினான். அதற்கு அவர், நான் அதை 6500 டாலர்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார்.
500 டாலர்கள் அதிகமாக கிடைக்கிறது என்று அந்த நபருக்கு அந்த இளைஞன் சிலையை விற்கலாம் என்று நினைத்தான். அவரிடமும் சரி என்று ஒப்புக் கொண்டான்.
அடுத்து, இதே போல் மீண்டும் 15 நிமிட இடைவெளியில் ஒரு நபர் போன் செய்தார்.
அந்த நபரும் முன்பு பேசிய நபர்கள் போலவே அந்தச் சிலை, தனக்கு வேண்டும் என்றும் அதை வாங்கிக் கொள்கிறேன் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
அதே போல் 15 நிமிட இடைவெளியில் மீண்டும் இரண்டு நபர்கள் போன் செய்து, தங்களுக்கும் அந்தச் சிலை வேண்டும் என்றனர்.
தன்னுடைய சிலையைப் போட்டி போட்டு வாங்குவதற்கு ஆட்கள் குவிந்து கொண்டிருப்பதைப் பார்த்த அந்த இளைஞன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.
அவன் தொடர்பு கொண்ட 5 நபர்களையும் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்தான்.
அதில் யார் அதிகபட்ச விலையைத் தருகிறார்களோ, அவர்களுக்கே அந்தச் சிலையை விற்று விடலாம் என்றும் முடிவெடுத்தான்.
முதலில் ஒவ்வொரு நபராக வரவழைக்கலாம் என்று எண்ணினான். முதல் நபரும் அவன் சொன்ன நேரத்திற்கு வீட்டிற்கு வந்தார். அவர் அந்தச் சிலையை நேரில் பார்த்துவிட்டு, அந்த இளைஞரிடம் பேசினார். தம்பி இந்தச் சிலை நானும் நீயும் எண்ணியது போல் ஒரு ஆன்டிக் சிலை அல்ல. இது ஒரு டுப்ளிகேட் அதாவது பொய்யான சிலை. இதற்கு இவ்வளவு விலை கிடையாது. இதன் விலை வெறும் 500 டாலர்கள் என்று கூறினார். இந்த ஆண்டிக் சிலை உண்மையில் பொய்யானது என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.
அடுத்ததாக, அந்த இளைஞனை தொடர்பு கொண்ட இரண்டாவது நபரும் வீட்டிற்கு வந்தார். அந்தச் சிலையைப் பார்த்துவிட்டு, அந்த இளைஞரிடம் முதல் நபர் கூறியது போலவே, தம்பி இந்தச் சிலை ஆண்டிக் சிலை உண்மையானது அல்ல, பொய்யான சிலைதான். இதற்கு மார்க்கெட்டில் இவ்வளவு விலை இல்லை என்று கூறினார். நான் இந்தச் சிலையை 600 டாலர்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறினார்.
அந்த இளைஞனுக்குத் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. தன்னுடைய தாத்தா சொன்னது பொய்யோ என்று எண்ணினான். இருந்தாலும் ஓரத்தில் இந்த சிலை ஆண்டிக்சிலை தான் என்று தாத்தா கூறியது இன்னமும் அவனுக்குள் உறுத்தியது. அந்தச் சிலையின் மீது அவனுக்கு நம்பிக்கை கொஞ்சம் இருந்து கொண்டுதான் இருந்தது. அதனால் அடுத்தடுத்த நபர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கலாம் என்று எண்ணினான்.
அடுத்ததாக, மூன்றாவது நபரும் வந்து பார்த்தார். அவருக்கும் அந்தச் சிலை பொய்யானது என்று தெரிந்தது. அவரும் அந்த இளைஞரிடம், தம்பி இந்தச் சிலை பொய்யானது என்று கூறிவிட்டு இந்தச் சிலையை நான் 700 டாலர்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினான். அதைக் கேட்ட இளைஞனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதனால் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து போய் இருந்தான்.
நான்காவது நபரும் ஐந்தாவது நபரும் அதையேத் திரும்பத் திரும்பச் சொல்ல, தன் சிலை பொய்யானது என்று அந்த இளைஞனும் நம்பினான்.
எனவே, கடைசியாக வந்த வியாபாரியிடம் தன்னுடைய சிலையை வெறும் 800 டாலருக்கு விற்று விட்டான். ஏனெனில், கடைசியாக வந்த வியாபாரி மட்டும்தான் 800 டாலர்கள் அதாவது 100 டாலர் மற்றவர்களை விட அதிகமாகக் கேட்டதால் அந்த இளைஞன் அந்தச் சிலையை அந்த வியாபாரியிடம் விற்று விட்டான்.
சிலை விற்ற காசு அவனுடைய தொழிலுக்கு உதவவில்லை. அது அவனுடைய தனிச் செலவுக்கு மட்டுமேச் சரியாக இருந்தது. தன்னுடைய தாத்தாவின் பெயரில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த அந்த இளைஞனுக்குப் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. சில நாட்கள் இந்த ஏமாற்றத்தை நினைத்து வருந்திய இளைஞன், பிறகு பழைய நிலைக்குத் திரும்பி மீண்டும் சொந்தத் தொழில் தொடங்குவதற்கான வேலைகளைத் தொடங்கினான். ஆனால், வேண்டிய பணம் புரட்டுவதற்கு அவனுக்கு ஆளும் இல்லை, என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கிய நிலையில் வீதியில் நடந்து சென்றான்.
ஒரு நாள் தன் நண்பர்களுடன் அந்த இளைஞன் ஒரு பொருட்காட்சிக்கு சென்றான். அப்பொழுது மிகவும் பழமையான பொருட்கள் விற்கும் ஒரு கடையைப் பார்த்தான். அதன் முன் பகுதியில் அதாவது பார்வையாளர்களுக்கு எட்டும்படியாக வைத்திருக்கும் கண்ணாடி குவளையினுள் ஒரு புத்தர் சிலை இருப்பது அவனுக்கு தெரிந்தது. அதைப் பார்த்த இளைஞனுக்கு தன்னுடைய புத்தர் சிலை நினைவுக்கு வந்தது.
திடீரென அந்த இளைஞனுக்கு ஒரு சந்தேகம் முளைத்தது. இந்தக் கடையில் இருக்கும் அந்த புத்தர் சிலை தன்னுடைய சிலையாக இருக்குமோ என்று சற்று யோசித்துப் பார்த்தான். அடுத்த நொடியே, அந்தக் கடையினுள் நுழைந்தான்.
அங்கு இருந்த உரிமையாளரிடம் அந்த சிலையை பார்ப்பதற்கு அனுமதி கேட்டான். பின்பு, அந்தச் சிலையிடம் சென்று அது தன்னுடைய சிலையா? என்று பார்த்தான்.
தன்னுடைய தாத்தா தனக்கு அந்த சிலையை கொடுத்து பொழுது அந்த சிலையின் அடிப்பகுதியில் ஒரு அம்புக்குறி இருப்பதை அவன் கவனித்து இருந்தான். அதே அம்புக்குறி இந்த சிலையிலும் இருக்கிறதா என்று நிதானித்து பார்த்தான். அந்த இளைஞனுக்கு தூக்கிவாரிப் போட்டது. ஏனென்றால் அந்தக் கடையில் இருக்கும் புத்தர் சிலை அவனுடைய சிலைதான் என்பது இப்போது அவனுக்கு புரிந்தது. அந்த இளைஞனுக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏனென்றால் அந்த சிலையின் விலை 6000 டாலர்கள் என்று போட்டிருந்தது. வெறும் 800 டாலர்களுக்கு விற்ற அவனுடைய புத்தர் சிலை அந்த கடையில் 6 ஆயிரம் டாலர்களுக்கு என்று எழுதி இருப்பதை அவனால் நம்ப முடியவில்லை.
தன்னை ஒருவர் நன்றாக ஏமாற்றி விட்டார் என்பதை உணர்ந்த இளைஞன் மிகுந்த கோபப்பட்டான். அந்தக் கடையை சுற்றிமுற்றிப் பார்த்தான் அப்பொழுதுதான் ஒன்றைக் கண்டுபிடித்தான். அந்தக் கடையில் வேலை பார்க்கும் ஒரு நபர்தான் தன்னுடைய சிலையை வாங்கியவர் என்பதையும் கண்டு விட்டான். பின்பு, அந்தக் கடையின் உரிமையாளர் இடம் சென்று என்னுடைய சிலையை நீங்கள் ஏமாற்றி வாங்கி உள்ளீர்கள். அந்த நபர் என்னுடைய புத்தர் சிலையைப் பொய்யானது என்று கூறி, வெறும் 800 ரூபாய்க்கு வாங்கி வந்தார். நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என்று கூறினான்.
அதைக் கேட்ட கடையின் உரிமையாளர், தம்பி நாங்கள் உங்களை ஏமாற்றவில்லை. இது எங்களுடைய வியாபார யுக்தி. நாங்கள் எங்களுக்குத் தேவையான ஒரு பொருளைக் குறைந்த விலைக்கு வாங்குவதற்காக இதுபோல் சில தந்திரங்களைக் கையாளுவோம்.
உங்கள் வீட்டிற்கு வந்த அந்த ஐந்து வியாபாரிகளுமே எங்களுடைய ஆட்கள் தான். இது எங்களுடைய வியாபார யுக்திகளில் ஒன்று என்று கூறினார் கடையின் நிர்வாகி.
அதனைக் கேட்ட இளைஞன், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தான். அதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அந்த விரக்தியில், “ நீங்கள் இப்படிச் செய்தால் எல்லோரும் ஏமாந்து விடுவார்களே?” என்று கடையின் நிர்வாகியிடம் கேட்டான்.
அதற்கு அந்த நிர்வாகியும், “எப்படி தம்பி, எல்லோருமே ஏமாறுவார்கள்? "தான் வைத்துள்ள பொருளின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையும் அந்தப் பொருளைப் பற்றி தன்னிடம் இருக்கும் தெளிவும் அறிவும் உண்மையானது என்று முழுதாக நம்பும் ஒரு நபரால் எப்பொழுதும் ஏமாறவே முடியாது" என்றும், தன்னைப் பற்றியும், தன்னிடம் உள்ளவற்றைப் பற்றியும் தெளிவான அறிவும் நம்பிக்கையும் கொண்ட ஒரு மனிதன் எப்பொழுதுமே ஏமாற மாட்டான்” என்று கூறினார்.
“உங்களிடம், உங்கள் பொருளின் மீதும், அதை உங்களுக்கு கொடுத்த உங்கள் தாத்தாவின் மீதும், நம்பிக்கை சற்றுக் குறைவாக இருந்ததால், நீங்கள் ஏமாந்து விட்டீர்கள் அவ்வளவுதான்” என்றார்.
பெரும் விரக்தியுடன் அந்த வாலிபன் கடையை விட்டு வெளியே வந்தான்.
வாழ்க்கையில் தன் மீதும், தனக்கு நன்றாக தெரிந்தவற்றின் மீதும் நம்பிக்கை இழந்தால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து மனம் வருந்தினான்.