இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

நம்பிக்கை கொள்!


வெகு நட்களாய் வேலை தேடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன், திடீரென ஒரு சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம் என்று எண்ணினான்.

ஆனால், அதற்கு முதலில் ஒரு முதலீடு வேண்டுமே, அதற்கு எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுதுதான் அவனுக்கு அவனுடைய தாத்தா கொடுத்த ஒரு பழைய புத்தர் சிலை ஒன்று நினைவிற்கு வந்தது. அது ஒரு ஆண்டிக் பீஸ் என்று தாத்தா அடிக்கடிக் கூறி வந்தார். அதுமட்டுமல்லாமல் அந்தச் சிலையை 5000 டாலர்களுக்கு விற்கலாம் என்றும் கூறிச் சென்றிருந்தார்.

அப்பொழுது அந்த இளைஞனுக்கு ஒரு யோசனை வந்தது.

அந்தப் புத்தர் சிலையை விற்றுவிட்டு அதன்மூலம் கிடைக்கும் 5,000 டாலரைக் கொண்டு தன்னுடையத் தொழிலைத் தொடங்கலாம் என்று எண்ணினான்.

முதல் வேலையாக தன்னிடம் இதுபோன்ற ஒரு ஆண்டிக் சிலை இருக்கிறது என்பதை ஆன்லைனில் பதிவு செய்தால், அதைப் பார்த்துவிட்டுப் பலரும் தன்னை தொடர்பு கொள்வார்கள் என்று எண்ணினான். அந்த இளைஞன் எண்ணியது போலவே நடந்தது, இந்தச் சிலையைப் பார்த்துவட்டு ஐந்தாறு நபர்கள் அவனுக்கு உடனடியாகப் போன் செய்தனர்.

ஆன்லைனில் பதிவு செய்த உடனேயே, அதாவது ஒரு ஐந்து நிமிடத்திலேயே ஒரு நபர் அந்த இளைஞனுக்குப் போன் செய்தார். அந்த நபர் தனக்கு இந்தச் சிலை வேண்டும் என்றும், எனக்கு இது மிகவும் பிடித்தது என்றும், இதை வெகுநாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார்.

நான் இதை ஆறாயிரம் டாலர் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறினார்.

அதைக் கேட்ட அந்த இளைஞன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். உடனே சரி என்று ஒப்புக் கொண்டான்.

மீண்டும் ஒரு 15 நிமிட இடைவெளியில் ஒரு நபர் போன் செய்தார். அந்த நபரும் முதலில் பேசிய நபர் போலவே, தனக்கு அந்தச் சிலை வேண்டும் என்றும் அது மிகவும் பிடித்திருக்கிறது என்றும் கூறித் தானும் அதை வாங்க விரும்புவதாகக் கூறினார்.

அந்த நபரிடம் அந்த இளைஞன் முதல் நபர் அதை 6000 டாலர் விலைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறினார் என்று கூறினான். அதற்கு அவர், நான் அதை 6500 டாலர்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார்.

500 டாலர்கள் அதிகமாக கிடைக்கிறது என்று அந்த நபருக்கு அந்த இளைஞன் சிலையை விற்கலாம் என்று நினைத்தான். அவரிடமும் சரி என்று ஒப்புக் கொண்டான்.

அடுத்து, இதே போல் மீண்டும் 15 நிமிட இடைவெளியில் ஒரு நபர் போன் செய்தார்.

அந்த நபரும் முன்பு பேசிய நபர்கள் போலவே அந்தச் சிலை, தனக்கு வேண்டும் என்றும் அதை வாங்கிக் கொள்கிறேன் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

அதே போல் 15 நிமிட இடைவெளியில் மீண்டும் இரண்டு நபர்கள் போன் செய்து, தங்களுக்கும் அந்தச் சிலை வேண்டும் என்றனர்.

தன்னுடைய சிலையைப் போட்டி போட்டு வாங்குவதற்கு ஆட்கள் குவிந்து கொண்டிருப்பதைப் பார்த்த அந்த இளைஞன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

அவன் தொடர்பு கொண்ட 5 நபர்களையும் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்தான்.

அதில் யார் அதிகபட்ச விலையைத் தருகிறார்களோ, அவர்களுக்கே அந்தச் சிலையை விற்று விடலாம் என்றும் முடிவெடுத்தான்.


முதலில் ஒவ்வொரு நபராக வரவழைக்கலாம் என்று எண்ணினான். முதல் நபரும் அவன் சொன்ன நேரத்திற்கு வீட்டிற்கு வந்தார். அவர் அந்தச் சிலையை நேரில் பார்த்துவிட்டு, அந்த இளைஞரிடம் பேசினார். தம்பி இந்தச் சிலை நானும் நீயும் எண்ணியது போல் ஒரு ஆன்டிக் சிலை அல்ல. இது ஒரு டுப்ளிகேட் அதாவது பொய்யான சிலை. இதற்கு இவ்வளவு விலை கிடையாது. இதன் விலை வெறும் 500 டாலர்கள் என்று கூறினார். இந்த ஆண்டிக் சிலை உண்மையில் பொய்யானது என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

அடுத்ததாக, அந்த இளைஞனை தொடர்பு கொண்ட இரண்டாவது நபரும் வீட்டிற்கு வந்தார். அந்தச் சிலையைப் பார்த்துவிட்டு, அந்த இளைஞரிடம் முதல் நபர் கூறியது போலவே, தம்பி இந்தச் சிலை ஆண்டிக் சிலை உண்மையானது அல்ல, பொய்யான சிலைதான். இதற்கு மார்க்கெட்டில் இவ்வளவு விலை இல்லை என்று கூறினார். நான் இந்தச் சிலையை 600 டாலர்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறினார்.

அந்த இளைஞனுக்குத் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. தன்னுடைய தாத்தா சொன்னது பொய்யோ என்று எண்ணினான். இருந்தாலும் ஓரத்தில் இந்த சிலை ஆண்டிக்சிலை தான் என்று தாத்தா கூறியது இன்னமும் அவனுக்குள் உறுத்தியது. அந்தச் சிலையின் மீது அவனுக்கு நம்பிக்கை கொஞ்சம் இருந்து கொண்டுதான் இருந்தது. அதனால் அடுத்தடுத்த நபர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கலாம் என்று எண்ணினான்.

அடுத்ததாக, மூன்றாவது நபரும் வந்து பார்த்தார். அவருக்கும் அந்தச் சிலை பொய்யானது என்று தெரிந்தது. அவரும் அந்த இளைஞரிடம், தம்பி இந்தச் சிலை பொய்யானது என்று கூறிவிட்டு இந்தச் சிலையை நான் 700 டாலர்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினான். அதைக் கேட்ட இளைஞனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதனால் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து போய் இருந்தான்.

நான்காவது நபரும் ஐந்தாவது நபரும் அதையேத் திரும்பத் திரும்பச் சொல்ல, தன் சிலை பொய்யானது என்று அந்த இளைஞனும் நம்பினான்.

எனவே, கடைசியாக வந்த வியாபாரியிடம் தன்னுடைய சிலையை வெறும் 800 டாலருக்கு விற்று விட்டான். ஏனெனில், கடைசியாக வந்த வியாபாரி மட்டும்தான் 800 டாலர்கள் அதாவது 100 டாலர் மற்றவர்களை விட அதிகமாகக் கேட்டதால் அந்த இளைஞன் அந்தச் சிலையை அந்த வியாபாரியிடம் விற்று விட்டான்.

சிலை விற்ற காசு அவனுடைய தொழிலுக்கு உதவவில்லை. அது அவனுடைய தனிச் செலவுக்கு மட்டுமேச் சரியாக இருந்தது. தன்னுடைய தாத்தாவின் பெயரில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த அந்த இளைஞனுக்குப் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. சில நாட்கள் இந்த ஏமாற்றத்தை நினைத்து வருந்திய இளைஞன், பிறகு பழைய நிலைக்குத் திரும்பி மீண்டும் சொந்தத் தொழில் தொடங்குவதற்கான வேலைகளைத் தொடங்கினான். ஆனால், வேண்டிய பணம் புரட்டுவதற்கு அவனுக்கு ஆளும் இல்லை, என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கிய நிலையில் வீதியில் நடந்து சென்றான்.

ஒரு நாள் தன் நண்பர்களுடன் அந்த இளைஞன் ஒரு பொருட்காட்சிக்கு சென்றான். அப்பொழுது மிகவும் பழமையான பொருட்கள் விற்கும் ஒரு கடையைப் பார்த்தான். அதன் முன் பகுதியில் அதாவது பார்வையாளர்களுக்கு எட்டும்படியாக வைத்திருக்கும் கண்ணாடி குவளையினுள் ஒரு புத்தர் சிலை இருப்பது அவனுக்கு தெரிந்தது. அதைப் பார்த்த இளைஞனுக்கு தன்னுடைய புத்தர் சிலை நினைவுக்கு வந்தது.

திடீரென அந்த இளைஞனுக்கு ஒரு சந்தேகம் முளைத்தது. இந்தக் கடையில் இருக்கும் அந்த புத்தர் சிலை தன்னுடைய சிலையாக இருக்குமோ என்று சற்று யோசித்துப் பார்த்தான். அடுத்த நொடியே, அந்தக் கடையினுள் நுழைந்தான்.

அங்கு இருந்த உரிமையாளரிடம் அந்த சிலையை பார்ப்பதற்கு அனுமதி கேட்டான். பின்பு, அந்தச் சிலையிடம் சென்று அது தன்னுடைய சிலையா? என்று பார்த்தான்.

தன்னுடைய தாத்தா தனக்கு அந்த சிலையை கொடுத்து பொழுது அந்த சிலையின் அடிப்பகுதியில் ஒரு அம்புக்குறி இருப்பதை அவன் கவனித்து இருந்தான். அதே அம்புக்குறி இந்த சிலையிலும் இருக்கிறதா என்று நிதானித்து பார்த்தான். அந்த இளைஞனுக்கு தூக்கிவாரிப் போட்டது. ஏனென்றால் அந்தக் கடையில் இருக்கும் புத்தர் சிலை அவனுடைய சிலைதான் என்பது இப்போது அவனுக்கு புரிந்தது. அந்த இளைஞனுக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏனென்றால் அந்த சிலையின் விலை 6000 டாலர்கள் என்று போட்டிருந்தது. வெறும் 800 டாலர்களுக்கு விற்ற அவனுடைய புத்தர் சிலை அந்த கடையில் 6 ஆயிரம் டாலர்களுக்கு என்று எழுதி இருப்பதை அவனால் நம்ப முடியவில்லை.

தன்னை ஒருவர் நன்றாக ஏமாற்றி விட்டார் என்பதை உணர்ந்த இளைஞன் மிகுந்த கோபப்பட்டான். அந்தக் கடையை சுற்றிமுற்றிப் பார்த்தான் அப்பொழுதுதான் ஒன்றைக் கண்டுபிடித்தான். அந்தக் கடையில் வேலை பார்க்கும் ஒரு நபர்தான் தன்னுடைய சிலையை வாங்கியவர் என்பதையும் கண்டு விட்டான். பின்பு, அந்தக் கடையின் உரிமையாளர் இடம் சென்று என்னுடைய சிலையை நீங்கள் ஏமாற்றி வாங்கி உள்ளீர்கள். அந்த நபர் என்னுடைய புத்தர் சிலையைப் பொய்யானது என்று கூறி, வெறும் 800 ரூபாய்க்கு வாங்கி வந்தார். நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என்று கூறினான்.

அதைக் கேட்ட கடையின் உரிமையாளர், தம்பி நாங்கள் உங்களை ஏமாற்றவில்லை. இது எங்களுடைய வியாபார யுக்தி. நாங்கள் எங்களுக்குத் தேவையான ஒரு பொருளைக் குறைந்த விலைக்கு வாங்குவதற்காக இதுபோல் சில தந்திரங்களைக் கையாளுவோம்.

உங்கள் வீட்டிற்கு வந்த அந்த ஐந்து வியாபாரிகளுமே எங்களுடைய ஆட்கள் தான். இது எங்களுடைய வியாபார யுக்திகளில் ஒன்று என்று கூறினார் கடையின் நிர்வாகி.

அதனைக் கேட்ட இளைஞன், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தான். அதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த விரக்தியில், “ நீங்கள் இப்படிச் செய்தால் எல்லோரும் ஏமாந்து விடுவார்களே?” என்று கடையின் நிர்வாகியிடம் கேட்டான்.


அதற்கு அந்த நிர்வாகியும், “எப்படி தம்பி, எல்லோருமே ஏமாறுவார்கள்? "தான் வைத்துள்ள பொருளின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையும் அந்தப் பொருளைப் பற்றி தன்னிடம் இருக்கும் தெளிவும் அறிவும் உண்மையானது என்று முழுதாக நம்பும் ஒரு நபரால் எப்பொழுதும் ஏமாறவே முடியாது" என்றும், தன்னைப் பற்றியும், தன்னிடம் உள்ளவற்றைப் பற்றியும் தெளிவான அறிவும் நம்பிக்கையும் கொண்ட ஒரு மனிதன் எப்பொழுதுமே ஏமாற மாட்டான்” என்று கூறினார்.

“உங்களிடம், உங்கள் பொருளின் மீதும், அதை உங்களுக்கு கொடுத்த உங்கள் தாத்தாவின் மீதும், நம்பிக்கை சற்றுக் குறைவாக இருந்ததால், நீங்கள் ஏமாந்து விட்டீர்கள் அவ்வளவுதான்” என்றார்.

பெரும் விரக்தியுடன் அந்த வாலிபன் கடையை விட்டு வெளியே வந்தான்.

வாழ்க்கையில் தன் மீதும், தனக்கு நன்றாக தெரிந்தவற்றின் மீதும் நம்பிக்கை இழந்தால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து மனம் வருந்தினான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/parable/p1431.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License