இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

தற்கொலை செய்து கொள்ளலாமா?


வாழ்க்கையே வெறுத்துப் போய், ஏன்? தான் வாழ்கிறோம் என்ற எண்ணத்தோடு மிகவும் மனமுடைந்து, வாழ்வில் இனி வாழ்வதற்கு எந்த காரணமும் தனக்கு இல்லை என்ற அளவுக்கு நொந்து போன ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொள்வதற்காக ஒரு பெரிய மலை உச்சியில் ஏறி நின்றான்.

அந்த மலையோப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அதன் உச்சியில் இருந்து, கீழே பார்த்தால் ஒரு பெரிய பள்ளத்தாக்கு தென்பட்டது. அந்தப் பள்ளத்தாக்கில் சூரியனின் நிழல் கூட பட்டதில்லை போல, ஏனென்றால் அவ்வளவு இருட்டாக இருந்தது. அந்த இளைஞன் தற்கொலை செய்து கொள்வதற்காக, அந்த மலை உச்சியை அடைந்து, குதிப்பதற்குக் கூட தைரியம் இன்றி மனதுக்குளாகவே ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்களை எண்ணிக் கொண்டிருந்தான். மூன்று என்று கூறியவுடன் குதிக்க வேண்டும். இதுதான் அவனுடைய மனக்கணக்கு.

ஆனால், விதி அவனுக்கு ஒரு கணக்கு வைத்திருந்தது. அவன் குதிக்கத் தயாராக நின்ற பொழுது, ஏதோ அசரீரி போன்று ஒரு குரல் கேட்டது.

“இளைஞனே நீ எப்படி இந்த மலை உச்சியை அடைந்தாய்? இது என்னுடைய மலை என்னுடைய அனுமதி இன்றி யாரும் இந்த மலைக்கு வரக்கூடாது. அப்படி இந்த மலைக்கு வர வேண்டும் என்றால் என்னுடைய அனுமதியை கட்டாயம் பெற்றாக வேண்டும். நீ என்னுடைய அனுமதியை பெறாமல் இந்த மலையை ஏறி விட்டாய். அதனால் உனக்கு நான் தண்டனை தரப் போகிறேன்” என்றது.

“சாவதற்குக் கூட என்னை நிம்மதியாகச் சாக விடமாட்டார்கள் போல் இருக்கிறதே! ஏன் இப்படி செய்கிறீர்கள்? நான் இங்கே தற்கொலை செய்துகொள்வதற்குத்தான் வந்தேன். என்னை நிம்மதியாகச் சாக விடுங்கள்” என்று கூறினான் அந்த இளைஞன்.

அதற்கு அந்தக் குரல், “நான் இந்த மலையின் தேவதை. இது என்னுடைய மலை. அதனால், நீ என் தண்டனையை அனுபவித்து தான் ஆகவேண்டும்” என்று கூறியது.

இளைஞனும் சரி என்று ஒப்புக் கொண்டான். ஏனென்றால் சாகத்தான் வந்திருக்கிறோம் அதற்கு முன் இந்த தண்டனையையும் அனுபவித்து விடுவோம் எவ்வளவு அனுபவித்து விட்டோம். இது என்ன? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

தேவதை அந்த இளைஞனை அழைத்துக் கொண்டு மலை உச்சியிலிருந்து கீழே இறங்கியது. சற்று கீழே ஒரு பக்கமாக இறங்கிய பொழுது அங்கு ஒரு குகை இருந்ததை இளைஞன் பார்த்தான். அந்தக் குகை இருக்கும் இடத்திற்கு இளைஞனை அழைத்து சென்றது அந்தத் தேவதை.

“இளைஞனே! இன்றிலிருந்து இன்னும் ஐம்பது நாட்களுக்கு, நீ இந்தக் குகைக்குள்தான் இருக்க வேண்டும். இந்தக் குகையில் உனக்குத் தேவையான அனைத்தும் உள்ளது. இன்னும் ஐம்பது நாட்களுக்கு, இந்த குகையில்தான் நீ வாழ்ந்தாக வேண்டும். நீ உள்ளே சென்றவுடன் இந்த குகையை நான் மூடி விடுவேன்” என்று கூறியது.

“இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஐம்பது நாட்களுக்கு உள்ளே தங்கி இருக்க வேண்டும் அவ்வளவுதானே” என்று கூறிக்கொண்டே அந்த இளைஞனும் குகைக்குள் சென்றான்.

இளைஞன் சென்றவுடன் அந்தத் தேவதை சொன்னது போலவேக் குகையை மூடியது.

அதேசமயம், உள்ளே சென்ற இளைஞனுக்குப் பலத்த ஆச்சரியம் காத்திருந்தது.

ஏனென்றால், அந்தக் குகைக்குள் அவனுக்குத் தேவையான உணவு, நீர், உறைவிடம் மற்றும் ஆடைகள் என அனைத்தும் இருந்தது. கூடவே, இன்னும் சில பொருட்களும் இருந்தன. அதையெல்லாம் பார்த்த இளைஞன் 50 நாட்களைச் சுலபமாகக் கடந்து விடலாம் என்று எண்ணினான். தேவதை விட்டுச்சென்ற 50 நாட்களும் சாப்பிட்டுச் சாப்பிட்டு தூங்கி நாட்களைக் கழித்தான்.

50வது நாள் முடிவடைந்ததும் தேவதை வந்து, குகையின் கதவை திறந்தது.


அப்போது அந்த இளைஞன் உடல் பெருத்துப் போய் அந்தக் குகையின் முன் இருந்தான்.

அதைப் பார்த்த தேவதை, “இளைஞனே, குகையில் அனுபவம் உனக்கு எப்படி இருந்தது?” என்று கேட்டது.

அதற்கு இளைஞனும், “நன்றாக இருந்தது. தினமும் நன்றாகச் சாப்பிட்டேன், நன்றாக உறங்கினேன், அவ்வளவுதான்” என்றான்.

“சரி இப்போது நீ எங்கே போகப் போகிறாய்?” என்று தேவதை கேட்டது.

அதற்கு இளைஞன், “தயவு செய்து என்னை விட்டுவிடு நான் மலையுச்சிக்குச் சென்று தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என்றான்.

அதற்கு தேவதை, “இளைஞனே! நீ என்ன செய்கிறாய், உன் வாழ்வை நீயே அழித்துக் கொள்ளப் போகிறாயா?” என்று கேட்டது.

“ஆமாம்! எனக்கு அவ்வளவு கஷ்டங்கள். வாழ்க்கையில் இனிமேல் நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்? அதனால் என்னை விட்டு விடு, நான் மலை உச்சிக்குச் சென்று கீழேக் குதிக்கப் போகிறேன்” என்றான்.

அதற்கு அந்த தேவதை, “இளைஞனே 50 நாட்கள், நான் கொடுத்த தண்டனையை ஏற்றுக் கொண்டாய். இப்பொழுது சில மணி நேரங்கள் என்னோடு வா, உனக்குச் சில காட்சிகளை நான் காட்ட வேண்டும்” என்றது.

அவனும், “சரி” என்று ஒப்புக் கொண்டான்.

தேவதை அந்த இளைஞனை அழைத்துக் கொண்டு மலை உச்சிக்குச் சென்றது. பின்பு மலையின் மற்றொரு பக்கத்துக்குக் கூட்டிச் சென்றது.

அங்கு மனிதர்களின் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது.

இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை. இளைஞன் ஏறி வந்த மற்றொரு பக்கத்தில் யாரும் இல்லை, அவன் ஆள் அரவமற்ற நிலையில் மலை ஏறினான். ஆனால், அதே மலையின் மற்றொரு புறத்தில் நிறைய மனிதர்கள் தென்படுகிறார்கள்.

“அங்கு அவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று தேவதையைப் பார்த்து இளைஞன் கேட்டான்.

அதற்கு அந்த தேவதை, “வா! என்னோடு நானேக் காண்பிக்கிறேன்” என்றது.

அவள் அந்த இளைஞனை அழைத்துக் கொண்டு மலையின் மற்றொரு பக்கத்தில் உள்ள அடிவாரத்திற்கு அழைத்துச் சென்றது.

அங்கு இளைஞனை அடைத்து வைத்த குகை போலவே இன்னும் மூன்று வகையான குகைகள் இருந்தன. அந்தக் குகைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு மிக்கதாக இருந்தது.

முதல் குகை ஓவியக் கூடமாக காட்சியளித்தது. இரண்டாவது குவை சிற்பக் கூடமாகக் காட்சி அளித்தது. மூன்றாவது குகை மூலிகைத் தோட்டமாக காட்சியளித்தது. அதனைப் பார்வையிட்டு செல்லவே நிறைய மக்கள் சுற்றுலாவிற்கு வந்து சென்றனர். அதையே தேவதை அவனுக்குக் காண்பித்தது.

தற்கொலை செய்து கொள்ள வந்த இளைஞனிடம் தேவதை சொல்ல ஆரம்பித்தது, இது என்னுடைய மலை. இங்கு என் அனுமதி இன்றி வருபவர்களுக்கு நிச்சயம் நான் தண்டனை தருவேன்.

முன்னொரு காலத்தில் இந்த மலை முழுவதும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்தது. அப்படி இந்த மலையில் இருக்கும் மூலிகைகளிலிருந்து சாறு எடுத்து ஓவியம் வரைய வந்தான் ஒருவன், அவனை உன்னை அடைத்து வைத்தது போல் ஒரு குகையில் தான் அடைத்து வைத்திருந்தேன். அதேபோல இந்த மலையில் இருக்கிற பாறைகளை பயன்படுத்தி அழகான சிற்பங்கள் செய்வதற்காக ஒருவர் வந்திருந்தார். அவருக்கும் அதே போல் ஒரு குகையில் 50 நாட்கள் சிறை வைத்திருந்தேன். மீண்டும் ஒரு மனிதன் இந்த மலையில் இருக்கும் மூலிகைச் செடிகளின் விதைகளை எடுத்து ஒரு மூலிகைத் தோட்டம் அமைப்பதற்காக வந்திருந்தான். அவனையும் அதேபோல் ஒரு குகையில் 50 நாட்கள் அடைத்து வைத்திருந்தேன்.

அந்த மூவரையும் அடைத்து வைத்து 50 நாட்கள் கழித்து அவர்களை விடுதலை செய்தபோது அந்த மூன்று குகைகளும் வெறும் குகைகளாக மட்டும் இல்லை. அந்த ஓவியனை அடைத்து வைத்திருந்த குகை, ஒரு அழகான ஓவியக் கூடமாக காட்சியளித்தது. அந்த சிற்பக் கலைகள் செய்பவனை அடைத்து வைத்திருந்த குகை, ஒரு அழகான சிற்ப கூடமாக காட்சியளித்தது. அந்த மூலிகை தோட்டம் அமைக்க வந்திருந்த மனிதனை அடைத்து வைத்திருந்த குகை, ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் மூலிகை தோட்டமாகக் காட்சியளித்தது. இதுவே, அந்த மூன்று குகைகளும் தோன்றியதன் வரலாறு.

இப்பொழுது உன்னுடைய நிலையை யோசித்துப் பார், அவர்களை அடைத்து வைத்திருந்தது போலவே உன்னையும் அதே மாதிரி ஒரு குகையில் தான் ஐம்பது நாட்கள் அடைத்து வைத்திருந்தேன். ஆனால், நீயோ உண்டு உறங்கி சொகுசாய் உன் நாட்களை கழித்து இருக்கிறாய். நான் இந்த மலைக்கு தற்கொலை செய்துகொள்வதற்காக வரும் அனைத்து மனிதர்களையும் அதே குகையில் தான் அடைத்து வைத்திருப்பேன். அந்த குகையில் உணவு உடை இருப்பிடம் சேர்த்து இன்னும் சில பொருட்களையும் நான் வைத்திருப்பேன். அதாவது அவரவர் திறமைக்கு ஏற்ற பொருட்களையும் நான் வைத்திருப்பேன். ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு வரும் பெருவாரியான மனிதர்கள் அந்தப் பொருட்களைப் பெரிதுபடுத்துவதில்லை. அவர்களின் எண்ணங்கள் வேறு எந்த பொருளின் மீதும் திரும்புவதே இல்லை. அவர்களின் எண்ணமெல்லாம் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதிலேயே இருக்கிறது. நான் கொடுத்த 50 நாட்களில் உன் திறமையைப் பயன்படுத்தி, அந்தக் குகையில் ஒரு மாற்றத்தை உன்னால் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், நீ அதுபோல் செய்யவில்லை. இப்பொழுது உனக்கு ஒன்று புரிகிறதா? நீ உன் பிரச்சனைகளுக்கு பயந்து தற்கொலை செய்துகொள்ள என் மலைக்கு வந்து இருக்கிறாய், நான் ஒன்று கூறுகிறேன் நன்றாகப் புரிந்து கொள்! நீ தற்கொலை செய்து கொள்வதற்கு வந்ததன் காரணம், உன்னுடைய பிரச்சனைகளால் அல்ல. உன்னுடைய பிரச்சனைகளை நீ பார்க்கும் விதம்தான் உன்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து இருக்கிறது.


வெறும் பிரச்சனைகளை மட்டுமேப் பார்த்துக் கொண்டிருந்தால், வாழ்க்கையில் விரக்திதான் மிஞ்சும். உன் வாழ்க்கையில் பிரச்சனைகளிடையே, அதைத் தீர்க்க சின்னச்சின்னதாய்க் கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும், அதன் நடுவேச் சின்னச்சின்னதாய்க் கிடைக்கும் மகிழ்சிகளையும் முழுவதுமாக அனுபவிக்க வேண்டும். இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் சரிபாதி. அதை அனுபவித்து மகிழ்வதே மனிதனின் நீதி. தேவதையின் இந்த வார்த்தைகளை உணர்ந்த வாலிபன் தன் முடிவை மாற்றிக் கொண்டான்.

நல்ல முறையில் தன் வாழ்க்கையை வாழத் தொடங்கினான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/parable/p1432.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License