இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

தன் மகிழ்ச்சிக்குப் பிறருக்குத் தொல்லை தரலாமா?


ஒரு காலத்தில், லியோயாங், சீனத் தலைநகராக இருந்தது. அது மிகவும் பரபரப்பான நகரமாக இருந்தது.

எல்லாத் திசைகளிலிருந்தும் மக்கள் இந்த நகருக்கு வந்த வண்ணம் இருந்தனர். வியாபாரிகள் பட்டும் தேயிலையும் விற்க வந்தனர். மாணவர்கள் அரசுத் தேர்வு எழுதி, வாழ்வில் வெற்றி பெறும் கனவுகளோடு வந்தனர். பெற்றோர் குழந்தைகளுடன் சிங்க நடனம், நாட்டியம், உடற்பயிற்சி நிகழ்வு, பொம்மலாட்டம் என்று பல்வேறு நிகழ்வுகளைக் காண வந்தனர். விதவிதமான உணவு வகைகளை உண்டு மகிழ பலரும் வந்தனர்.

தலைநகரை அடைய பெரிய கதவுகள் இருந்தன. அந்தக் கதவுகளுக்கு முன் மிகப் பெரிய அகண்ட நதி ஒன்று இருந்தது. நதியைக் கடக்கப் பல படகுகள் இருந்தன. வண்ணமயமாய், பல்வேறு அலங்கார வளைவுகளுடன் அவை அமைக்கப்பட்டிருந்தன. மீன், வாத்து, சிங்க முகம் என்று படகுகள் பலவிதமாய் அனைவரையும் கவரும் விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நதியைக் கடக்க, மக்கள் இந்தப் படகுகளில் கூட்டம் கூட்டமாக ஏறிச் சென்றனர். குழந்தைகள் படகுகளில் பயணம் செய்யும் ஆர்வத்துடன் காத்துக் கிடந்தனர்.

படகில் செல்லும் போது, அனைவரும் அமைதியான நதியைக் கண்டு மகிழ்ந்தார்கள். அதன் அழகை ரசித்தார்கள். எடுத்து வந்த உணவுப் பொருட்களை உண்டார்கள்;. படகிலேயே விளையாட்டுக்கள் விளையாடினார்கள். பாடல்கள் பாடிச் சென்றார்கள்.

அமைதியாக ஓடிக் கொண்டிருந்த நதிக்கு அன்று ஏனோ ஆயிற்று. நதி அரசன் அமைதி குலைந்தது. கடுங்கோபத்துடன் எழுந்தான். மக்கள் அனைவரும் பயப்படும் வண்ணம் பெரிய அலைகளை எழுப்பினான். அந்த அலைகளில் படகுகள் மாட்டிக் கொண்டு தவித்தன. படகில் இருந்த பெரியவர்கள், குழந்தைகள் அனைவரும் அலறினர். தவிக்கும் மக்களைக் கண்டு, நதி அரசன் மிகவும் மகிழ்ந்தான். மேலும் மேலும் பெரிய அலைகளை உண்டாக்கிப் பெரும் தொல்லைகள் கொடுத்தான். நதி அரசனுக்கு அன்று செய்த செயல்கள் பெருமகிழ்ச்சி கொடுத்தது.

அதனால் அந்த நாள் முதல், மக்கள் அல்லல்படுவதைக் கண்டு ரசிக்க நதி அரசன் பெரிதும் விரும்ப ஆரம்பித்தான். தினம் பெரிய அலைகளை எழுப்பி விளையாட ஆரம்பித்தான்.

ஒரு நாள், ஒரு சிறுமி, படகிலிருந்து விழுந்து, நதியில் மூழ்கி, தவித்து, கஷ்டப்பட்டுக் கரையேறினாள். அந்த ஏழைச் சிறுமி அப்போது தின்று கொண்டிருந்த அரிசி உருண்டை நதியோடு சென்றது. அவளுடைய பூனையும் நதியில் விழுந்து சிக்கித் தவித்தது. அரிசி உருண்டை, பூனை இரண்டையும் இழந்த சிறுமி, ஓவென்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். அவளது அழுகுரல் கருணை தெய்வம் குவான் யின்-னுக்கு கேட்டது. இனியும் நதியரசன் அட்டகாசம் மக்களைச் சேரக் கூடாது என்று முடிவு செய்து, உதவி செய்ய எண்ணினார்.

கருணை தெய்வம் சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்து, பெரும் அலைகளை எழுப்பிய வண்ணம் இருக்கும் நதிக்கரையை அடைந்தார். நதியை நோக்கி, "நதி அரசனே! நதி அரசனே! தயவு செய்து வெளியே வா. நான் உன்னோடு பேச வேண்டும்" என்றார்.

சுவையான உணவு உண்டு கொண்டிருந்த நதி அரசனுக்கு இந்தக் குரல் கேட்டது. வெறுப்புடன் எழுந்து, நீருக்கு வெளியே வந்தான்.



குவான் யின் முகம் மலர்ந்து, மிகவும் பணிவுடன், "நதி அரசனே.. மக்களுக்கு அல்லல் தரும் இந்தப் பெரிய அலைகளை எழுப்பாமல் நிறுத்த வேண்டும். அலைகள் பார்ப்பதற்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். ஆனால் எத்தனை பேர் அதில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள் தெரியுமா?" என்று அமைதியாகக் கருணையோடு கேட்டார்.

"ஹா.. ஹா.. ஹா.. " என்று நதி அரசன் தன் தாடி குலுங்கச் சிரித்தான். "அழகிய பெண்ணே.. உனக்கு ஒன்று தெரியுமா? இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. விழுவதைக் கண்டு சிரிக்காமல் இருப்பவரும் உண்டோ?" என்று தன் விருப்பத்தை எடுத்துக் கூறினான் நதி அரசன்.

இதைக் கேட்டு குவான் யின் பொறுமையாக இருக்க முயன்றார். வரும் கோபத்தை அடக்கிக் கொண்டு, "உன்னுடைய மகிழ்ச்சிக்காக அடுத்தவர்களை தவிக்க வைப்பது சரியா?" என்று கேட்டார்.

"ஹா.. ஹா.. ஹா.. எனக்கென்ன வந்தது. எனக்கு இது ரொம்பவும் பிடிக்கிறது!" என்று கூறி, நதி அரசன் கருணை தெய்வத்தின் வார்த்தைகளை ஏற்க மறுத்தான். தன்னுடைய சக்தி அனைத்தையும் வெளிக்காட்டத் துணிந்தான். இடி போன்று சிரித்து, மலையளவு உயரமான அலைகளை எழுப்பினான்.

குவான் யின்-னுக்கு நதி அரசனின் செயல் ஏமாற்றத்தைத் தந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் சொர்க்கத்திற்குத் திரும்பினார். வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்போது ஒரு யோசனை தோன்றியது.

திரும்பவும் மறு நாள் அதே இடத்திற்கு வந்தார். அழகிய பெண்ணாக மாறினார். மீன்காரப் பெண்ணின் உடையில், மீன் கூடையோடு நின்றார். நேரே சந்தைக்குச் சென்றார். மிகவும் கூட்டமான இடத்தில் தன் கூடையை வைத்தார். மீன்களைத் தரையில் பரப்பி வைத்தார். பெண் மிகவும் அழகாக இருந்ததாலும், மீன்கள் மிகவும் நன்றாக இருந்ததாலும், அவரைச் சுற்றி பலரும் கூட ஆரம்பித்தனர்.

எல்லோரும் மீனவப் பெண்ணைப் பார்க்க விரும்பினர். சிறிது நேரத்திலேயே அத்தனை மீன்களும் விற்றுப் போயின. இருந்தாலும் மக்கள் அவளைச் சுற்றி நின்றனர். அவளது அழகிய கண்களால் அனைவரையும் நோக்கி, "அன்பார்ந்த மக்களே! என்னிடம் இருந்த மீன்கள் விற்று விட்டன. அதனால் நாம் ஒரு விளையாட்டு விளையாடலாமா?" என்று கேட்டாள்.

கூட்டம் அமைதியாக இருந்தது.

பதில் வராதது கண்டு, அவளே தொடர்ந்து, "யார் என்னுடைய கூடையிலே அதிக பணத்தைப் போடுகிறார்களோ, அவர் என்னை மணக்கலாம். ஆனால் கூடையில் விழாத பணம் அத்தனையும் எனக்கு" என்று மீனவப் பெண் கூறினாள்.

கூட்டத்தில் அனைவரும் ஆரவாரம் செய்தனர்.



ஒரு இளைஞன் மீனவப் பெண்ணை சந்தேகத்துடன் பார்த்தான். "உன்னால் எப்படி அதிகப் பணம் போட்டவரைக் கண்டு பிடிக்க முடியும்?" என்று கேட்டான்.

மிகவும் கிழிந்த உடையோடு இருந்த இன்னொரு இளைஞன், "என்னிடமோ பணம் ஏதுமில்லை. அவளை மணக்க எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை" என்றான் ஆதங்கத்துடன்.

இன்னொருவன், "இந்தக் கூடை தான் பெரியதாக இருக்கிறதே.. எறியும் காசு எப்படி அதில் விழாமல் போகும்" என்று தன் பங்கிற்கு தன் கருத்தைக் கூறினான்.

அனைவரும் தங்கம், வெள்ளி, பித்தளை காசுகளை எடுத்து, மீனவப் பெண்ணின் கூடையில் எறிய ஆரம்பித்தனர். ஆனால் என்ன அதிசயம்! காசுகளுக்கு கண்கள் இருந்தன போலும். எந்தவொரு காசும் கூடைக்குள் சென்று விழவேயில்லை. அனைத்தும் கூடையைச் சுற்றியே விழுந்தன.

இருந்தாலும் ஆசை யாரை விட்டது? அழகிய பெண்ணை மணக்கும் ஆசையில் அனைவரும் காசுகளை எறிந்து முயன்றனர்.

வேண்டிய மட்டும் காசுகள் சேர்ந்தும் அதை அழகிய பாலம் கட்டக் கொடுத்தாள் மீனவப் பெண். ஒரு வருடத்தில் லியோயாங் நதியில் ஒரு அழகிய பாலம் கட்டப்பட்டது.

நதி அரசன் இன்னமும் பெரிய அலைகளை எழுப்பிய வண்ணமே இருந்தான். ஆனால், அதனால் மக்களுக்கு ஏதும் தொந்தரவு இருக்கவில்லை. தாத்தா, பாட்டி, பெற்றோர், குழந்தை, நாய், பூனை என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் இந்தப் பாலத்தில் நடந்து, நதியைக் கடந்தனர். இதைக் கண்டு கருணைக் கடவுள் குவான் யின் மகிழ்ச்சியுடன் சொர்க்கத்திற்குத் திரும்பினார்.

-சீன நாட்டுக் கதை

-சித்ரா சிவக்குமார், ஹாங்காங்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/parable/p161.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License