இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Quotes
பொன்மொழிகள்

வானியல் பழமொழிகள்


இங்கு பயிர் - உழவு, மின்னல், இடி, துாற்றல், காற்று, திசைகள், வானம், செவ்வானம், வானவில், அடைமழை, மழை, அந்தி மழை, வசந்த காலம் - மழை, நிலையற்ற - மழை, விவசாயம் - பனி - மழை ஆகியவை குறித்த பழமொழிகளைக் காண்போம்.

பயிர் - உழவு

* முக்கூட்டுப் பயிர் வாழ்.

* அகல உழுவதை விட ஆழ உழு.

* அதிர அடித்தால் உதிர விளையும்.

* சனிப்பயிர் சாத்திரத்திற்கு உதவும்.

* நட்டன்று மழையும் கெட்டன்று விருந்தும்.

* மாதம் மும்மாரி பெய்தால் முப்போகம் விளையும்; மாதம் ஒரு மாரி பெய்தால் இரு போகம் விளையும். மூன்று மாதத்திற்கு ஒரு மாரி பெய்தால் ஒரு போகம் விளையும்.

* மழை காணாத பயிர் தாய் முகங்காணச்சேய் போல் வாடும்.

* மழை காணாத பயிர் தாய்முகங் காணாச் சேய் போல.

* அடை மழையில் நாற்று நட்டால் அவையெல்லாம் படுநாசம்.

* கார் அறுக்கட்டும்; கத்திரி பூக்கட்டும்.

* காலத்திற் பெய்த மழையைப் போல.

* உறவினர்க்கு உதவி செய்! - பருவ மழை பொய்த்தாலும் பெய்யும்.

* உரிய பருவ காலத்தில் மழை பெய்யாமற் போனாலும், பருவந் தவறியாவது மழை பெய்தே தீரும். அது போல், எப்போதும் எந்த உதவியையும் வேண்டிய காலத்தில் செய்யாதவர் எப்போதாவது உதவி செய்வார். எவரிடமும் எப்போதாவது உதவி பெறும் காலம் வரும் என்பது பாடற் கருத்து.

“ செய்யார் எனினும் தமர் செய்வர் பெய்யுமாம்; பெய்யாது எனினும் மழை .

* பிள்ளை பிறப்பதும், மழை பெய்வதும் மகாதேவரின் சித்தம்.

மின்னல் - இடி

* மின்னாமல் இடி விழுமா?

* மின்னினால் மழை பெய்யுமா?

* மின்னுக்குப் பின் மழை.

* மின்னலுக்குப் பின் மழை.

* ஈசானி மின்னலுக்கு எருதும் நடுங்கும்.

* கோடை இடியும் மாரி மின்னலும் மழை அதிகம்.

* பொழுத்துக்கால் மின்னல் விடியற்காலை மழை.

* ஈழமும் கொங்கும் எதிர்த்து மின்னினால் பள்ளத்திலிருக்கிற குடிலை மேட்டில் போடு.

* மின்னிக் கெட்டது கார் முழங்கிக் கெட்டது பிசானம்.

* மாரி இடியும் கோடை மின்னலும் மழை இல்லை.

* மின்னலால் தாக்குண்டவன் இடியோசையைக் கேட்க மாட்டான். உறங்கோரியன் பழமொழி.

* அருங்கோடை துரும்பு அற்றுப்போகுது ஆகாய வல்லிடி அதிர இடிக்கும்.

* இடியோசை கேட்ட பாம்பு (நாடகம்) போல.

* இடி விழுந்த மரம் போல ஏங்கினான்.

* இடி விழுவானுக்கு வாழ்க்கைப்பட்டு எந்நேரமும் இடி, ஜாமம்.

* இடிக்கிற மானம் பெய்யாது, குறைக்கிற நாய் கடிக்காது.

* கோடை இடியும் மாரி மின்னலும் மழை அதிகம்.

* மாரி மின்னலும் கோடை இடியும் மழை.

* தலையிடியும் சங்கடமும் தனக்கு வந்தால் தெரியும்.

* கோடையிடி குமுறினாற் போல. மின்னலுக்குப் பின் மழை.

* ஆகாய வல்லிடி அதிரடி இடிக்கும்.


துாற்றல்

* அழுகைத் தூத்தல் அவ்வளவும் பூச்சி.

* தரித்திறம் பிடித்தவள் தலை முழுகப் போனாளாம். அப்போதே பிடித்ததாம் மழையும், தூற்றலும்.

* தூற்றல் நின்றாலும் தூவானம் நில்லாது.

* விட்டு விட்டுப் பெய்யும் மழையை விட விடாமற் பெய்யும் தூவானம் நல்லது.

* தும்மலிலே போனாலும் தூற்றலிலே போகக் கூடாது.

* தூற்றல் நின்றாலும் தூவானம் நில்லாது.

* மழை விட்டும் தூவானம் விடவில்லை.

* மழை விழுந்தால் தாங்கலாம். வானம் விழுந்தால் தாங்கலாமா?

* மாரி அடைக்கில் ஏரி உடைக்கும்.

* காலை உப்பலும் கருத்தணி வெயிலும் மாலை மேகமும் மழைதனில் உண்டு

* மாரியல்லது காரியமில்லை.

* மாரி பொய்ப்பின் மண் பொய்க்கும்.

காற்று

* காலை மோடமும் கழுதை வாடையும் மாலைத் தென்றலும் மழையில்லை.

* தென்றலும் வாடையும் சிறக்கும் பயிர்கள்

* வடக்காற்றடித்தால் உடனே வரும் மழை.

* வட காற்றடித்தால் உடனே மழை.

* வடகாற்று அடிக்க வந்தது மழையே.

* வடகாற்று அடித்தால் மழை.

* மாரித் தென்றல் அடித்தால் மாட்டை விற்று ஆட்டை வாங்கு.

* கடுங்காற்று மழை காட்டும். கடுஞ்சினமே பகை காட்டும்.

* வடகாற்றடிக்க வந்தது மழையே.

* குமுறியடித்தால் காற்றுக்கு கை மேல் மழை.

* அந்தி கிழக்கு அதிகாலை மேற்கு.

* மூலக்காற்று புழு விழும்.

* ஓயா மழையும், ஒழியாக் காற்றும்.

* கடுங்காற்று மழை கூட்டும், கடும் சிநேகம் பகை கூட்டும்.

* காற்றுக்கோ மழைக்கோ போர்த்துக் கொள்ளத் துணியிருக்கா?

* காற்றும் மழையும் கலந்து அடித்ததைப் போல

* காற்றைப் பிடித்துக் கரகத்தில் அடைக்கலாமா?

* காற்றோடு வந்து மழையோட போயிற்று.

* தும்மலிலே போனாலும் காற்றிலிலே போகக் கூடாது.

* கடுங்காற்று மழை காட்டும்; கடுநட்புப் பகை காட்டும்.

* தென்றல் தெறிபட்டுப் போகும். தென்றல் காற்று மேகத்தைக் கலைத்து விடும்.

* கச்சானுக்கு மச்சான் மழை. (கச்சான் என்பது மேல் காற்று)

* கொம்பு சுற்றிக் காற்றடித்தால் மழை வரும்.

* அடிக்கிற காற்றுக்கும் பெய்கிற மழைக்கும் பயப்படு.

* வடக்கே கறுத்தால் மழை வரும்.


திசைகள்

* தன் ஊர் கிழக்கு; தங்கின ஊர் மேற்கு. வேட்டகம் தெற்கு. வேண்டாத ஊர் வடக்கு (தலை வைத்துப் படுக்கும் திசை)

* மேற்கே மழை பெய்தால் கிழக்கே வௌ்ளம் வரும்.

வானம்

* விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.

* வானம் அதிர்ந்தால் மழை.

* அடிவானம் கருக்கின் அப்போதே மழை.

* அடிவானங் கறுத்தால் அப்போதே மழை.

“ வடக்கே கறுத்தால் மழை வரும்.

* அடி வானங் கறுத்தால் ஆண்டை வீடு வறுக்கும்.

* வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.

* ஆகாயம் மணற்கொளித்திருந்தால் அப்போதே மழை.

* காய்ந்த வானம் பெய்தால் விடாது.

* காய்ந்தும் கெடுத்தது வெயில் பேய்ந்தும் கெடுத்தது மழை.

* மானம் அதிர்ந்தால் மழை பெய்யும். குமுறல் மழைக்கு அறிகுறியாகும்.

* ஆகாயம் பெற்றது பூமி தாங்கினது.

* காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது.

* வானமே ஈன்றது பூமியே தாங்கிற்று.

* வானம் சுரக்க தானம் சுரக்கும்.

* வானம் வழங்கத் தானம் வழங்கும்.

* காய்ந்த வானம் பேய்ந்தாலும் விடாது.

* காய்ந்தும் கெடுத்தது பேய்ந்தும் கெடுத்தது.

* மாரி பொய்ப்பின் மண் பொய்க்கும், வானஞ் சுருங்கின் தானஞ் சுருங்கும்

* விட்டு விட்டுப் பெய்கிற மழையினும் விடாமல் பெய்கிற தூவானம் நல்லது.
செவ்வானம்

* காலைச் செவ்வானம் கடுக மழை. அந்திச் செவ்வானம் அப்போதே மழை.

* அஸ்த செவ்வானம் அடைமழைக்கு லட்சணம்.

* காலையில் செம்மாணம் கருக மழை.

* அந்திச் செம்மானம் அப்போதே மழை.

* அந்திச் செவ்வானம் அடைமழைக்கு இலட்சணம்.

* கோடை இடி குமுறினாற் போல.
வானவில்

* கொரடு போட்டால் வராத மழை வரும்.

* மேல்தலை வில்லு கீழ்தலை மழை.

* கீழ்தலை வில்லு மேல்தலை வௌ்ளம்.

* காலை வானவில் ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கு எச்சரிக்கை. இரவு வானவில் அவர்களுக்கு மகிழ்ச்சி (ஆங்கிலப் பழமொழி)

அடைமழை

* அடைமழை விட்டும் கொடி மழை விடவில்லை.

* அடைமழையிலே ஆட்டுக்குட்டி செத்தது போல.
மழை

* பெய்த மழையும் காய்ந்த வெயிலும் சரி.

* மூன்றே முக்கால் நாழிகை முத்து மழை பெய்தது.

* வாளி எடுக்கு முன்னே மண் மாரியாய்ப் போயிற்று.

* அடிமழை விட்டும் செடி மழை விடவில்லை.

அந்தி மழை

* அந்தி மழை அழுதாலும் விடாது.

* அந்தி மழையும் விடாது. ஔவையாரைப் பார்த்த பிணியும் விடாது.

* உதயத்தில் வந்த மழை விடாது; அந்தி மழையும், அஸ்தமத்தில் வந்த விருந்தாளியும் போக மாட்டார்கள்.

* ஆய்ச்சலாய்ச்சலாய் மழை குறைந்து போகிறது.

* இருபத்தொரு மழையும் எண்ணி ஊற்றியது.

* மழைப்பேறும் பிள்ளைப்பேறும் மகாதேவனுக்கும் தெரியாது.

* அந்து கண்ணிக்கு அழுதாலும் வாரானாம் ஆமுடையான்.

* பிள்ளை பிறப்பதும் மழை பெய்வதும் மகாதேவனின் சித்தம்.

* விட்டு விட்டு பெய்கிற மழையினும், விடாமல் பெய்யாத மழையும், காலமறிந்து பெய்யாத மழையும், நேரமறிந்து உண்ணாத உணவும் சரியல்ல.

* ஆனைக்கில்லை கானலும், மழையும்.

* மாரிக் காலத்தில் எங்கும் மழை பெய்யும்; கோடையில் கடவுள் விரும்பிய இடங்களில் மட்டும் பெய்யும். (ஃபிரான்ஸ்)

* விடாத மழை பெய்தால் படாதபாடு பட வேண்டும்.

* விடாத மழையால் இல்லி ஒழுக்கு அடைபடும்.

* கூடினாலும் மழை வரவே வரும்.

* பெய்தும் கெடுத்தது, காய்ந்ததும் கெடுத்தது.
வசந்த காலம் - மழை

* கோடை மழை அடர்ந்தென்ன.

* கோடை குறுகிக் கெட்டது. கார் மின்னிக் கெட்டது.

* நீதி, நிர்வாகம், கொடும்பாவி சாகானா? கோடை மழை பெய்யாதா?

* வசந்த காலத்தில் மழை விலை மதிப்பில்லாத தைலத்தைப் போன்றது. (சீனப் பழமொழி)

* வேனலுக்குக் கனமழை வரும், வேந்தனுக்குச் சனசனம் சேரும்.
நிலையற்ற - மழை

* காலை மழையும், மாலை ஒப்பந்தமும் நிலையானதல்ல. (செக் பழமொழி)

* சிவந்த மாலையும், வெளிரிய காலையும் பயணம் செய்பவர்க்கு வழிமேல் உதவும். வெளிரிய மாலையும், சிவந்த காலையும், பயணம் செய்பவர் தலை மேல் மழையைக் கொண்டு வந்து சேர்க்கும். (ஆங்கிலப் பழமொழி)

“ வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை.

* கன மழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
விவசாயம் - பனி - மழை

* பனி பெய்தால் மழையில்லை. பழமிருந்தால் பூ இல்ல.

* பனி பெய்தால் மழை இல்லை. பழம் இருந்தால் பூ இல்லை.

* அன்றுமில்லை காற்று, இன்றுமில்லை குளிர்.

* பனிப்பெருக்கியே கப்பல் ஓடுமா.

* பனிக்கண் திறந்தால் மழைக்கண் திறக்கும்.

* பனிபெய்து கடல் நிறையுமா?

* பனி மழையாகாது, எனினும் தன் அளவுக்குப் பலன் கொடுக்கும்.(ஜியார்ஜியா பழமொழி)

* பெருமழை வந்தால் குளிராது.
தொகுப்பு:- முனைவர் ஸ்ரீவாலாம்பிகை

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/quotes/p163.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License