இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
கிறித்தவ சமயம்

வேதாகமத்தில் இறைப் பெயர்கள்

பேராசிரியர்.எ.சிட்னி சுதந்திரன்.


பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான முற்பகுதி நூல்களின் மூலமொழி யூதர்களின் மொழியான எபிரேயம் ஆகும். ஒருசில பிற்பகுதி நூல்கள் எபிரேயத்தின் கிளை மொழியான அரமேயத்தில் எழுதப்பட்டவை. இஸ்ரவேல் மக்கள் பழைய ஏற்பாடடில் உள்ள நூல்களையும் தள்ளுபடி ஆகமத்தில் காணப்படுகின்ற சில நூல்களையும் சேர்த்து தேவன் தங்களுக்கு மட்டுமே தந்த வேதம் என்று கருதுகிறார்கள். இந்த யூதர்களின் வேதம் தானக் (Tanakh) என்றழைக்கப்படும். இது தோரா (Torah =Teaching or Law), நெவிம் (Neviim = Prophets), கெட்டுவிம் (Ketuvim = Writings) என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. இயேசுவானவர் படித்த வேதமும் உடன்படிக்கைப் பெட்டியில் வைக்கப்பட்ட வேதமும் இதுதான். இதனை ஹிபுரு பைபிள் (Hebrew Bible) என்றும் அழைப்பர்.

இதில் யூதர்களின் தெய்வத்துக்கு உபயோகிக்கப்பட்ட பதம் ஏல் (El) என்பதாகும். இதன் கருத்து ‘வல்லமையுள்ளவர்’ என்பதாகும். இதிலிருந்து ‘எல்கானா’, ‘சாமுவேல்’, ‘இஸ்ரவேல்’, ‘பெத்தேல்’ என்ற பெயர்கள் வந்தன. இஸ்ரவேலரின் கடவுளைக் குறிக்க இந்த பதம் பழைய ஏற்பாட்டில் 221 முறை கையாளப்பட்டுள்ளது. பல முறை இந்த ‘ஏல்’ பதத்துடன் ஓர் அடைமொழியையும் சேர்த்துக் கொண்டனர். எடுத்துக்காட்டாக, ஏல் ஷாடை (El Shaddai) ‘சர்வ வல்லமையுள்ள கடவுள்’ (எண் 24:4), ஏல் எலியோன் (El Elyon) ‘உன்னதமான கடவுள்’ (ஆதி 14:18), ஏல்ரோய் (El Roi) ‘அரணான கடவுள்’ (ஆதி 16: 13), ஏல்ஓலம் (El olam) ‘என்றுமுள்ள கடவுள்’ (ஏசாயா 40: 28-31). ஏல் என்பதின் இன்னுமொரு மரியாதைப் பதம், ஏலோஹிம் (Elohim) ‘ஆற்றல்மிகுந்த கடவுள்’ (ஆதி 1:1) என்பதாகும். இந்த வார்த்தை பழைய ஏற்பாட்டில் 2,000 முறைக்கு மேல் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இவைகள் யாவும் கடவுளின் காரணப் பெயர்களாகும்.

இஸ்ரவேலரின் கடவுளின் சொந்தப் பெயர் (Proper name) அல்லது இடுகுறிப் பெயர், எபிரேய மொழியில் யாவே (YHWH / Yahweh), அதாவது, ….. இருக்கிறவராக இருக்கிறேன் (யாத்தி 3:14) என்பதாகும். இப்பதம் பழைய ஏற்பாட்டில் ஏறக்குறைய 6661 முறை உபயோகிக்கப்பட்டிருக்கிறது.



எலியா தீர்க்கத்தரிசியின் பலியை வானத்திலிருந்து வந்த அக்கினி பட்சித்த போது, ஜனங்கள் எல்லாரும் முகங்குப்புற விழுந்து ‘யாவேஹூ ஏலோஹீம்’ எனச் சத்தமிட்டார்கள். ‘யாவேயே கடவுள்’ (1 இராஜா 18: 39) என்பது அதன் பொருள். ‘ ….. கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக’ (யாத்தி 20: 7) என்ற மூன்றாம் கற்பனையின்படி இறைவனின் பெயரை வாயால் உச்சரிப்பது அபச்சாரம், பாவம் என்று யூதர்கள் கருதிய வழக்கத்தின் காரணமாக, அவர்கள் ‘யாவே’ என்று வருகின்ற இடங்களிலெல்லாம் அதோனை (Adonai) என்ற சொல்லை உச்சரிப்பர். இச்சொல் பழைய ஏற்பாட்டில் கடவுளைக் குறிக்க 337 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ‘யாவே’ என்ற சொல் எழுத்து வழக்கில் மாத்திரமே நெடுங்காலமாக இருந்து வந்தது. இன்றும் யூதர்கள் அப்பெயரை உச்சரிப்பதே இல்லை. அதன் காரணமாக அதன் உச்சரிப்பும் நாளடைவில் மறந்து போய் பிற்காலத்தில், அதாவது கி.பி. 1518ஆம் ஆண்டுக்குப் பின்பு அச்சொல் யெகோவா என்று உச்சரிக்கப்பட்டுள்ளது. யெகோவா என்னும் பதம் மூலமொழியில் இல்லை.

புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்துமே கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை. பழைய ஏற்பாட்டு மொழியான எபிரேயமும் அரமேயமும், புதிய ஏற்பாட்டு மொழியான கிரேக்கமும் தான் வேதாகமத்தின் மூன்று மூல மொழிகளாகும். இவற்றிலிருந்து தான் உலகின் பிற மொழிகளுக்கு ‘யூத - கிறிஸ்தவ’ வேதம் கிடைத்தது. யூத வேதத்தை பழைய ஏற்பாடு என்றும், கிறிஸ்தவ நூல்களைப் புதிய ஏற்பாடு என்றும் அழைப்பர்.

16ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்த இயேசுசபைக் குரு அன்டிரிக்ஸ் கடவுளின் பொதுப் பெயராகத் தம்பிரான் (தன் + பிரான் = தன்னுடைய தலைவன்) என்ற சொல்லைத் தம் எழுத்துக்களில் பயன்படுத்தினார்.

17ஆம் நூற்றாண்டில், ராபர்ட் டி நொபிலி ஈஸ்வரன் என்ற பதத்தோடு சர்வ என்ற அடைமொழியைச் சேர்த்து உருவாக்கின சருவேசுரன் என்ற பதத்தை, ரோமான் கத்தோலிக்கர்கள் தம்பிரான் என்ற சொல்லுக்குப் பதிலாக உபயோகிக்கத் தொடங்கினர். அதற்கு எல்லாம் வல்லவர், எல்லாவற்றுக்கும் மேலானவர் என்பது பொருள்.



297 ஆண்டுகளுக்கு முன்பு முதல் தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க் தன் மொழிபெயர்ப்பில் எபிரேய ஏலோஹிம் என்ற சொல்லை சருவேசுரன் என்றும், யாவே என்ற சொல்லை கர்த்தர் என்றும் மொழிபெயர்த்தார்.

சைவப் புலவர் தாயுமானவரின் "பராபரக் கண்ணிகள்" கவிதைத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு இசைப் பாடலும் "பராபரமே" என்று முடியும். அவரின் சமகாலத்தவரான எர்னஸ்ட் வால்தர் (Ernst Walther) சர்வேசுரனுக்குப் பதிலாக ‘பராபரமே’ என்ற பதத்தை ‘அன்’ விகுதி கொடுத்து பராபரன் என்று மாற்றி வேதத் திருப்புதலுக்குள் கொண்டு வந்தார். இந்த பராபரன் என்ற சொல்லை பப்ரிஷியஸ் ஐயரும் (Fabricius) இரேனியஸ் ஐயரும் தங்கள் மொழிபெயர்ப்புகளில், முழுமுதற் கடவுள், ஒரே கடவுள் என்று பொருள் வரக்கூடிய இடங்களில் பயன்படுத்திக் கொண்டனர். காலப்போக்கில் இப்பதத்தை ஏனைய புராட்டஸ்தந்து சபையார் கைவிட்ட போதிலும், தமிழ் லுத்தரன் சபையார் மட்டும் இன்றும் உபயோகித்து வருகின்றனர்.

பீட்டர் பெர்சிவல் (Peter Percival) பரிசோதனை பதிப்பில், பராபரன் என்று வருகிற இடங்களில் எல்லாம் தேவன் என்ற சொல்லை பயன்படுத்தினார். இச்சொல்லை ஆறுமுக நாவலர் அறிமுகம் செய்தார். ஹென்றி பவரும் தன்னுடைய ஐக்கிய மொழிபெயர்ப்பில், தேவன் என்ற சொல்லையேப் பயன்படுத்துகிறார்.



‘தேவன்’ என்பதன் வேர்ச் சொல் ‘தே’ என்பதாகும். மிகவும் பழமை வாய்ந்த இச்சொல்லின் பொருள் ‘ஒளி’ , ‘பிரகாசம்’ என்பதாகும். ‘மனிதரினின்று உயர்ந்தது’, ‘வணங்கப்படத்தக்கது’ என்றும் பொருள்படும். சமஸ்கிருதத்தில் இச்சொல் உண்டு. கிரேக்க மொழி வேதத்தில் தியொஸ் (Theos), இலத்தின் வேதத்தில் டேயுஸ் (Deus) ஆகிய இரு சொற்களும் ‘ஒரே கடவுள்’ என்ற பொருளைத் தரும். இவற்றின் வேர்ச் சொல்லும் ‘தே’ என்பதே ஆகும். ‘தே’ என்ற மூலச் சொல்லின் அடிப்படையில் பிறந்த சொல் தான் ‘தெய்வம்’ ஆகும். தமிழ் வேதாகமத்தில் ‘தேவன்’, ‘தேவாதி தேவன்’, ‘தெய்வம்’ போன்ற சொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

‘பராபரன்’ என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் சமன்பாடு ‘கடவுள்’ ஆகும். அது கட+உள் என்று விரியும். ‘அனைத்தையும் கடந்த ஆனால் உள்ளேயும் உறைகின்ற’ (transcendent and immanent) என்ற பொருளைத் தரும்.

யூதர்களின் வேதத்தில் கடவுளுடைய சொந்தப் பெயர் யாவே என்றும், அந்த சொல்லுக்குப் பதிலாக அதோனை என்ற காரணப் பெயரை லத்தீனில் Dominus என்றும், ஆங்கிலத்தில் Lord என்றும், ஜெர்மன் மொழியில் Herr என்றும் மொழிபெயர்த்துள்ளார்கள். இது தமிழில் கர்த்தர் என்று பப்ரிஷியஸ் ஐயரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ‘கிறி’ (செய்கிற) என்னும் சமஸ்கிருத மூலத்திலிருந்து வந்தது. ஆகவே ‘கர்த்தர்’ என்ற பதத்திற்கு ‘செய்கிறவர்’ என்று பொருள் - (உதாரணம் - ‘கருமகர்த்தர்’). இம் மூலத்திலிருந்து ‘கருமம்’, ‘கிரியை’ ஆகிய சொற்கள் வருகின்றன. கர்த்தர் என்னும் சொல், ‘அதிபதி’, ‘ஆளுகிறவன்’, ‘ஆண்டவன்’ என்னும் கருத்துக்களையும் கொடுக்கும். ‘ஆளுகிறவன்’, ‘ஆண்டவன்’ போன்ற சொற்களை கிறிஸ்தவர்கள் ‘ஆளுகிறவர்’, ‘ஆண்டவர்’ என்று மரியாதை நிமித்தம் மாற்றிப் பயன்படுத்துகின்றனர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/spiritual/christian/p8.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License