இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
கிறித்தவ சமயம்

வயதானவர் வாழ்க்கை!

பேராசிரியர்.எ.சிட்னி சுதந்திரன்.


தோற்றம்

“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதி.1:1). நான்காம் நாளில், “பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக் கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்” (ஆதி.1:14). அவ்விதமாய் காலங்களும், அவைகளுக்கு அளவுகோலாய்ப் பகல், இரவு, காலை, மாலை, நாட்கள், வருஷங்கள் என்பனவும் தோன்றின.

நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்தால் பூமி முழுவதும் சேதப்பட்ட பொழுது, கடவுள், “பூமி உள்ள நாளளவும் விதைப்பும், அறுப்பும், சீதளமும், உஷ்ணமும், கோடைக்காலமும், மாரிக்காலமும், பகலும், இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்” (ஆதி.8:22). ஆம், அதுபோல் இன்றளவும் பூமி தன் காலங்களை வெகு நேர்த்தியாய் வெளிப்படுத்தி வருகிறது.

ஞானவானாகிய சாலொமோன், “ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு. வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” (பிரசங்கி.3:1) என்கிறார். மேலும் அவர், “பிறக்க ஒரு காலமுண்டு” என்று தொடங்கி …….. “சமாதானம் பண்ண ஒரு காலமுண்டு” என்று 29 வகையான காலங்களைப் (பிரசங்கி.3:2-8) பட்டியலிடுகிறார். அதோடு, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (பிரசங்கி.3:11) என்று வியப்பெய்துகிறார்!

சங்கீதக்காரன், “என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” (சங்.31:15) என்றும், “கர்த்தாவே நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்” (சங்.39:4) என்றும், “இதோ என் நாட்களை நாலு விரற்கடையாக்கினீர். என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது. எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்” (சங்.39:5) என்றும், “எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்து போகிறோம்” (சங்;.90:10) என்பதாகக் கூறுகிறார். இங்கு மனிதனின் நிலையாமைக்குறித்தும், அவன் ஆயுசு நாட்களைப்பற்றியும், அதில் அவனுடைய முதுமைக் காலம் வருத்தமும் சஞ்சலமும் நிறைந்தது என்பது பற்றியும் அவர் தெளிவாய்ச் சொல்லுகிறார்.



முதுமைக் காலம்

“வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்……” (பிரசங்கி. 11:9) என்று சொன்ன சாலொமோன் ஞானி, “….. இளவயதும் வாலிபமும் மாயையே” (பிரசங்கி.11:10) என்றும், “நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை…..” (பிரசங்கி.12:1) என்றும் சொல்கிறார். ஏனென்றால் இளமைக் காலத்தைத் தொடர்ந்து வரும் முதுமை காலத்து நாட்கள் “எனக்குப் பிரியமானவைகள் அல்ல என்று நீ சொல்லக் கூடிய வருஷங்கள் சேராததற்கு முன்னும்” (பிரசங்கி.12:1) என்று ஆரம்பித்து, முதுமைக் காலத்து நாட்களில், “வீட்டுக் காவலாளிகள் (கைகள்) தள்ளாடிப் போவர்; பெலசாலிகள் (கால்கள்) கூனிப் போவர்; எந்திரம் அறைக்கிறவர்கள் (பற்கள்) குறைவுபட்டுப் போவர்; பலகணி வழியாய்ப் பார்க்கிறவர்கள் (கண்கள்) இருண்டு போவர்; எந்திர சத்தம் தாழ்ந்து போதலால் தெருவாசல் கதவுகள் (காதுகள்) அடைபட்டுப் போகும்; குருவியின் சத்தத்துக்கும் (அதிகாலை நேரம்) எழுந்திருக்கும் நிலமை; கீதவாத்தியக் கன்னிகைகள் (குரல்வளை நரம்புகள்) அடங்கிப் போகுதல்; மேட்டுக்காக அச்சமுண்டாகுதல்; வழியில் பயங்கள் தோன்றுதல்; வாதுமைமரம் பூ பூத்தல் (தலைமுடி நரைத்தல்); வெட்டுக்கிளிகள் பாரமாதல்; பசித்தீபனம் அற்றுப் போதல் போன்ற ஒரு விருப்பமில்லாத தீங்கு நாட்களோடு கூடிய முதுமைக்கால வாழ்க்கையை ஞானி எளிமையாகவும், யதார்த்தமாகவும், கவித்துவத்தோடும் படம்பிடித்து சித்தரிக்கிறார் (பிரசங்கி. 12:3-5).



இன்றைய முதியோரின் நிலை என்ன?

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஏ. மார்க்ஸ் என்பவர் கூறுகிறார்,

20 வயது வரை -என் தேவைக்கேற்ற துணிமணிகள், வயிரார உணவு, எல்லாவற்றுக்கும் கொஞ்சம் மேலாகவே என்னிடம் வசதி இருந்தது.

20 - 50 வயது வரை -நான் அமைதியாக ஓய்ந்திருந்து, நான் சம்பாதித்து வைத்திருந்ததைப் பார்த்து திருப்தியோடு இருந்தேன்.

60 - 70 வயது வரை - நான் சேமித்ததையும், உடைமைகளையும் மற்றவர்களுக்குக் கொடுத்தால் தான் நான் பராமரிக்கப்படுவேன் என்றாகி விட்டது. எவ்வளவு கையிலிருந்து கொடுக்கிறேனோ அந்த அளவு சந்தோஷத்தைத் தந்தார்கள்.

70 வயதைக் கடந்த நிலையில் - என்னிடம் மூன்றே மூன்று உடமைகள் மட்டுமே மிச்சப்பட்டு இருக்கின்றன. அவைகள், என் பைபிள், என் மூக்குக் கண்ணாடி, என் பொய்ப் பல்செட்.

வியாதிகளோடும், இயலாமையோடும், தள்ளாமையோடும், ஒதுக்கப்பட்டவர்களாய், வெறுக்கப்பட்டவர்களாய், தனித்தும், பயந்தும், ஏக்கங்களோடும், எதிர்பார்ப்புகளோடும், ஏமாற்றங்களோடும் வாழும் எண்ணற்ற முதியோர்களைப் பற்றிய நம் கரிசனை என்ன? ஒரு தந்தை பத்து குழந்தைகளைக் காப்பாற்றுகிறான். பத்துக் குழந்தைகள் ஒரு தந்தையைக் காப்பாற்றுவதில்லை! “மகனே! நீ இருக்க என் கருவறை இருந்தது… நான் இருக்க ஒரு அறைகூடவா இல்லை உன் வீட்டில்?” - என்று முதியோர் இல்லத்தில் தள்ளப்பட்ட தாயிடமிருந்து எழும் இந்த வேதனை நிறைந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது? “பழகிய மனைவி, பழகிய நாய், சேமித்து வைத்த பணம் ஆகியவைகளே முதுமையில் நம்பிக்கைக்கு உரியவர்கள்” என்ற கூற்றினை கிறிஸ்தவ சமுதாயம் ஏற்றுக் கொள்ளுகிறதா? திருச்சபை மக்களாகிய நாம் இதற்கு என்ன தீர்வு காணப் போகிறோம்? சிந்திப்போமா?



இந்த நாள்

“காலம் மட்டும்தான் மாற்றீடு செய்ய முடியாத ஒன்று - அதை வீணாக்கிவிடாதே!” (Time alone is irreplaceable - Waste it not!).

“இது ஒரு புரியாத நாளின் துவக்கம்.
என் விருப்பப்படி பயன்படுத்த கடவுள் இதை
எனக்குக் கொடுத்துள்ளார்.
நான் இதை வீணாக்கலாம் - அல்லது
நல்லவிதமாகப் பயன்படுத்தலாம்.
நான் இன்று என்ன செய்கிறேன் என்பது முக்கியமானது;
ஏனெனில் நான் அதற்காக
என் வாழ்நாளின் ஒரு நாளைப் பரிமாற்றம் செய்கிறேன்
. நாளை வந்ததும், இந்த நாள் முற்றிலுமாகப் போய்விட்டிருக்கும்.
அதில் அது என்னோடு பரிமாறிக் கொண்டதை
விட்டுச் சென்றிருக்கும்.
நான் அதற்குக் கொடுத்த விலை குறித்து
வருந்தாமல் இருக்க வேண்டுமானால்,
அது பயனுள்ளதாக இருக்க வேண்டும்”.

ஆம்! இந்த நாள் அப்படிப் பயனுள்ளதாய் இருக்க நாம் என்ன செய்யலாம்? அன்றாடம் வேதம் வாசித்து, தியானித்து, ஜெபம் செய்யும் நாம், பின்வரும் பாடலின் கருத்துக்களை ஒவ்வொரு நாளும் செயல்முறைப் படுத்தலாமே!



பாடல்

“இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
ஏசுவின் திருப்பாதத்தில்
காலை முதல் மாலை வரை
காக்கும் கர்த்தர் நமது ஏசு
காலைத் தள்ளாட என்றுமே விடார்.

இனியவார்த்தை எப்போதும் பேச ஏசு நடத்திடும்
இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்க ஏசு காட்டிடும்
இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட ஏசு போதியும்
இன்முகம் காட்டி இறங்கி நோக்க ஏசு கற்பியும் - இந்த நாளை…

பிறர் என்ன செய்ய விரும்புவேனோ அதையே செய்யவும்
பிறர் எனக்கு மன்னிப்பதையே அவர்க்கு மன்னிக்கவும்
பிறர் நலம் கருதியே சதா உழைக்கவும்
பிறருக்காக என்னை ஒடுக்கி நான் மரிக்கவும் - இந்ந நாளை…

(கருத்துமிகு இப்பாடல் எழுதிய ஆசிரியர்க்கு பாராட்டுதல்கள்).

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/spiritual/christian/p10.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License