இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
கிறித்தவ சமயம்

கிறித்தவ வழிமுறை முதன்மையானது ஏன்?

பேராசிரியர்.எ.சிட்னி சுதந்திரன்.


உலகில் பல்வேறு சமய வழிமுறைகள் இருப்பினும், அவற்றுள் கிறித்தவ சமய வழிமுறை உலகெங்கும் பரவி முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. இயேசு உயிர்த்தெழுந்ததும், அதைத் தொடர்ந்து கிறித்துவின் மீது நம்பிக்கை கொண்டும், கிறித்தவ வழிமுறையை ஊக்குவித்தும் எழுதப்பட்ட கடிதங்களே கிறித்தவ சமயம் எனும் வழிமுறையை முதன்மை பெறச் செய்திருக்கிறது.

இயேசுவின் காட்சிகள்

மாற்கு நற்செய்தி நூலின் கடைசி அதிகாரத்தில் வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையில் உயிர்த்தெழுந்த இயேசுவானவர் மூன்று நிலைகளில் அவரோடு மிகவும் நெருக்கமாய் இருந்தவர்களுக்குத் காட்சியளித்தார் எனப் பார்க்கிறோம்.

முதலாவதாக, மகதலேனா மரியாளுக்குக் காட்சியளித்தார். அவள் புறப்பட்டுப்போய் இயேசுவானவர் உயிரோடிருப்பதையும், அவரைத் தான் கண்டதையும், துக்கத்தில் இருக்கும் இயேசுவானவரோடு உடனிருந்தவர்களிடம் கூறினாள். ஆனால் அவர்கள் அந்தச் செய்தியை நம்பவில்லை (மாற்கு16: 9-11)

இரண்டாவதாக, இயேசுவானவர் உயிரோடிருக்கிறார் என்ற செய்தியை மகதலேனா மரியாள் மூலம் கேள்விப்பட்ட இருவர் ஒரு கிராமத்துக்கு நடந்து செல்கையில் அவர்களுக்கு இயேசுவானவர் மறுஉருவமாய்க் காட்சியளித்தார். அவர்கள் மற்றவர்களுக்கு அதை அறிவித்தும் அதை அவர்கள் நம்பவில்லை (மாற்கு16: 12-13)

மூன்றாவதாக, போஜனபந்தியில் இருந்த பதினொரு பேருக்கும் இயேசுவானவர் காட்சியளித்ததுடன், அவர்களின் விசுவாசமின்மையையும், இருதயக்கடினத்தையும் கடிந்துகொண்டதோடு, ‘…. அவர்களை நோக்கி; நீங்கள் உலகெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்’ (மாற்கு16: 15) என்றார். இந்தக் கட்டளையைச் சீடர்களும் அப்போஸ்தலர்களும் தங்களின் தலையாயப் பணியாக ஏற்று, ‘அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து….’ (மாற்கு16: 20) என்று பார்க்கிறோம்.



கடிதங்கள்

அதன் பயனாகச் சீடர்களும் அப்போஸ்தலர்களும் ஆதித்திருச்சபைகளைக் கொரிந்து, பிலிப்பி, கொலோசெ போன்ற பட்டணங்களிலும், கலாத்தியா, பொந்து, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா போன்ற தேசங்களிலும் நிறுவினர். அச்சபை மக்களுக்குச் சோதனைகளும் துன்புறுத்தல்களும் மிகுதியாக ஏற்பட்டன. எனவே பவுலடியாரும் அப்போஸ்தலர்களும் சபையினருக்கு அடிக்கடி கடிதங்கள் (நிருபங்கள்) எழுதி வந்தனர். சபையினர் கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்கும்படியாக அவர்களை ஊக்குவித்தும், ஆறுதல் கூறியும் இக்கடிதங்களை அனுப்பினர். சபைகளில் அவ்வப்போது ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவும், சபையினருக்கு நற்போதனைகள் அளிப்பதற்கும், சபைகள் நிலைகுலைந்து வீழ்ச்சியடைந்து போகாமல் இருப்பதற்காகவும் கடிதங்களை எழுதி ஆட்கள் மூலமாய் அனுப்பி வைத்தனர். இந்தக் கடிதங்களைச் சபையினர் பத்திரமாய்ப் பாதுகாத்து வைத்தனர். இந்தக் கடிதங்களில் சபைகளுக்குத் தேவையான அனைத்துச் செய்திகளையும் நெறிமுறைகளையும் காணலாம். இவைகளே திருச்சபையின் வளர்ச்சிக்கு ஆதார நூல்கள் என்றால் மிகையாகாது.

வேதாகமம்

இந்த 22 கடிதங்களும் எழுதப்பட்ட பின்னரே, 4 சுவிசேஷங்களும், வெளிப்படுத்தின விசேஷமும் எழுதப்பட்டன. இவைகள் கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டன. இவைகள் யாவும் சேர்ந்ததுதான் புதிய ஏற்பாடாகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் இந்த சுவிசேஷங்களையும், கடிதங்களையும் யூத வேதத்துக்கு இணையாகக் கருதத் தொடங்கினர். யூத வேதத்தைப் ‘பழைய ஏற்பாடு’ என்றும், சுவிசேஷங்களையும், கடிதங்களையும் ‘புதிய ஏற்பாடு’ என்றும் அழைக்கத் தொடங்கினர். மனிதனின் விமோசன வழிமுறை இந்த இரண்டு ஏற்பாடுகளிலும் அடங்கியிருக்கிறது என்று நம்பினர். இறைவன் யூதர் என்கிற ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதியினருடன் செய்து கொண்ட உடன்படிக்கையைப் பழைய ஏற்பாடும், உலகின் அனைத்து மக்களோடும் செய்து கொண்ட உடன்படிக்கையைப் புதிய ஏற்பாடும் எடுத்துரைக்கின்றன என்று ஏற்றுக் கொண்டார்கள். எனவே இரண்டு ஏற்பாடுகளும் இணைக்கப்பட்டு, ‘யூத - கிறிஸ்தவ’ வேதம், அதாவது இன்று நம் கைகளில் இருக்கும் வேதாகமம் உருவானது.



சமயம்

இக்காலத்தில் கிரேக்க மொழியின் ஆதிக்கம் குறைந்து ரோம சாம்ராஜ்யத்தின் அதிகாரம் உச்சத்திலிருந்தது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் அரசு ஆதரவுடன் கிறித்தவம் வளர்ந்து பெருகி ஐரோப்பா எங்கும் வியாபித்தது. பின்வந்த சில நூற்றாண்டுகளில் ஐரோப்பாவெங்கும் ஒரே போப்பாண்டவரும் ஒரே கிறித்தவ ரோமச் சக்கரவர்த்தியும் என்ற நிலை இருந்தபடியால் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை மேலும் வளர்ந்தது.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மார்ட்டின் லூத்தர், சீர்திருத்தத் திருச்சபையைத் தோற்றுவித்தார். அதன் பின்னர் சீர்திருத்தத் திருச்சபைகள் எல்லா நாடுகளிலும் வேரூன்றி வளர்ந்தன. ஆக இன்று உலகளவில் வியாபித்துள்ள கிறித்தவ வழிமுறைகளில் கத்தோலிக்கத் திருச்சபையும் சீர்திருத்தத் திருச்சபைகளும் பெரும்பங்கு வைக்கின்றன.

உயிர்த்தெழுந்த இயேசுவானவரின் மூன்றாவது காட்சியும், அவருடைய வாயிலிருந்து வந்த கடைசிக் கட்டளை வார்த்தைகளுமே இன்றையக் கிறித்தவ வழிமுறை உலகளவில் பெருகியிருப்பதற்கு முக்கியக் காரணமாகும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/spiritual/christian/p12.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License