இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
கிறித்தவ சமயம்

பதிலளிக்கப்பட்ட ஜெபம்..!

(இது ஆப்பிரிக்காவில் பணிபுரிந்த டாக்டர் எழுதிய உண்மைச் சம்பவம்..!)


ஒரு நாள் இரவு மருத்துவமனையின் மகப்பேறுப் பிரிவில் ஒரு தாய்க்கு உதவும் பொருட்டு நான் கடுமையாக உழைத்தும் எதுவும் செய்ய முடியவில்லை. தான் பெற்றெடுத்த குறைமாத சிசுவையும் (Premature baby), சதா அழுகிற தன் இரண்டு வயது மகளையும் விட்டுவிட்டு அந்தத்தாய் இறந்து போனாள். பிறந்த சிசுவைக் காப்பாற்றுவதில் எங்களுக்கு சிரமங்கள் இருந்தன. காரணம் எங்களிடம் அடைகாப்புக்கருவி (Incubator) இல்லை. (இருந்தாலும் அதை இயக்க மின்சாரமில்லை). குழந்தைக்கு உணவூட்டும் சிறப்பு வசதிகளுமில்லை.

நாங்கள் நிலநடுக்கோட்டுப் (Equator) பகுதியில் இருந்தபோதிலும், இரவு நேரங்களில் கடுங்குளிர் வாட்டியது; காற்றின் வேகம் அச்சுறுத்தும் விதத்தில் இருந்தது. ஒரு பயிற்சிக்கால மருத்துவச்சி, குழந்தைகளை வைத்துக் காப்பாற்ற உதவும் பெட்டியையும், குழந்தையின் உடலின் மேல் சுற்றுவதற்கான பஞ்சையும் எடுத்துவரச் சென்றாள். மற்றொருத்தி கணப்பிற்கு எரியூட்டவும், சுடுநீர்ப்புட்டியில் நீர் நிரப்புவதற்கும் சென்றாள். சென்றவள் சற்று நேரத்தில் திரும்பிவந்து, புட்டி வெடித்து உடைந்துவிட்டதாக என்னிடம் கூறினாள். (வெப்பமண்டலப் பகுதிகளில் இரப்பர் எளிதாகச் சிதைந்து விடும்). அதுதான் எங்களிடமிருந்த கடைசி சுடுநீர்ப்புட்டி என்றும் அவள் அதிர்ச்சியுடன் தெரிவித்தாள். புதிதாக புட்டி வாங்குவதற்கு நாங்கள் இருந்த காட்டுப்பகுதியில் மருந்துக்கடைகளும் இல்லை.

“சரி, ஆனது ஆகட்டும்; குழந்தையைக் கணப்பிற்கு எவ்வளவு அருகாமையில் பத்திரமாகப் போட முடியுமோ, அவ்வளவு அருகாமையில் போட்டு, நீயும் குழந்தையோடு படுத்து உறங்கு; குழந்தைக்கு வெப்பம் தேவை; அதேசமயத்தில் குளிர்காற்றிலிருந்தும் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும்” என்றேன் நான்.

வழக்கம்போல் மறுநாள் நண்பகலில், இயன்ற அளவு காப்பகத்துக் குழந்தைகளைத் திரட்டிக்கொண்டு நான் வழிபாட்டிற்குச் சென்றேன். இளைஞர்களுக்குப் பலவிதமான ஆலோசனைகளை வழங்கிவிட்டு, குட்டி சிசுவைப் பற்றியும், சுடுநீர்ப்புட்டி இல்லாமல் சிசுவைப் பராமரிப்பதில் உள்ள சிக்கலையும், கதகதப்பான இடத்தில் சிசு வைக்கப்படாவிட்டால் சிசு குளிரில் இறந்துவிடும் என்றும் அவர்களிடம் சொன்னேன். மேலும் இரண்டு வயது பெண் குழந்தையொன்று தாயைப் பறிகொடுத்துவிட்டு அழுதுகொண்டிருப்பது பற்றியும் குறிப்பிட்டேன்.



ஜெபவேளையில் பத்து வயது நிரம்பிய ரூத் என்ற பெண், ஆப்பிரிக்கக் குழந்தைகளின் வழக்கமான, கடுமையான பாணியில், “கடவுளே, தயவுகூர்ந்து இன்றே சுடுநீர்ப்புட்டியை அனுப்பி வையுங்கள். நாளையதினம் அனுப்பினால் அது பயன்படாது; குழந்தை இறந்துவிடும். எனவே இன்று நண்பகலே அனுப்பி வையுங்கள்” என்று வேண்டிக் கொண்டாள்.

அந்தப் பிரார்த்தனையை செவிமடுத்த நான் உள்ளுக்குள் பேரதிர்ச்சியடைந்தேன்! அந்தப் பெண் மேலும் தொடர்ந்து வேண்டினாள் : “கடவுளே, சுடுநீர்ப்புட்டியை அனுப்பும் அதேநேரத்தில், தயவுசெய்து பொம்மை ஒன்றையும் அழுது கொண்டிருக்கும் சிறுமிக்கு அனுப்புங்கள். அப்போதுதான் நீங்கள் அவளையும் உண்மையாக நேசிக்கிறீர்கள் என்பது தெரியவரும்” என்றாள்.

குழந்தைகளின் வழிபாட்டில் அவர்களோடு இருந்த நான், “ஆமென்” (அப்படியே ஆகட்டும்) என்று சொல்லலாமா? அந்தப் பெண் கேட்டதை கடவுள் தருவாரா? அவரால் எதையும் செய்ய முடியுமென்று எனக்குத் தெரியும். பரிசுத்தவேதம் அப்படித்தான் சொல்கிறது. ஆனால் எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? அந்தப் பெண்ணின் பிரார்த்தனைக்கு செவிசாய்க்க வேண்டுமென்றால் இறைவன் என் சொந்த ஊரிலிருந்து ஒரு சிப்பத்தை (Parcel) அனுப்பிவைக்க வேண்டும். நான் நான்காண்டு காலமாக ஆப்பிரிக்காவில் இருந்து வருகிறேன்; ஆனால் இதுவரை என் சொந்த ஊரிலிருந்து எந்த ஒரு சிப்பத்தையும் நான் பெற்றதில்லை. அப்படியே எனக்கொருவர் ஒரு சிப்பத்தை அனுப்பினாலும், யார் அதனுள் சுடுநீர்ப்புட்டியை வைக்கப் போகிறார்கள்? நான் இருப்பதோ நிலநடுக்கோட்டுப் பகுதியில்!

பிற்பகலில் பாதிநேரம் சென்றபின், பயிற்சிப் பள்ளியில் செவிலியர்களுக்கு நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, என் வீட்டு நுழைவாயில் அருகே ஒரு வாகனம் நிற்பதாக எனக்குத் தகவல் வந்தது. நான் வீட்டிற்குத் திரும்பிச் செல்லுமுன் அந்த வாகனம் அங்கிருந்து சென்றுவிட்டது. ஆனால் வீட்டுத் தாழ்வாரத்தில் இருபத்தி இரண்டு பவுண்ட் எடையுள்ள ஒரு சிப்பம் இறக்கி வைக்கப்பட்டிருந்தது.

அதைப் பார்த்தவுடன் என் கண்கள் பனித்தன. தனியாக அந்த சிப்பத்தைத் திறந்து பார்க்க என்னால் முடியவில்லை. எனவே காப்பகத்துக் குழந்தைகளை உதவிக்கு அழைத்தேன். கட்டப்பட்டிருந்த கயிறுகளை மிகவும் கவனத்துடன் இழுத்து, முடிச்சுகளை அவிழ்த்தோம். எங்களுக்கிருந்த பேரார்வத்தால் சிப்பம் சுற்றப்பட்டிருந்த காகிதம் கிழிந்துவிடாமல், அதை சிரமப்பட்டு மடித்தோம். முப்பது அல்லது நாற்பது ஜோடிக் கண்கள் சிப்பத்தினுள்ளிருந்த அட்டைப் பெட்டியை உற்று நோக்கின. பெட்டியின் மேற்பகுதியிலிருந்து கம்பளிப் பின்னலாடைகளை எடுத்தேன். கண்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தன. அவைகளையடுத்து தொழுநோயாளிகளுக்கான கட்டுப்போடும் துணி வகைகள் இருந்தன. பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு சற்று மனச்சோர்வு ஏற்பட்டது. பிறகு அந்த சிப்பத்தினுள்ளிருந்து ஒரு சிறிய பெட்டியை வெளியே எடுத்தோம். அதனுள் உலர் திராட்சையும், உலர் முந்திரிப் பழமும் இருந்தன. வார இறுதியில் ரொட்டி தயாரிக்க அவை உதவும். அதன்பின் அட்டைப் பெட்டியினுள் நான் கையை விட்டு வெளியே இழுத்ததும் ஓர் இரப்பர் சுடுநீர்ப்புட்டி என் கையோடு வந்தது.



நான் ஆச்சரியத்தால் அலறிவிட்டேன்!

அதை அனுப்பச் சொல்லி கடவுளிடம் நான் கேட்கவில்லை. அவர் அனுப்புவார் என்று நான் நம்பவுமில்லை!

குழந்தைகளிடையே முதல் வரிசையில் ரூத் நின்றுகொண்டிருந்தாள். “கடவுள் சுடுநீர்ப்புட்டியை அனுப்பியிருந்தால் பொம்மை ஒன்றையும் சேர்த்தே அவர் அனுப்பியிருப்பார்” என்று சொன்ன அவள், பெட்டியினுள் ஆழமாகக் கையை உள்ளே விட்டுத் தூழாவினாள். ஆடை அணிவிக்கப்பட்ட அழகான பொம்மை ஒன்றை வெளியே எடுத்தாள். அவள் கண்கள் ஒளி வீசின. அவள் கடவுளை சந்தேகப் படவேயில்லை!

“நான் சென்று இந்த பொம்மையை அந்த சின்னக் குழந்தையிடம் கொடுக்கவா? அப்போதுதான் இயேசு தன்னை உண்மையில் நேசிப்பதாக அவள் நம்புவாள்” என்று ரூத் என்னைப் பார்த்துக் கேட்டாள்.

நான் “அப்படியே செய்” என்று அவளுக்கு மறுமொழி கூறினேன்.

அந்த சிப்பத்தை எனது விடுமுறைக்கால வகுப்பு மாணவர்களின் தலைவன் ஐந்து மாதங்களுக்கு முன்பு அனுப்பியிருக்கிறான். நான் நிலநடுக்கோட்டு வெப்பமண்டலப் பகுதியிலிருந்தாலும், ஒரு சுடுநீர்ப்புட்டியை எனக்கு அனுப்பிவைக்கும்படி கடவுள்தான் அவனை அறிவுறுத்தியிருக்க வேண்டும். யாரோ ஒரு பெண் ஆப்பிரிக்கக் குழந்தைக்காக ஐந்து மாதங்களுக்குமுன், சிப்பத்தினுள் ஒரு பொம்மையை வைத்திருக்க வேண்டும். பத்து வயது ரூத்தின் அன்றைய நண்பகல் வேண்டுகோளை, கடவுள் ஐந்து மாதங்களுக்கு முன்பே நிறைவேற்றியுள்ளார்!



“அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்” - ஏசாயா 65: 24. (Before they call, I will answer - Isaiah 65: 24).

நாம் இலவசமாகப் பெற்றிருக்கும் உன்னதமான பரிசு ஜெபம்! அதற்கு விலையில்லை; ஆனால் வெகுமதிகள் உண்டு!

ஒவ்வொருவருக்காகவும் நாம் பிரார்த்தனை செய்வோம்! அதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே செலவாகும்!

- பேராசிரியர் சிட்னி சுதந்திரன், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/spiritual/christian/p13.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License