இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
கிறித்தவ சமயம்

தோமா அப்போஸ்தலர்

பேராசிரியர்.எ.சிட்னி சுதந்திரன்.


இயேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான தோமா, கலிலேயா நாட்டைச் சேர்ந்த யூதராவார். இவர்தான் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை உறுதி செய்வதற்காக இயேசுவின் விலாவில் கைவிட்டுப் பார்த்தவர். அதனால் இவரை ‘சந்தேகிக்கும் தோமா’ (Doubting Thomas) என்று அழைப்பர். யோவான் இவர் பெயரை ‘திதிமு’ என்று மூன்று முறை குறிப்பிட்டுள்ளார் (யோவான் 11: 16, 20: 24, 21: 22). இவர் கி.பி. 52ஆம் ஆண்டு கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகக் கேரள மாநிலத்தில் கொடுங்கல்லூர் என்னும் ஊருக்கு அருகில் இருந்த மிகவும் பழமைவாய்ந்த முசுரிஸ் என்ற துறைமுகத்தை வந்தடைந்தார். (இந்தத் துறைமுகம் கி.பி. 1341இல் அழிந்து போனது). அங்கிருந்து வேதம் ஓதும் பிராமணர்கள் நிறைந்த பழவூர் (Palavoor) சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். பின்பு கேரளாவின் தெற்குப் பகுதிகளுக்குச் சென்று ‘ஏழரைக்கோயில்கள்’ (Ezharapallikal or Seven and Half Churches) நிறுவினார். அவைகள், கொடுங்கல்லூர் (Kodungallur), கொல்லம் (Kollam), நிர்ரனம்(Niranam), நிலக்கல் (Nilackal), கொக்கமங்கலம் (Kokkamangalam), கோட்டக்காயல் (Kottakkayal), பழவூர் (Palavoor), திருவிதாங்கோடு அரப்பள்ளி (Thiruvithancode Arappally - the half Church) ஆகும்.

இந்த அரப்பள்ளி (அரைப்பள்ளி, Half-Church) கி.பி. 63இல் நிறுவப்பட்டதாகவும், அதனை “புனித மேரிமாதா தேவாலயம்” என்றும், “தோமையர் கோயில்” என்றும் அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர். அரப்பள்ளி (Half-Church) என்று சொல்லப்படுகின்ற இந்த திருவிதாங்கோடு கோவில் முழுமையான ஒரு ஆலயமாகவே காட்சி தருகின்றது. இது சேரமன்னன் ‘இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்’ காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலயம் 55அடி நீளமும், 18அடி அகலமும், 1அடி அகலம் உள்ள கருங்கல் சுவர்களால் கட்டப்பட்டுள்ளது. 2அடி அகலமும், 10அடி உயரமும் கொண்ட கருங்கல் தூண்கள் கூரையைத் தாங்கி நிற்கின்றன. கோவிலின் மேல் பகுதியில் மரத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு மாடி உள்ளது. அங்குதான் பரி. தோமா அமர்ந்து ஜெபம் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஜெபபீடத்தின் பின் பகுதியில் கருங்கல்லில் ஒரு சிலுவை வைக்கப்பட்டுள்ளது. ஜெபபீடத்தின் இடது பக்கத்தில் பரி. தோமாவின் ஓவியத்தைக் காணலாம். திருமுழுக்குத் தொட்டி ஒன்று ஜெபபீடத்தின் முற்பகுதியில் உள்ளது. கால் கழுவுவதற்கான ஒரு கல்தொட்டியையும், ஒரு கிணற்றையும் ஆலயத்தின் வெளிப்பகுதியில் காணலாம். தனித்தன்மையோடு கூடிய, பழமை வாய்ந்த சித்திர வேலைப்பாடமைந்த கருங்கல் தூண்களாலும், கற்சுவர்களாலும், கற்சிற்பங்களாலும் கட்டப்பட்ட இந்த ஆலயம் உலகளவில் ஒரு அபூர்வமான தேவாலயமாக திகழ்கின்றது. அதோடு இந்த ஆலயம் விலைமதிப்பற்ற ஒரு புனிதத் தலமாகவும் விளங்குகிறது.

ஆலயத்தின் தெற்குப் பக்கமாக இன்றும் தோமையர் கிறிஸ்தவர்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தெருவிற்கு ‘தரீசா தெரு’ என்று பெயர். அங்கு வசிக்கும் மக்கள் ஆலயத்தை ‘தரிஸாபள்ளி’ என்று அழைக்கின்றனர். ‘தரீசா’ என்ற சொல் ‘த்றீசோ’ என்ற கிரேக்க சொல்லின் மருவலாகும். அதன் பொருள் ‘ஆர்த்தடாக்ஸ்’ என்பதாகும். அதாவது நாம் அதை ‘ஆதித்திருச்சபை’ என்று சொல்லலாம். இந்த ஆலயம் ‘சிரியன் ஆர்த்தடாக்ஸ்’ பங்குதந்தை பராமரிப்பில் இருக்கிறது.


தோமா ‘மலையடூர்’ என்ற மலைக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். தோமா தன் கடைசிக் காலத்தில் கிழக்குக் கடற்கரை நோக்கிப் பயணமாகி சென்னையை வந்தடைந்தார். அங்கு இருந்த குறுநில மன்னனும், மக்களும் கிறிஸ்து மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர். இதனால் ஜாதியின் அடிப்படையில் அமைந்திருந்த சமுதாயத்திற்கு ஆபத்து வந்துவிடும் என்று எண்ணிய உயர்குடி சமூகத்தினர் வெகுண்டு எழுந்தனர். அதனால் மயிலாப்பூரை (Mylapore) ஆண்டு வந்த குறுநில மன்னன் ‘மாஸ்டாய்’ (Masdai), கி.பி. 72இல் தோமாவுக்கு மரணதண்டனை விதித்தான். அதோடு பொதுமக்கள் உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, தோமாவை அருகில் இருந்த குன்றுக்கு அனுப்பி வைத்தான். அங்கே அவர் ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது கற்களால் எறியப்பட்டும், வெறிகொண்ட ஒரு பிராமணனால் ஈட்டியால் குத்தப்பட்டும் இறந்தார். அதேவேளையில் அநேகக் கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டனர். அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட 64 குடும்பத்தார் கேரளாவுக்குத் தப்பிச் சென்றனர்.

முதல் முறையாக மயிலாப்பூர் பகுதியை ஆண்ட மகாதேவன் என்ற அரசன் தன் மகன் உடல்நலம் பெறுவதற்காக பரிசுத்த தோமாவின் கல்லறையைத் திறந்து மண் எடுத்தான். இரண்டாம் முறையாக கி.பி. 222-க்கும் 235-க்கும் இடைப்பட்ட காலத்தில் அவரது கல்லறையைத் திறந்து, அவரது உடல் எச்சங்களை எடுத்து இத்தாலியல் உள்ள ‘ஒர்த்தோனா’ என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்றும் இத்தாலியில் அவைகள் பாதுகாக்கப்படுகின்றன. மூன்றாவது முறையாக 1523இல் போர்த்துக்கீசியர்கள் கோவிலை புனரமைத்தபோது கல்லறையைத் திறந்தனர். கடைசியாக 1729ஆம் ஆண்டு கல்லறையைத் திறந்து மண் எடுத்து பக்தர்களுக்கு விநியோகித்தனர். சென்னையில் உள்ள ‘சாந்தோம் பேசிலிக்கா’ (San Thome Basilica) ஆலயத்தில் அவரது கல்லறையையும், அங்குள்ள அருங்காட்சியத்தில் பரிசுத்த தோமாவின் ஓர் எலும்பின் பகுதியும், அவரைக் கொலை செய்வதற்கு உபயோகித்த ஈட்டியின் முன்பகுதியும் பாதுகாப்பாய் உள்ளன. தோமா, கி.பி 72, டிசம்பர் 21இல் இறந்தார் என்று கூறப்படுகிறது. அவர் இயேசுவுக்காய் இரத்த சாட்சியாய் மரித்த அந்தச் ‘சின்ன மலை’ (Little Mount), இன்று ‘செயிண்ட் தாமஸ் மவுண்ட்’ (St. Thomas Mount) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/spiritual/christian/p16.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License