இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
கிறித்தவ சமயம்

கடவுள் கேட்கும் காணிக்கை!

பேராசிரியர்.எ.சிட்னி சுதந்திரன்.


அரையடி நிலத்துக்கு
அடுத்த வீட்டுக்காரனோடு
அடி பிடி தகராறு வழக்கு...
சிரித்துக் கொண்டே
இறைவவன் சொன்னான்
‘என் சொத்துக்கு
இருவர் போட்டி..!’



கடவுள் எதிர்பார்க்கும் காணிக்கை

“பூமியும் அதன் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது” (சங்.24: 1).

ஆம்! இந்தப் பூமி கர்த்தரின் சொத்து. அதில் ஒரு சிறு பகுதியை நம் ஒவ்வொருவரிடமும், சங்கீதக்காரன் சொல்வதுபோல் 70 அல்லது 80 வருடங்கள் தற்காலிகமாக ஆண்டு அனுபவிக்கக் கடவுள் கொடுத்துள்ளார். அந்தச் சொத்திலிருந்து கிடைக்கும்,

“… பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற் பலனாலும் கர்த்தரைக் கனம் பண்ணு” (நீதி.3: 9) என்றும்,

“… கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத் தக்கதாக, அவனவன் தன்தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டு வரக் கடவன்” (உபா.16: 17) என்றும்,

“என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்..” (மல்லி.3: 10) என்றும்,

“தேசத்திலே நிலத்தின் வித்திலும் விருட்சங்களின் கனியிலும் தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உhpயது…”, (லேவி.27: 30) என்றும்,

கடவுள் தன் பங்கை காணிக்கையாய் நம்மிடம் உரிமையோடு கேட்கிறார்.



கடவுள் அருளும் ஆசீர்வாதம்

உலகம் உனக்கு நிலையானது அல்ல, அது தற்காலிகமானது; நீ நித்திய இராஜ்யத்துக்குப் போகத்தக்கதாக நான் உனக்குக் கொடுத்துள்ள ஆசீர்வாதத்தில் ஒரு பகுதியைக் காணிக்கையாய் எனக்குக் கொடு என்று கேட்கும் கடவுள், நமக்கு என்ன கைமாறு செய்கிறார்? பள்ளிக்கூடத்திலிருந்து மாலை பசியோடு வீடு திரும்பும் குழந்தைக்கு தட்டு நிறைய இனிப்புப் பதார்த்தம் கொடுத்து, அது ருசித்து உண்ணும் அழகை ரசிக்கும் தாய், “செல்லம்! என் கண்ணுல்ல... உன் அம்மாவுக்கு கொஞ்சம் தாயேன்” என்று கை நீட்டிக் கேட்கும் போது, குழந்தையும் தன் பிஞ்சு விரல்களால் சிறிது எடுத்து அதைத் தாயிடம் கொடுக்க, தாய் அதை அப்படியே அதன் வாயிலேயே ஊட்டி விடுவதோடு, பிள்ளையை அப்படியே வாரி அணைத்து முத்தமழையினால் தன் அன்பை வெளிப்படுத்துவாள் அல்லவா? ஆம்... அதைவிட நம் தேவன் அதிக அன்புள்ளவர் அல்லவா? அவருக்கு உரித்தான காணிக்கையை நாம் செலுத்தும்போது,

“…. நீங்கள் எவ்விதத்திலும் சம்பூர்ணமுள்ளவர்களாவீர்கள்” (2கொரி.9: 11) என்றும்,

“…. உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்” (2கொரி.9: 10) என்றும்,

“கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்…” (லூக்.6: 38) என்றும்,

“…… அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடம் கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோவென்று என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல்லி.3: 10).

அவரை சோதித்துப் பார்க்கும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர்ந்தவர்களாய், எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் அவருடைய காணிக்கையைச் செலுத்துவோம்.



இயேசு பாராட்டிய காணிக்கை

காணிக்கைப் பெட்டியின் முன் அமர்ந்திருந்த இயேசுவானவர், ஏழை விதவை போட்ட இரண்டு காசுகளைக் குறித்து,

“… ஐசுவர்யவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள்”. ஆனால், “பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள்”, ஏனெனில் “…. இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்..” (மாற்.12: 41, 43, 44) என்று சீடர்களிடம் கூறினார்.

யாருக்கு தர்மம் செய்ய வேண்டும்?

“…. இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக் கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன்…” (லூக்.3: 11) என்றும்,

“உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே” (லூக்.6: 30) என்றும் இயேசு கூறுகிறார்.

“தரித்திரனுக்குக் கொடுக்கிறவன் தாழ்ச்சியடையான்” (நீதி.28: 27) என்றும்,

“கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான். அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்” (நீதி.22: 9)என்றும்,

“ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்” (நீதி.19: 17) என்றும்,

“…. தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்” (நீதி.14: 21) என்றும் சாலொமோன் ஞானி குறிப்பிடுகிறார்.

“வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான் அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்” (சங்.112: 9) என்று சங்கீதக்காரன் சொல்வதையும்,

“… மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கேச் செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (மத்.25: 40) என்று இயேசுவானவர் சொல்வதைப் பார்க்கிறோம்.

ஏழைகள், திக்கற்றவர்கள், சிறுமைப்பட்டவர்கள், தரித்திரர்கள், ஊனமுற்றோர்கள்… இப்படிப்பட்டவர்களுக்கு நாம் தர்மம் செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பதை வேதம் போதிக்கிறது.

அந்தப் பையன் உணவின்றி உடையின்றி வாடிக் கொண்டு இருந்தாலும், ஆண்டவரை வாழ்த்திக் கொண்டிருந்தான். அவனது நிலைமையைக் கண்ட பெண்ணொருத்தி, “கடவுள் உன்னை அன்பு செய்கிறார் என்றால் உனக்கு உணவும் உடையும் தந்திருப்பாரே” என்றாள்.

பையன் சொன்னான், “கடவுள் யாரோ ஒருவரிடம் அதைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அவர் தான் கொடுக்க மறந்து விட்டார்”.

ஆம்..! ஒருவேளை அந்த ‘அவர்’ நாமாகக்கூட இருக்கலாமே..?



அங்கீகரிக்கப்படும் தர்மம்

“நீயோ தர்மம் செய்யும் போது உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக் கடவது” (மத்.6: 3) என்கிறார் இயேசு.

அதுபோல “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2கொரி.9: 7) என்ற வேதவசனத்தில் மனதாரக் கொடுப்பதையே தேவன் விரும்புவதைப் பார்க்கிறோம்.

நிராகரிக்கப்படும் தர்மம்

மனுஷர் காண வேண்டுமென்றோ, மனுஷரால் புகழப்படுவதற்காகவோ, சுய விளம்பரத்திற்காகவோ தர்மம் செய்யாதிருங்கள். அப்படிச் செய்யப்படும் தர்மத்தால் பரலோகத்திலிருக்கும் பிதாவினிடத்தில் உங்களுக்கு எவ்வித பலனும் இல்லை (மத்.6: 1-2) என்கிறார் இயேசு.

அதுபோல, “…. நீங்கள் ஒற்தலாமிலும், வெந்தயத்திலும், சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப் பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும்…” (மத்.23: 23) விட்டுவிட்டால் பலன் இல்லை என்கிறார் இயேசு.

அநேக நாட்களாய் ஆலயத்திற்குச் செல்லாமல் இருந்த மனிதனின் கனவில் கடவுள் தோன்றி, “ஏன் நீ ஆலயத்துக்கு வரவில்லை?” என்று கேட்டதற்கு,

“என்னிடம் காணிக்கை போட பணம் இல்லை” என்றான் அவன். அதற்குக் கடவுள், “உன் கண்கள் இரண்டிலும் நீர் கூடவா இல்லை? பணம் இல்லை என்ற வேதனையை கண்கலங்க என்னிடம் சொன்னால், அந்தக் கண்ணீர் சொட்டுக்களை காணிக்கையாக ஏற்று உனக்கு வேண்டியதைத் தரமாட்டேனா?” என்றார் கடவுள்!

பணத்தை அல்ல… உன்னையும் உன் கண்ணீரையும் எனக்குக் காணிக்கையாகத் தா என்கிறார் கடவுள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/spiritual/christian/p9.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License