இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

திருச்செந்தூர் - தைப்பூச வழிபாடு

மு. சு. முத்துக்கமலம்


முருகனின் அறுபடை வீடுகளில் ‘இரண்டாம் படை வீடு’ என்று போற்றப்படும் திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா நாளில், அலைவாயுகந்த பெருமானாக வடக்கு ரத வீதியிலுள்ள சங்கு முக நாட்டு இல்லத்தார் மண்டபத்தில் எழுந்தருளி அருள் புரிகிறார்.

தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் ஸ்ரீ வைகுண்டம் வட்டம் மற்றும் திருச்செந்தூர் வட்டம் எனும் இரு வட்டங்களில் இருக்கும் ஈழவர் சமூகத்தினர் (தற்போது ஈழவர், இல்லத்தார், இல்லத்துப் பிள்ளைமார் என்கிற பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்) வாழ்ந்த சில ஊர்களை கருங்குளம் - புத்தனேரி கடிஸ்தலம், வல்லநாடு - செட்டிமல்லன்பட்டி கடிஸ்தலம், ஸ்ரீவைகுண்டம் - ஆழ்வார் திருநகரி கடிஸ்தலம், ஏரல் - சேது கடிஸ்தலம், ஆத்தூர் - காருகுறிச்சி கடிஸ்தலம் என்று மொத்தம் ஐந்து கடிஸ்தலங்களாகப் பிரித்திருக்கின்றனர்.


கடிஸ்தலம் என்பதற்கு ஈழவர் வாழும் நிலப்பகுதி என்று தமிழ் அகரமுதலி பொருள் தருகிறது. ஈழவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளில், கருங்குளம் - புத்தனேரி கடிஸ்தலத்தில் புத்தனேரி, கருங்குளம், செய்துங்கநல்லூர், புளியங்குளம், கற்குளம், பக்கவெட்டி, அரியகுளம், வசவப்பபுரம், பொந்தன்புளி எனும் ஒன்பது கிராமங்களும், வல்லநாடு - செட்டிமல்லன்பட்டி கடிஸ்தலத்தில் வல்லநாடு, செட்டிமல்லன்பட்டி, எல்லைநாயக்கன்பட்டி, சிங்கத்தாகுறிச்சி, மீனாட்சிப்பட்டி, மணக்கரை, சிவகளை, திருத்திய பொட்டல், பொட்டலூரணி எனும் ஒன்பது கிராமங்களும், ஸ்ரீவைகுண்டம் - ஆழ்வார் திருநகரி கடிஸ்தலத்தில் ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி, வேளூர் (வெள்ளூர்), சிவராமமங்கலம், தென்திருப்பேரை, கடையனோடை, திருக்களூர், மணல்குண்டு, மணவளராயநத்தம் எனும் ஒன்பது கிராமங்களும், ஏரல் - சேது கடிஸ்தலத்தில் சிறுத்தொண்ட நல்லூர், ஏரல், சேதுவாய்க்கால், சின்னநட்டாத்தி, ஆனையப்பப்பிள்ளை சத்திரம், நல்லூர், திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணம், உடன்குடி, மறந்தலை, வீரபாண்டியன்பட்டணம், வடலிவிளை எனும் 12 கிராமங்களும், ஆத்தூர் - காருகுறிச்சி கடிஸ்தலத்தில் ஆத்தூர், குருவித்துறை (முக்காணி), கொற்கை, மாறமங்கலம், பழையகாயல், பெருங்குளம், முடிவைத்தானேந்தல், புதூர், வாகைக்குளம், பேய்க்குளம், சேர்ந்தபூமங்கலம் எனும் 11 கிராமங்களும் என்று மொத்தம் 50 ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த 50 ஊர்களை உள்ளடக்கிய ஈழவ சமூகத்தினர் வாழ்ந்த நிலப்பகுதிகளை ‘சங்கு முக நாடு’ என்று வகைப்படுத்தியிருக்கின்றனர்.


அகத்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான உரோமச முனிவர், தன் குருவான அகத்தியரின் அறிவுரைப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டு, அதனைத் தொடர்ந்து சென்று, அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்களான பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூமங்கலம் ஆகிய ஊர்களில் சிவபெருமானுக்குக் கோயிலமைத்து வழிபட்டு, கடைசியாக சேர்ந்த பூ மங்கலம் அருகிலுள்ள சங்கு முகத் தீர்த்தத்தில் நீராடி முக்தி பெற்றார் என்று புராணக்கதைகள் தெரிவிக்கின்றன. சேர்ந்த பூமங்கலம் பகுதி முன்பு சங்கு முகப் பகுதி என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு, புத்தனேரியில் தொடங்கி, சங்கு முகப்பகுதியான சேர்ந்த பூமங்கலம் பகுதியில் முடிவடைந்த இந்த 50 ஊர்களைக் கொண்ட பகுதியினை சங்கு முக நாடு என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று சிலர் சொல்கின்றனர். புத்தனேரியில் தொடங்கி, சேர்ந்த பூமங்கலம் வரையிலான 50 ஊர்களையும் ஒரு கோடிட்டு ஒருங்கிணைத்தால், அது சங்கு முகத் தோற்றத்திலிருக்கும் என்று சிலர் சொல்கின்றனர். சங்கு முக நாடு என்று எப்படி பெயர் வந்தது? என்பதற்கு ஒத்த கருத்துகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

சங்குமுக நாட்டு ஈழவ சமூகத்தினருக்கு வழங்கப் பெற்ற உரிமையின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா நாளன்று, தமிழ் வருடம் 1099 ஆம் ஆண்டு, தை மாதம் 13 ஆம் நாளில் (1924 ஆம் ஆண்டு, ஜனவரி 26) அன்று செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, சங்கு முக நாட்டு ஈழவர் சமூகத்தினர் கட்டுமானம் செய்திருக்கும் திருச்செந்தூர், வடக்கு ரத வீதியிலிருக்கும் சங்கு முக நாட்டு இல்லத்தார் தைப்பூச மண்டபத்தில், சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா நாளன்று, திருச்செந்தூரிலிருக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாரதனையும் நடைபெறுகிறது. தீபாராதனைக்குப் பிறகு, சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள சங்கு முக நாட்டு இல்லத்தார் தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. சங்கு முக நாட்டு ஈழவ சமூகத்தினர் வழிபாட்டிற்குப் பிறகு, சுவாமி தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தபடியேக் கோவிலுக்குச் செல்வது வழக்கமாக இருக்கிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/spiritual/hindu/p1013.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License