இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

கோயில்களில் பள்ளியெழுச்சி ஏன்?

உ. தாமரைச்செல்வி


மார்கழி மாதத்தில் நாடெங்கும் விடியற்காலையில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடக் கேட்கிறோம்.

திருவாசகத்தில் திருவெம்பாவை ஒரு பதிகம், 20 பாடல்கள். திருப்பள்ளி எழுச்சி ஒரு பதிகம், 10 பாடல்கள். இவை சைவ பரமாகப் பாடப் பெற்றவை.

சைவத்தில் திருவெம்பாவையைப் போன்று, வைணவத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, 30 பாடல்கள் உள்ளன. வைணவத்தில் திருப்பள்ளி எழுச்சி 10 பாடல்கள் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடியது.

திருவெம்பாவை, திருப்பாவை இவ்விரண்டும் நோன்பை அடிப்படையாகக் கொண்டது. பாவை நோன்பு இன்றும் கன்னிப் பெண்களால் நோற்கப் பெறுவது.

நாட்டில் நன்கு மழை பொழிய வேண்டும், பெண்களுக்கு நல்ல கணவர் வாய்க்க வேண்டும் என்ற இரண்டு காரணங்களை முன்னிட்டு நோற்பது பாவை நோன்பு.

கன்னியர் அதிகாலையில் எழுந்து பல வீடுகளுக்குச் சென்று ஒருவரை ஒருவர் எழுப்பிப் பலராகச் சேர்ந்து ஆறு, குளம் முதலிய நீர் நிலைகளில் குள்ளக் குளிர நீராடிப் பாவை நோன்பு நோற்பர்.

அந்த நோன்பின் பயனாக நாட்டில் நல்ல மழை பெய்யும். ‘’தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து" என்னும் ஆண்டாளின் திருப்பாவைக்குப் பெரிய வாச்சான் பிள்ளை அருமையான வியாக்கியானம் எழுதுகிறார்.

மாதம் மும்மாரி என்பது ‘’ஒன்பது நாள் வெயிலும் ஒரு நாள் மழையுமாய்" என்கிறார். ஒன்பது நாள் வெயில் காய வேண்டும். பத்தாம் நாள் மழை பெய்ய வேண்டும். ஒன்பது நாள் வெயிலின் சூட்டைப் பத்தாம் நாள் மழை தணிக்கும். இப்படி மூன்று பத்து முப்பது நாட்களில் மும்முறை மழை பெய்ய வேண்டும்.


நாடு செழிக்கும், சீதைக்கு இராமன் போல, நப்பின்னைக்குக் கண்ணன் போலப் பெண்களுக்கு நல்ல கணவன்மார்கள் வாய்க்க வேண்டும். பக்தியும் ஒழுக்கமும் முயற்சியும் உடைய வாழ்க்கைத் துணைவர் கிடைக்க வேண்டும்.

இவ்விரண்டும் வேண்டிப் பழங்காலத்தில் பாவை நோன்பு பற்றிய செய்திகள் உள்ளன. எனினும் சமய இலக்கிய காலத்தில் மாணிக்கவாசகரும், ஆண்டாள் நாச்சியாரும் திருவெம்பாவை திருப்பாவை பாடியதன் மூலம் ஒரு நல்ல மரபை நாடெங்கும் பரப்பினர்.

திருப்பள்ளி எழுச்சியும் காலைப்பாட்டே ஆகும். பள்ளி என்றால் இக்காலத்தில் பொதுவாக பள்ளிக்கூடம், கல்விக்கூடம் என்பதாகவே அனைவரும் அறிவர். படுக்கும் படுக்கைக்கும் பள்ளி என்று பெயருண்டு. பள்ளியறை என்றால் படுக்கையறை.

பள்ளிகொள்ளல் என்றால் உறங்கச் செல்லல். பள்ளி எழுதல் என்றால் உறங்கி எழுதல்.

உறங்கும் ஒருவரை, உறக்கத்திலிருந்து எழுப்புவதாகப் பாடப்படுவது பள்ளி எழுச்சி. முற்காலத்தில், சங்க காலத்தில் அரசர்கள் போர் முனையில் பாடி வீட்டில் இரவில் பாதுகாவலுடன் படுத்து உறங்குவர். புலர் காலைப் பொழுதில் புலவர்கள் இனிமையாய்ப் பாட்டுப் பாடி அரசனைத் துயில் எழுப்புவர். இதற்குத் ‘’துயிலெடை நிலை" என்று பெயர்.

மன்னனை எழுப்பும் மரபு பின்பு சமய இலக்கிய காலத்தில் தெய்வத்தை எழுப்பும் மரபாயிற்று.

தெய்வம் தூங்குமா? என்று கேட்கலாம். இது ஒரு மரியாதைக்குத்தான்.

இதிலும் ஒரு தத்துவம் (உண்மை) உண்டு. விழிப்பு நிலையிலிருந்து உறங்கிக் கிடக்கும் பக்தர்களை ஆண்டவன் எழுப்பி விழிப்பு நிலையை அருளுகிறான். அதற்கு ஒரு வியாஜமாக அடியார்கள் ஆண்டவனை எழுப்புவதாகப் பாடப்படுகிறது. மாணிக்கவாசகர் சிவபெருமானைப் பள்ளி எழுப்பத் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருஅரங்கனைப் பள்ளி எழுப்பத் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார். வேதாந்த உலகில் தத்துவராயர் என்பவரும் திருப்பள்ளி எழுச்சி பாடியுள்ளார். பின்னாளில் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரை எழுப்புவதாகத் திருப்பள்ளி எழுச்சி பாடியுள்ளார்.

நம் காலத்தில் தேசிய கவி பாரதியார், நாடும் மக்களும் விழித்தெழ வேண்டும் என்பதற்காக திருப்பள்ளி எழுச்சி பாடியுள்ளார்.

பள்ளியெழுச்சி மன்னர்களை எழுப்பும் மரபாக ஆரம்பித்து, தெய்வங்களை எழுப்பும் மரபாக வளர்ந்து, மக்களை எழுப்பும் மரபாகவும் வந்துவிட்டது.

பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்பது வள்ளலார் உபதேசங்களுள் ஒன்று. எதிலும் விழிப்பாக இருக்க வேண்டும்.

நாடெங்கும் மழை பெய்ய வேண்டும்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் நல்லவர்களாக அமைய வேண்டும்.

குடும்பங்கள் நன்றாக அமைய வேண்டும்.

மக்கள் உறக்க நிலையை விட்டு விழிப்பு நிலை எய்த வேண்டும்.

இம்மூன்றையும் வேண்டுவதே, அடைவதே திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சிகளின் நோக்கம். இந்த நன்மரபை மணிவாசகர் திருவாசகம் உலகுக்கு வழங்குகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/spiritual/hindu/p1022.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License