குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும் அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை எனும் ஐந்து நற்குணங்களைக் குறிக்கிறது. மேலும், குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்கள், ஐந்து கடவுள்களைக் குறிக்கிறது. அதாவது குத்துவிளக்கின் தாமரைப் போன்ற பீடம் பிரம்மாவையும், நடுத்தண்டு பகுதி விஷ்ணுவையும், நெய் எறியும் அகல் சிவனையும், தீபம் திருமகளையும், சுடர் கலைமகளையும் குறிக்கிறது. எனவேத் திருமணம் முடிந்து முதன் முதலில் புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒரு பெண் ஐந்து நற்குணங்களையும் கொண்டிருப்பேன் என்று உறுதியளிப்பதற்காகக் குத்துவிளக்கை ஏற்றச் சொல்கிறார்கள்.
குத்துவிளக்கை ஏற்றி வைத்து, குத்துவிளக்கில் உள்ள ஐந்து கடவுள்களையும் வணங்கி, குத்துவிளக்கில் இருந்து வரும் ஒளியால் வீடு முழுவதும் எப்படி ஒளிமயமாகிறதோ, அதேபோல் புகுந்த வீட்டில் வாழ வந்த பெண்ணின் வாழ்க்கையும் ஒளிமயமாக இருக்கும் என்கிற நம்பிக்கையும் தொடர்கிறது.