கோயிலிலிருக்கும் இறைவனுக்குச் சில பொருட்களைக் கொண்டு அபிசேகம் செய்து வழிபடுகிறோம். அபிசேகத்திற்குப் பயன்படுத்தும் பொருளுக்கேற்ப பலன்களும் வேறுபடுகின்றன. அவை;
* நன்னீர் - தூய்மை தரும்
* நல்லெண்ணை - நலம் தரும்
* பச்சரிசி மாவு - கடன் தீரும்
* மஞ்சள் தூள் - நல்ல நட்பு வாய்க்கும்
* திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும்
* பஞ்சகவ்யம் (பசுவின் பால், தயிர், நீர், சாணம், நெய் கலந்தது) - தீமையை அழிக்கும்
* பசும்பால் - நீண்ட ஆயுள் தரும்
* பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும்
* பஞ்சாமிர்தம் - பலம், வெற்றி தரும்
* தேன் - சுகமளிக்கும்
* நெய் - முக்தியளிக்கும்
* சர்க்கரை - எதிரியை வெற்றி கொள்ளும்
* இளநீர் - நல்ல சந்ததியளிக்கும்
* கருப்பஞ்சாறு - ஆரோக்கியமளிக்கும்
* நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும்
* சாத்துக்கொடி - துயர் துடைக்கும்
* எலுமிச்சை - நட்புடை சுற்றம் அமையும்
* வாழைப்பழம் - பயிர் செழிக்கும்
* மாம்பழம் - செல்வம், வெற்றி தரும்
* பலாப்பழம் - மங்கலம் தரும்
* மாதுளை - பகைநீக்கும், கோபம் தவிர்க்கும்
* தேங்காய்த்துருவல் - அரசுரிமை தரும்
* திருநீறு - அனைத்து நன்மையும் தரும்
* அன்னம் - அரசுரிமை தரும்
* சந்தனம் - சுகம், பெருமை சேர்க்கும்
* பன்னீர் - சருமம் காக்கும்
* கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும்
* சங்காபிசேகம் - நலம் அளிக்கும்.