இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

ஆலய உணவுகள்

முனைவர் தி. கல்பனாதேவி


ஆலயங்களில் பல்வேறு நைவேத்திய வகை உணவுகள் இறைவனுக்குப் படைக்கப் பெற்று அடியார்கள் மற்றும் மக்களுக்குப் பிரசாதமாக வழங்கப் பெற்றன. இதனை அக்காலக் கல்வெட்டுக்கள் வழியாகத் தெரிய வருகின்றன.

அக்காரவடிசில் - (பொ) (அக்கார் அடலை)

சர்க்கரைப்பொங்கல்

“திருவநந்தேஸ்வரத்து பட்டாரகரை சந்திராதித்தவற் நியதம் அக்கார வடியல்லமுது செய்வதற்கு”

“அக்காரடலைக்கு நீக்கி நின்ற நிலன்.” (தெ.கல்.தொ.19. கல்.60.)

அக்காளி - (பொ)

கற்கண்டுச் சாதம் (நிவேதப் பிரசாதம்.) அக்காளிதம் என்றும் பெயர் பெறும்.

அக்கிரசாலை - (சம)

பிராமணர்க்கு நாளும் தர்மமாக உணவளிக்கும் சத்திரம். (சாலை - உணவு அறச்சாலை) (க.க.சொ.அகரமுதலி, ப.2.)

அப்பம் - (பொ)

ஓர் வகை உணவுப் பண்டம். பல்லவர் காலத்தில் நிவேதன வழக்கிலுள்ளது. தட்டில் அப்பிச் செய்யப் பெறுவதால் அப்பமெனப் பெயர் பெற்றது.

“தட்சிணாமூர்த்திதேவர் அமுது செய்தருளவும் வெண்போனகத்துக்கும், பருப்புப் போனகத்துக்கும் அப்பத்துக்கும்” (தெ.கல்.தொ.12. கல்.201.) (க.க.சொ.அகரமுதலி, ப.19.)

அடைக்காய் அமுது - (சம)

வெற்றிலையுடன் சேர்த்து தின்னுதற்குரிய அமுதாகிய பாக்கு. இதனை அடையமுது என்றும் கூறுவர். இறைவன் நிவேதனத்தின் போது பயன்படுத்தப் பெறும்.

“உண்ணும் சோறும் தின்னும் வெற்றிலையும்” (நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்.)

சந்தி ஒன்றுக்கு அடைக்காயமுது வெறும்பாக்கு நாலும், வெற்றிலை எட்டும்” (தெ.கல்.தொ.8. கல்.66.)

“அடைக்காய் அமுதுக்கு பாக்கு ஐஞ்சும் வெற்றிலை ஓரடுக்குக்கு நெல்லு நாழியும்” (முதல் இராசேந்திரன், தெ.கல்.தொ.4.கல்.538.) (க.க.சொ.அகரமுதலி, ப.14.)

அலசந்திப்பயிறு - (வ)

சோழ நாட்டில் விளைந்த பயறு வகைகளுள் ஒன்று. சீர்காழியிலுள்ள திருஞானசம்பந்தர் திருக்கோயிலில் நாளும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

“ஆளுடை பிள்ளையார்க்கு கறியமுதாக அமுது செய்தருள நாள் ஒன்றுக்கு அலசந்திப்பயிறு நாழியாக ஆட்டைக்குப் பயறு நாற்கலமாக” (இராசாதிராசன், கி.பி.1177, தெ.கல்.தொ.5.கல்.988.) (க.க.சொ.அகரமுதலி, ப.26.)


எற்சோறு - (சம) (எல்சோறு)

திருக்கோயில்களில் உச்சியம் போதில் அடியார்கட்களிக்கும் உணவு. (தெ.கல்.தொ.8.கல்.85.) (க.க.சொ.அகரமுதலி, ப.85.)

ஒழுக்கவி - (வ)

நாளும் முறையாகக் காட்டும் நிவேதனமாகிய உணவு. கோயில்களில் நாள் வழிபாட்டு முறைமைகட்குரியதாக நாள்தோறும் படைக்கும் சமைத்த உணவு. (பிரசாதம்.)

“இவ்வய்யோம் வயலைக்காலில் அடுத்த காடி மூன்று கூற்றாலும் படாரர்க்கு ஒழுக்கவிக்கும் நந்தாவிளக்கு ஒன்றுக்கும், கொடுத்துாட்டுவோமாக” (நந்திவர்மபல்லவன், கி.பி.712.) தெ.கல்.தொ.12.கல்.39.)

“இத்தளி வழிபாடு செய்வார்க்கு வகுத்து இதனுள் மிக்க நிலம் ஒழுக்கவிக்கு விளைநிலமாகவும்.” (கூரம் - செப்பேடுகள்.) கி.பி.675. (க.க.சொ.அகரமுதலி, ப.91.)

கறியமுது வகை - (சம)

திருக்கோயில்களில், நிவந்தப்படி மடைப்பள்ளியில் சமைக்கப் பெற்று நிவேதனம் செய்யப் பெறும் கறி வகைகள், காய்கறி, புளிங்கறி. புழுக்குக்கறி, கூட்டுக்கறி என்பனவாகக் கல்வெட்டுக்களில் கூறப் பட்டுள்ளன. இவை நெய்யிட்டு ஆக்கப்படும் முறை,

“கறிது மிக்கவும் பொரிக்கவும் பசுவின் நெய் ஆழாக்கு ” என்றும் விளக்கப்பட்டுள்ளன. (தெ.கல்.தொ.14, கல்.13,16 - அ) (க.க.சொ.அகரமுதலி, ப.117.)

கும்மாயம் - (பொ)

சிறு பயிற்றுப் பருப்பிட்டுச் செய்யும் இனிப்புக் கலந்த பண்டம். நிவேத உணவுப் பண்டங்களுள் ஒன்றாகவும் வழக்கிலிருந்துள்ளது.

“கும்மாயத்துக்கு பயிற்றப் பருப்பு உரி”

“கும்மாயத்துக்குச் சிறு பயிற்றுப்பருப்பு இரு நாழி.” (தெ.கல்.தொ.14. கல்.13.16.)

“கும்மாயம் உள்ளிட்டுக் கறி ஞாலும் நெய் ஆழாக்கும்.” (தெ.கல். தொ.19.கல்.22.) (க.க.சொ.அகரமுதலி, ப.146.)

சட்டிச்சோறு - (சம)

கோயில் பணியாளர்க்கும் சிவனடியார்க்கும் சட்டி அளவிட்டுக் கொடுக்கும் ஒரு சட்டிச்சோறு இரு நாழி அரிசி சமைத்த சோற்றின் அளவுடையதாகும்.

“இந்நாயனார் கோயிலில், எந்நொபாதி காணி காணியில் நித்த மிருநாழி யரிசி சோறு இரண்டு சட்டியிட்டு வருவேனாகவும்.” (விக்கிரமசோழன், கி.பி.1147, தெ.கல்.தொ.5. கல்.226.)

“இக்கோயிலில் உச்சியம் போதொரு சந்திக்கு வந்த அடியாரில் ஒரு மஹேஸ்வரர்க்கு அமுது செய்ய ஒரு சட்டிச்சோறு இரு நாழி அரிசியால் அமுது செய்விக்கக் கடவோமாக.” (தெ.கல்.தொ.8.கல்.622.)

“ஸ்ரீ மஹேஸ்வரர்க்கு சட்டிச்சோறு ஆயிரம் கொடுக்கவும்” (இராசேந்திரன்2, தெ.கல்.தொ.4.கல்.223.) (க.க.சொ.அகரமுதலி, ப.171.)

சுகியன் பிரஸாதம் - (சம)

உள்ளீடாக இனிப்பிட்ட பருப்புத் துகைப்பிட்டுச் செய்யும் பண்டம்.

“திருவேங்கடமுடையானுக்குரிய நிவேதன பிரசாதங்களுள் ஒன்றாகும்” (க.க.சொ.அகரமுதலி, ப.480.)

தத்தியோதனம் - (சம)

வெண்ணெய்யிட்ட தயிர்ப் பிரசாதம். (தொ.7.கல்.53.) (க.க.சொ.அகரமுதலி, ப.481.)


நிசதி நாலு சோறு - (வ)

நாள் ஒன்றுக்கு நான்கு அளவு சோறு என்றும், குறிப்பிட்ட அளவில், நான்கு அளவு சட்டிச்சோறு என்றும் கொள்ளலாம். இக்காலத்தில், திருக்கோயில், அன்ன அறச்சாலை ஆகியவற்றில் “ஒருபட்டைச்சோறு” என்ற அளவில் கொடுக்கப்படும் அளவினை ஒப்பிட்டறியலாகும். இவ்வளவை அக்காலத்தில் இரு நாழி அரிசி கொண்டு ஆக்கிய சோறு ஒரு சட்டிச்சோறு என்பதேயாம்.

“இப்பொன் கடைகூட்ட வந்தார்க்கு நிசதி நாலு சோறு குடுப்போமானோம்.” (தெ.கல்.தொ.12.பகு.1.கல்.100.) (க.க.சொ.அகரமுதலி,ப.301.)

திரிகாலந்திருவமுது - (சம)

காலை, மதியம், இரவு ஆகிய மூன்று சந்தியாக் காலங்கள், பெரும்பான்மையும் இம்மூன்று காலங்களிலேயே கோயில்களில் வழிபாடு நிகழ்தல் வழக்காம்.

“திருவண்ணாமலையில் எழுந்தருளுவித்த பிச்ச தேவர்க்கு திரிஸந்தி முக்காலுந் திருவமுது செய்தருளச் சிறுகாலைக்கு உச்சியம் போதைக்கு - இரவைக்கு திருவமுதரிசி இரு நாழியும்.” (தெ.கல்.தொ.8. கல்.66.) (க.க.சொ.அகரமுதலி, பக் 242.)

திருப்பாவாடை - (சம)

இறைவனின் சிறப்புப் பிரசாதமாக துாய வெண்மையான ஆடை விரிப்பன் மீது படைக்கப் பெறும் சிறந்த முறையில் சமைக்கப்பட்ட உயர்ந்த பொங்கல்.

“திருப்பாவாடைக்கு நாங்கள் அளக்கும் குத்தல் அரிசி இருகலம்” (திருநெல்வேலி கல்வெட்டு, தெ.கல்.12.கல்.244.)

திருப்பாவாடைப்புறம் - (சம)

தில்லை அம்பல நடராச பெருமானுக்குத் தைப்பூசத் திருநாளில் இட்டுப் படைக்குஞ் சிறப்பான அமுது படையல் “திருப்பாவாடை” என்று பெயர் என்று வரையப் பெற்றுள்ளது. இச்சிறப்புப் படையலுக்கு உரியதாக நிவந்தம் செய்யப்பட்ட இறையிலி நிலம் திருப்பாவாடைப் புறம் என்று பெயர் பெறும்.

“திருத்தைப்பூசைத் திருநாளிலே திருப்பாவாடைச் சிறப்பாக அமுதுபடிக்கு - பதின்கலனுக்குப் போனகப் பழவரிசியும்” (கல்வெட்டு அறிக்கை எண் - 106/ 1934/ 35 )

“அச்சிறுபாக்கத்து உடையார் ஆட்சி கொண்டருளிய மஹாதேவர் நந்தவனத்து மண்டபத்து ஏறியருளின நாள் திருப்பாவாடை அமுது செய்தருள விட்ட நீர் நிலமாவது.” (தெ.கல். தொ.7, கல். 452.) (க.க.சொ.அகரமுதலி, ப.252.) இந்த செய்தியின் வழி இதனை நாம் மேலும் தெள்ளிதாய் அறியலாம்.

திருமந்திர போனகப்புறம் - (சம)

கோயில் சுவாமிக்கு சந்தி வழிபாட்டின் போது மந்திரம் ஓதி நிவேதன உணவுப் படைப்பதற்குரிய வருவாயாக வைக்கப் பெறும் நிலம் அல்லது ஊர்.

“நாயனாற்கு திருமந்திரப் போனகப்புறமாக விட்ட என்பவற்றில் மடப்பள்ளியில் குமிழியூரும், தீர்த்தமும் ஆக இவ்விரண்டருளும்” (குலோத்துங்கசோழன், தெ.கல்.தொ.கல்.130.) (க.க.சொ.அகரமுதலி, ப.255.)

திருவக்கிரம் - (சம)

திருஅக்கிரம். மேலான முதல் மரியாதை உணவு. சிறந்த அக்கிரதானம்.

முதற் குலோத்துங்கன் ஆட்சியில் திருவகீந்திரபுரம் திருமால் கோயிலில் நாளும் பத்துக்கலம் திருவக்கிர உணவு தயாரிக்கப்பட்டு வைணவ பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது.

“திருவயிந்திரபுரத்தாழ்வானுக்கு திருநாட்களில் எழுந்தருளவும் இக்கோயிலில் நித்தம் பத்துக்கலம் திருவக்கிரம் உண்ணக் கடவதாகவும்” (முதற் குலோத்துங்கன் - கி.பி.1092, தெ.கல்.தொ.7, கல்.760.) (க.க.சொ.அகரமுதலி, ப.259.)

திருவமிர்து - திருவமுது.

கோயில்களில் இறைவழிபாட்டிற்கெனத் துாய முறையில் ஆக்கப் பெறும் நிவேதன உணவு.

“குலேங்கிழார்கள் கருமாரச்சேரி புலம் ஒற்றியிட்டு நாற்பத்தைங்காடி நெல் பொலியூட்ட, திருவடிகட்கு திருவமிர்து முட்ட” (தந்திவர்மன், கி.பி.789, கல்வெட்டு அறிக்கை, தொ.8, எண்.29.)

“நடுவிற்றளி தேவர் - திருவமுதுக்கு நில நிவந்தம் செய்தபடி” தெ.கல்.தொ.5, கல்.612.)

“திருவமுது காட்டுவா னொருவனும்” தெ.கல்.தொ.19, கல்.62.)

“பரமேஸ்வரர்க்கு திருவமிர்தும் திருவமிர்துக்கு வேண்டுவனவும்” (புதுக்.கல்.63.) (க.க.சொ.அகரமுதலி, ப.250.)

துாக்குத்தல் அரிசி - (சம)

இறைவன் நிவேதனத்திற்குரியதாக துாய்மையுடன் நெல்லைக் குற்றித் தீட்டிய அரிசி.

“பிள்ளையார் கயவதியார்க்கு நான் போனகத்துக்கு வைத்த துாக்குதல் அரிசி இரு நாழி.” (முதல் இராசராசன்,கி.பி.996, தெ.கல்.தொ.7.கல்.841.) (க.க.சொ.அகரமுதலி, ப.272.)

நைவேத்தியம் - (சம)

இறை வழிபாட்டிற்குரியதாகப் படைக்கும் துாய உணவு. (க.க.சொ.அகரமுதலி, ப.484.)

பண்ணியாரம் - (சம)

இனிப்புப்பண்டம். விக்கிரம சோழன் ஆட்சியில் சின்ன காஞ்சிபுரம் அருளாளப் பெருமாளுக்குரிய நிவேதன அமுதுகளின் ஒன்றாக நிவந்தம் செய்யப் பெற்றுள்ளது. “பண்ணிகாரம்” என்றும் பெயர் பெறும்.

“பண்ணியார தட்சணைக்கு அரிசி இருநாழி” (பத.கல்.தொ.3.3, பக்.187.)

“திருமுன்பு சேவிக்கும் திருக்காட்சிகளுக்கும் திருப்பண்ணி காரத்துக்கும் விட்ட நிலம்” (தெ.கல்.தொ.8, கல்.43.) (க.க.சொ.அகரமுதலி, ப.330.)

பருப்புப்போனகம் - (சமு)

பருப்பிட்டுச் செய்த பொங்கல், கறியமுது.

“இரு நாழி துாக்குத்தலரிசியால் இராப்போனகம் காட்டுவார் ஆனார்கள்.” (இந்திய கல்வெட்டுத்துறை வெளியீடு - தொ.8.கல்.29.)

“வெஞ்சனத்துக்கு பருப்பு அமுதுக்கு நாள் ஒன்றுக்கு பயிறு நாழி.” (தெ.கல்.தொ.5.கல்.252.) (க.க.சொ.அகரமுதலி, ப.342.)

பாவாடைப்புறம் - (சம)

வெண் விரிப்பில் இட்டுப் படைக்கும் சிறந்த பொங்கல் பிரசாத நிவந்தம் நிகழ மூலதனமாக வைக்கப் பெற்ற நிலம். இச்சிறப்புப் பெற்ற படையல் தில்லை நடராசப் பெருமானுக்கு ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளில் நிகழ்வதாகும்.

“திருத்தைப் பூசத் திருநாளிலே திருப்பாவாடைச் சிறப்பாக அமுதுபடிக்கு ஊர் இளங்காலாலே பதின்கலனுக்குப் போனகப் பழுவரிசியும் இரு கல மணிப்பருப்பும், நாலு நிறை சர்க்கரையும், நுாறு தேங்காயும், பத்து பலாக்காயும் குலோத்துங்க சோழ திருமடைப்பள்ளி பண்டாரத்திலே முதலிடவும் கயிலாய தேவன் “திருப்பாவாடைபுறம்” என்று திருமாளிகையிலே கல்வெட்டுவித்து” (சிதம்பரம் கல்வெட்டு, (தெ.கல்.தொ.12.கல்.171.) (க.க.சொ.அகரமுதலி, ப.359.)


பாற்போகம் - (சம)

பசுக்களின் வழியே பாலாகப் பெறும் வருவாய்.

“சாவா மூவாப் பசுவாக காத்து மேச்சு ரட்ஷித்து இவையிற்றில் பாற் போகம் கொண்டு நிசதம் உழக்கு நெய்யில் ஒரு நொந்தா விளக்குப் பகலும் இரவும் எரிப்போமானோம்.” (முதல் இராசேந்திரன், தெ.கல்.தொ.4.கல்.393.) (க.க.சொ.அகரமுதலி, ப.358.)

பிரசாதம் - (சம)

சுவாமிக்கு நிவேதனம் செய்த திருவமுதாகிய உணவு பிறருக்கு அளிக்கும் போது பிரசாதம் எனப்படும்.

“இவ்வமுது செய்த பிரஸாதத்தினால் செம்பாதி அபூர்வி ஸ்ரீ வைஷ்ணவராய் வந்தார்க்கு இடுவதாகவும்” (மணிமங்கலம் கல்வெட்டு)

பிரசாதம் செய்தல் - (வ)

அரசன் ஆணை இடுதல். (பிரசாதம் - மரியாதைச்சொல்.)

“உடையார் ஸ்ரீராஜராஜ ஈஸ்வரம் உடைய நாயனார் பிரசாதம் செய்தருளின திருமுகப்படி இறையிலி ஆன குடிகாடு.” (உலகுடை நாயனார் - அரசன்) (புதுக்.கல்.155.) (க.க.சொ.அகரமுதலி, ப.364.)

புள்ளிச்சோறு - (வ)

இன்ன அளவென்று முன்னமே திட்டப்படுத்தப்பட்ட சோறு (அறச்சோறு.)

பெருந்திருவமிர்து - (சம)

கடவுளுக்குப் பெரிய அளவில் படைக்கும் நிவேதனம். பாவாடைச்சோறு.

“ஒரு போழ்து சிறு காலை நானாழி அரிசியால் பெருந்திருவமுது காட்டுவதாகும். (தெ.கல்.தொ.8.கல்.10.) (க.க.சொ.அகரமுதலி, ப.380.)

போனகம் - (சம)

போசனம், உணவு. நிவேதன உணவினைக் குறிக்கும்.

“இரு நாழி துாக்குத்தலரிசியால் இராப்போனகம் காட்டுவாரானார்கள்.” (திருவல்லிக்கேணி கல்வெட்டு) (இந்திய தொல் பொருள் தொகுப்பு, 8, கல்.29.)

“திருவண்ணாமலை நாயனார்க்கு திருமந்திரப் போனகப் புறமாக விட்ட பற்றில்” (தெ.கல். தொ.8, கல்.130.)

போனகம் என்பது உணவு என்பதனைக் கம்பநாடாரும்,

“வானகம்தனின் மண்ணினின் மன்னுயிர் போனகந்தனக்கென்று எனும் புந்திய” என்று - தடாகை - படலத்துக் கூறுவர். (க.க.சொ.அகரமுதலி, ப.393.)

விரவிக் காட்டுந் திருவமிர்து - (சம)

நெய் கலந்து ஆக்கி நிவேதிக்கும் பிரசாத உணவு. (க.க.சொ.அகரமுதலி, ப.451.)


வெண் போனகம் - (சம)

வெண் பொங்கல் - பிரசாதம். (க.க.சொ.அகரமுதலி, ப.460.)

இவ்விதம் பல்வகை உணவுகள் பூசை வழிபாட்டில் இருந்தன என்பதை அறியலாம்.

மேற்காணும் தகவல்களுக்குத் துணை நின்ற நுால்கள்:

1. கோயிற்களஞ்சியம் கோயில் அறிமுகம், சிறப்பாசிரியர் கோ.மு.முத்துசாமிப்பிள்ளை. இ.ஆ.ப., தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். (தமிழ்ப்பல்கலக்கழக வெளியீடு, திருவள்ளுவர் ஆண்டு 2022, புரட்டாசி - அக்டோபர் 1991. முதற்பதிப்பு - 1991)

2. கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி, (கி.பி.7 முதல் 12 ஆம் நுாற்றாண்டு வரை), சி.கோவிந்தராசன், பதிப்புத்துறை, முதற்பதிப்பு - 1987, மதுரை காமராசர் பல்கலைக்கழகம். மதுரை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/spiritual/hindu/p543.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License