இறைவன் சிவபெருமான் சில பாவங்களை மன்னிப்பதே இல்லை என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. அவை;
1. திருமணமான ஒரு பெண்ணின் மீதோ அல்லது ஆணின் மீதோ ஆசை கொண்டு அவர்களை எப்படியாவது கவர நினைப்பது.
2. வயிற்றில் சிசுவைச் சுமந்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களை தகாத வார்த்தையால் திட்டுதல் அவர்கள் மனம் நோகும்படி நடந்துகொள்தல், அவர்களுக்குக் கொடுமை செய்தல்.
3. அடுத்தவர் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை அபகரித்தல்.
4. தாய், தந்தையர் மற்றும் குருவை அவமதிப்பது, அவர்களைத் துன்புறுத்துத்தும் செயல்.
5. தன்னுடைய சுயநலத்திற்காக, தனக்குக் கீழ் உள்ளோர்களை அழிக்க நினைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பது, தேவை இல்லாத பழியை அவர்கள் மீது சுமத்துவது போன்ற செயல்களைச் செய்தல்.
6. வஞ்சம் தீர்க்கக் குழந்தைகளைக் கொடுமை செய்தல், குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்தல், பெண்களைத் தாக்குதல் போன்ற செயல்கள்.
7. செய்யாத தவறைச் செய்ததாகச் சொல்லி அடுத்தவரின் வாழ்வைச் சீர்குலைப்போர்.
8. குறுக்கு வழியில் பலரை ஏமாற்றிச் சொத்து சேர்த்தல், ஒருவருக்குத் தானமாக கொடுத்ததைத் திரும்ப பெறுதல்.
9. தெய்வமாகப் போற்றப்படும் சில உயிரினங்களின் இறைச்சியை உண்ணுதல்.
10. பகை காரணமாகவோ, அல்லது வேறு சில காரணங்களுக்காகவோப் பிறரை கொலை செய்து ஒரு குடும்பத்தையே நிர்கதி ஆக்குதல்.