திருமணமான பெண்கள் தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்ல கூடாத பொருட்கள் என்று சிலவற்றை இந்து சமய சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அவை;
1. கூர்மையான பொருட்களான அரிவாள், கத்தி, அரிவாள் மனை, ஊசி போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது. இதனால் இரு வீட்டிற்கும் பகைமை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதனைத் தவிர்க்க வேண்டும்.
2. வீட்டைச் சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம், துடைப்பம் போன்ற பொருட்களை எடுத்து வரக்கூடாது. இதனால் இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்படக்கூடும்.
3. புதிதாகத் திருமணமானவர்களுக்கு மளிகைப் பொருட்களை சீதனமாக கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. இதை வருடந்தோறும் கடைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள். அதில் முக்கியப் பொருளான புளியைத் தவிர்க்க வேண்டும். இதைச் சீதனமாகவோ அல்லது கடனாகவோப் பெற்றால் உறவுகளுக்கு இடையே விரிசல் ஏற்படக் கூடும்.
4. கல் உப்பு மற்றும் எண்ணெய் இவை இரண்டையும் எடுத்து வரக்கூடாது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். அதனால் இதனை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
5. தாய் வீட்டில் பயன்படுத்திய விளக்கு, பூஜை அறையிலோ அல்லது வரவேற்பரையிலோ பயன்படுத்திய எந்த விளக்காக இருந்தாலும், அதைப் புகுந்து வீட்டிற்கு எடுத்து வருதல் கூடாது. விளக்கானது வீடு முழுவதும் வெளிச்சத்தைக் கொடுத்து, நேர் வினைகளை ஏற்படுத்தியிருக்கும். அதைப் புகுந்த வீட்டிற்குக் கொண்டு வந்தால் பிறந்த வீட்டில் இருள் சூழும் என்பது நம்பிக்கை.
6. தாய் வீட்டில் முருங்கை மரம் இருந்தால் அதிலிருந்து முருங்கைக்காய், முருங்கைக் கீரை, முருங்கைப்பூ போன்றவற்றையும், பாகற்காய், அகத்திக்கீரை, கருவேப்பிலை போன்றவையும் எடுத்து வரக்கூடாது. இதனால் பல கசப்பான விஷயங்கள் ஏற்படக்கூடும். எனவே, இதனைத் தவிர்க்க வேண்டும்.
7. பிறந்த வீட்டில் இருக்கும் அரிசிப் படியை எடுத்து வருதல் கூடாது. இது ஒரு குடும்பத்தின் தானியங்களை நிர்ணயிக்கும் படியாகக் கருதப்படுகிறது. இதைத் தாய் வீட்டில் இருந்து எடுத்து வருவதனால் தாய் வீட்டிற்கு வறுமை ஏற்படும்.
8. முறம், இது அரிசி புடைப்பதற்காக பயன்படுத்தப்படுவது. இதைத் திருமண சீதனமாகக் கூட வாங்கித் தரக் கூடாது. ஏனென்றால், இது ஈமச் சடங்கிற்கு பயன்படுத்தப்படுவதால், இதை நல்ல நிகழ்வுகளில் தவிர்ப்பது வழக்கம். அதனால், இதனைத் தாய் வீட்டில் இருந்து எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டும்.
9. திருமணமான பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்குச் சென்று அசைவ உணவை எடுத்து வருதல் கூடாது. அங்கு சென்று சாப்பிட்டு வரலாமே தவிர, அதனை வீட்டிற்கு எடுத்து வருதல் கூடாது. இது முற்றிலும் தவறு. பெண்கள் இதனை தவிர்த்தல் நல்லது.
10. சிலர் தாங்கள் வசிக்கும் இடத்தில் கோலமாவு கிடைக்காததால் அதைத் தாய் வீட்டிற்குச் சென்று எடுத்து வருகிறார்கள். கோல மாவை இலவசமாக எடுத்து வருதல் என்பது கூடாது. வேண்டுமென்றால், அதற்கான தொகையைத் தாயிடம் கொடுத்துவிட்டு எடுத்து வரலாம்.