நீறில்லா நெற்றி பாழ்” என்கிறார் திருமூலர்.
மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை எல்லாம் நீறச்செய்து அல்லது வலுவிழக்கச் செய்து வாழ்வில் உயர்நிலை அடையச் செய்வதால் அதற்குத் திருநீறு என்று பெயர். இதனைப் பொதுவாக விபூதி என்று அழைப்பர்.
திருநீறு பூசிய உடலைச் சிவாலயத்திற்க்கு சமமானது என்பர். அறிவியல் ரீதியாகப் பார்க்கும் போது திருநீறானது நம்மைச் சுற்றியுள்ள நேர்மறையான (positive energy) எண்ணங்களை கவர்ந்து எடுத்து உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியதாகும்.
இந்தத் திருநீறை எவ்வாறு அணிவது?
வடக்கு அல்லது கிழக்கு பக்கம் பார்த்தவாறு நின்றுகொண்டு, ஐந்தெழுத்து மந்திரமான “நமசிவாய அல்லது சிவாயநம” என்று சிவனது பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தவாறு பூசுதல் வேண்டும்.
இவ்விபூதி அணிவதற்குக் காலம் நேரம் என்று எதுவும் வரையறை இல்லை. நீங்கள் எந்நேரத்திலும் இறைவனை வணங்கி திருநீற்றினை அணிந்து கொள்ளலாம். இருப்பினும், இந்தத் திருநீறை அணியும் போது, சில நடைமுறகளைப் பின்பற்ற வேண்டும்.
அதாவது, கட்டை விரலால் திருநீறையணிந்தால் தீராத நோய் வரும். ஆட்காட்டி விரலால் தொட்டு அணிந்தால் பொருட்கள் நாசமாகும். நடுவிரலால் அணிந்தால் நிம்மதியின்மை உண்டாகும். சுண்டுவிரலால் திருநீறணிந்தால் கிரகதோஷம் உண்டாகும் என்பதால், திருநீறை மோதிர விரலால் மட்டுமே அணிந்திட வேண்டும்.
மோதிர விரலால் திருநீறு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும் என்று கூறப்படுகிறது. மோதிர விரலையும் கட்டைவிரலையும் சேர்த்து விபூதியை எடுத்து, மோதிர விரலால் அணிந்து கொண்டால் இவ்வுலகமே வசப்படும் என்றும் கூறப்படுகிறது.