அடியார்களின் புற இலக்கணம் பத்து. அதாவது புறத்தேக் காணுமாறு அமையும் இலக்கணம் பத்து. இவற்றை உபதேசக் காண்டம் என்ற நூல் தெளிவுபடுத்தியுள்ளது.
1. திருநீறும் கண்டிகையும் அணிதல்
2. பெரியோரை வணங்குதல்
3. சிவனைப் புகழ்ந்து பாடுதல்
4. சிவநாமங்களை உச்சரித்தல்
5. சிவபூசை செய்தல்
6. சிவபுண்ணியங்களை செய்தல்
7. சிவபுராணங்களை கேட்டல்
8. சிவாலய வழிபாடு செய்தல்
9. சிவனடியாரிடத்தன்றி உண்ணாமை
10. சிவனடியார்க்கு வேண்டுவன கொடுத்தல்
அக இலக்கணம் என்பது அடியார்களின் மனத்துள்ளேயும் உணர்வுள்ளும் ஏற்படும் மாற்றங்களாகும்.
சிவபெருமானது புகழைக் கேட்குங்கால்,
1. மிடறு விம்மல் (மிடறு-கழுத்து)
2. நாத்தழுதழுத்தல்
3. இதழ் துடித்தல்
4. உடல் குலுங்கல்
5. மயிர் சிலிர்த்தல்
6. வியர்த்தல்
7. சொல்லெழாமை
8. கண்ணீர் அரும்புதல்
9. வாய்விட்டழுதல்
10. மெய்மறத்தல்
என்பனவாகும்.
சிவபெருமானைப் பற்றி நினைக்கும் போதும், கேட்கும் போதும், தரிசனம் செய்யும் போதும், இவை தானாக நிகழும்.