1. ஸ்ரீரங்கம் கோவில், ஏழு உலகங்களை உள்ளடக்கியப் பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களைக் கொண்டிருக்கிறது.
2. ஸ்ரீரங்கம் கோவிலலானது, 1) பெரிய கோவில், 2) பெரிய பெருமாள், 3) பெரிய பிராட்டியார், 4) பெரிய கருடன், 5) பெரியவசரம், 6) பெரிய திருமதில், 7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமையுடையது .
3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 1) ஸ்ரீதேவி, 2) பூதேவி, 3) துலுக்க நாச்சியார், 4) சேரகுலவல்லி நாச்சியார், 5) கமலவல்லி நாச்சியார், 6) கோதை நாச்சியார், 7) ரெங்கநாச்சியார் என்று ஏழு நாச்சிமார்கள் இருக்கிண்றனர்.
4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். அவை; 1) விருப்பன் திருநாள், 2) வசந்த உத்சவம், 3) விஜயதசமி, 4) வேடுபறி, 5) பூபதி திருநாள், 6) பாரிவேட்டை, 7) ஆதி பிரம்மோத்சவம்.
5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். அவை; 1) சித்திரை, 2) வைகாசி, 3) ஆடி, 4) புரட்டாசி, 5) தை, 6) மாசி, 7) பங்குனி.
6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ஆம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார். அவை; 1) சித்திரை, 2) வைகாசி, 3) ஆவணி, 4) ஐப்பசி, 5) தை, 6) மாசி, 7) பங்குனி.
7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7 ஆம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.
8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்கக் குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். இங்கு ராமாவதாரம் 7வது அவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.
10. இராப்பத்து 7ஆம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.
11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். அவை; 1) கோடை உற்சவம், 2) வசந்த உற்சவம், 3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை, 4) நவராத்ரி, 5) ஊஞ்சல் உற்சவம், 6) அத்யயநோத்சவம், 7) பங்குனி உத்திரம்.
12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். அவை; 1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார், 2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார், 3) குலசேகர ஆழ்வார், 4) திருப்பாணாழ்வார், 5) தொண்டரடிபொடி ஆழ்வார், 6) திருமழிசை ஆழ்வார், 7) பெரியாழ்வார், ஆண்டாள்.
13. இராப்பத்து 7ஆ ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.
14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. அவை; 1) நாழிகேட்டான் கோபுரம், 2) ஆர்யபடால் கோபுரம், 3) கார்த்திகை கோபுரம், 4) ரெங்கா ரெங்கா கோபுரம், 5) தெற்குக் கட்டைக் கோபுரம்- I, 6) தெற்குக் கட்டைக் கோபுரம்-II, 7) ராஜகோபுரம்.
15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களைத் தவிர, மற்ற மண்டபங்களுக்குப் பெருமாள் எழுந்தருள மாட்டார். அவை; 1) வசந்த உற்சவம், 2) சங்கராந்தி, 3) பாரிவேட்டை, 4) அத்யயநோத்சவம், 5) பவித்ர உற்சவம், 6) ஊஞ்சல் உற்சவம், 7) கோடை உற்சவம்.
16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். அவை; 1) பூச்சாண்டி சேவை, 2) கற்பூரப் படியேற்ற சேவை, 3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை, 4) வெள்ளிக் கருடன் மற்றும் குதிரை வாகனம், 5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை, 6) தாயார் திருவடி சேவை, 7) ஜாலி சாலி அலங்காரம்.