இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

25. கோள் மூட்டி


ஜுமைமாவின் திறன்பேசி நாகூர் ஹனிபா பாடலுடன் அழைத்தது. ஜுமைமாவுக்கு வயது 26. வசீகரமான தோற்றம். இளங்கலை பௌதிகம் படித்தவள்.

மாதுக் என்கிற இளைஞனை மணந்து மூன்று வருடமாகிறது. மாதுக்-ஜுமைமாவுக்குக் குழந்தைகள் இல்லை. இருவருடனும் மாதுக்கின் அம்மா ஹசிகா சேர்ந்து வாழுகிறாள்.

டிஸ்பிளேயில் பெயர் பார்த்தாள். ‘பச்சை சட்டை மாமு’ எனப் போட்டிருந்தது. மாமுவின் பெயர் அஸ்காரி முகமது. ஜுமைமாவின் தாயாரின் மூத்த அண்ணன். மத்திய அரசுப் பணி பார்த்து ஓய்வு பெற்றவர். மனைவியின் மரணத்திற்குப் பிறகு வேலைக்காரியுடன் சேர்ந்து வாழ்வதாக கேள்வி.

“அஸ்ஸலாமு அலைக்கும் மாமு”

“வஅலைக்கும் ஸலாம் ஜுமைமா”

“என்ன மாமு, இந்த நேரத்தில் போன் பண்றீங்க?”

“ஒரு ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். உனக்குச் சொல்லலன்னா என் தலை வெடிச்சிரும்”

“அப்படி என்ன விஷயம்?”

“உன் மாமியாக் கிழவி இருக்காள்ல… அவகிட்ட நேத்தி மத்தியாணம் பேச்சுக் கொடுத்தேன். 22 நிமிடம் பேசினா, அதில 21 நிமிஷம் 40 நொடி உன்னைத்தான் கழுவிக்கழுவி ஊத்தினா. அவளுக்குத் தெரியாம அவளும் நானும் பேசினதை ரிக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்… கிழவிக்குச் சார்பாப் பேசி விஷயங்களைக் கறந்திருக்கேன். உனக்கு வாட்ஸ் அப்ல அந்தப் பதிவை அனுப்பட்டுமா?”

“அப்படி என்ன திட்னா, அந்தக் கோண வாய்க் கிழவி?”


“அதை நான் சொன்னா நல்லாருக்காது. வசவின் வீரியம் நீர்த்து விடும் அல்லது அடர்ந்து விடும். அவளும் நானும் பேசிக்கிட்ட பதிவை நான் தான் உனக்கு அனுப்பினேன்னு அவகிட்ட உளறிக் கொட்டிடாத. பின்ன அவ உஷாராய்டுவா அதோட என் கூடச் சண்டைக்கும் வருவா…”

“சரி மாமு…”

“அமைதியாப் பொறுமையா கேளு. அப்பத்தான் அவளோட வசவுகளோட உள்ளர்த்தம் உனக்கு முழுமையாகப் புரியும்”

“ஓகே மாமு”

தொடர்பைத் துண்டித்து புலனத்துக்குப் போனாள் ஜுமைமா. பதிவை ஆன் செய்தாள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்:
*‘(அடிப்படை இல்லாமல் பிறர் மீது சந்தேகம் கொள்வது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், இவ்வாறு சந்தேகம் கொள்வது மாபெரும் பொய்யாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரின் மீது ஒருவர் கோபம் கொள்ளாதீர்கள் (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களேI (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்’
- அபூ ஹுரைரா (ரலி) ஸஹீஹ் புகாரி 6724


“அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா. நல்லாயிருக்கீங்களா?”

“வலைக்கும் ஸலாம். யாரு அஸ்காரியா பேசுரது?”

“ஆமா என் தங்கச்சி மகள் எப்படி இருக்கிறாள்?”

“அவளைப்பத்தி பேசாதப்பா அவ ஒரு குரங்கு… எது சொன்னாலும் பாஞ்சு கடிச்சிடுரா…”

“அவளைத் திட்டாதீங்க. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் மாறிடும்… அப்புறம் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க’ன்னு பாட ஆரம்பிச்சுருவீங்க?”

“அவ ஒரு வாழைப்பழச் சோம்பேறி. சரியாச் சமைக்றதில்ல. ஒழுங்கா ஓதுரதில்ல, தொழுறதில்ல, சதா தூக்கம். ராத்திரி புருஷனோட சேந்து படுத்தாவுலக் குழந்தை பிறக்கும்”

“கல்யாணத்துக்குப் பிறகு திருந்தியிருப்பான்னுல நினைச்சேன்”

“நல்லா நினைச்சப் போ… எனக்குக் ‘கோணவாய் குப்பி’ ன்னு பட்டப்பெயர் வச்சிருக்கா. என்னைப் பார்க்கும் போதெல்லாம் கொலை வெறியாத்தான் முறைப்பா. நான் வேணாமாம். ஆனா, என் மகன் வேணுமாம். இது எந்த ஊர் நியாயம்?”

“சிலுக்குவார்பட்டி நியாயமால இருக்கு”

“நான் சாப்பிடும் போது, அப்படியே நின்று நான் சாப்பிடுறதைப் பாப்பா, நான் எத்னி கறித்துண்டு திங்ரேன்னு. அவ பார்த்தாலே எனக்கு வயித்தால புடுங்கிட்டு அடிக்கும்”

“அவ அப்படித்தான் ஹசிகாம்மா… யார் எதைத் தின்றாலும் அவளுக்குப் பொறுக்காது. கல்யாணத்துக்கு முன்னாடி அவ வீட்டுச் சனங்க அவளுக்கு ஒளிஞ்சு மறைஞ்சுதான் சாப்பிடும்கள். நான் அவ முன்னாடி டீ கூடக் குடிக்க மாட்டேன்”

“உன் தங்கச்சி மக மேக்கப் இல்லைன்னா சூன்யக்காரக்கிழவி மாதிரி இருப்பா. உண்மைல அவ காலேஜ்ல படிச்சாளா அல்லது படிச்ச மாதிரி காட்டி சர்டிபிகேட் வாங்கிட்டாளா?”

“ஜுமைமா படிப்புல கொஞ்சம் ஸ்லோதான்”

“எலிவால் தலைமுடி. சவரிமுடி வச்சு எல்லாத்தையும் ஏமாத்திக்கிட்டு இருக்கா”

“அதையும் கண்டுபிடிச்சிட்டீங்களா?”

“ஒழுங்காத் துணி துவைக்கத் தெரியாது. தன் பெட்ரூமைச் சுத்தமா வச்சுக்கத் தெரியாது. கட்ன புருஷனை மரியாதையாப் பேசத் தெரியாது, கல்யாணமான மூணே வருஷத்ல பலூன் மாதிரி ஊதிட்டா…”

“அதுக்கு என்ன பண்ணனும்ன்றீங்க?”

“இன்னும் ஒரு ஆறுமாசம் பார்ப்பேன்… அதுக்குள்ள அவ மாசமாகனும், என்கிட்ட மரியாதையா நடக்கனும். சமைக்கக் கத்துக்கிடனும், இல்லைன்னா அவளுக்கு தலாக் சொல்லி விரட்டிட்டு என் மகனுக்கு வேறொரு கல்யாணம் பண்ணி வச்சிருவேன்”

“ரெண்டாம் கல்யாணத்ல பிரியாணி போடுவீங்கதானே?”

“நீ தின்றதிலேயே இரு”

“இதெல்லாம் என் தங்கச்சி மகளுக்குத் தெரியுற மாதிரியா பேசாதிங்க. சாப்பாட்ல விஷம் வச்சுக் கொன்னிருவா”

“கொல்லுவாக் கொல்லுவா… கரன்ட் ஷாக் கொடுத்து நான் அவளை கொன்னிடுவேன்”

உரையாடல் பதிவு முடியவும், கணவர் மாதுக் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

“போன்ல யாரு ஜுமைமா?”

“ஒண்ணுமில்ல… ஹாட் ஸ்டார்ல சீரியல் பாத்துக்கிட்டு இருந்தேன்”

“பொய் சொல்லாதே. உன் போனிலிருந்து எனக்கு இரு பழகிய குரல்கள் கேட்டன. போனைக் குடு”

“மாட்டேன்”

போராடி திறன்பேசியைப் பறித்தான் மாதுக். ஹசிகா - அஸ்காரி உரையாடலை முழுவதும் கேட்டான். ஆங்காரமாகத் தரையைக் கால்களால் உதைத்தான்.

ஐந்து நொடிகள் யோசித்த அவன் அம்மாவின் அறைக்கு ஓடினான்.

போனை நோண்டிக்கொண்டிருந்தாள் ஹசிகா.

அம்மாவிடமிருந்து போனைப் பறித்தான். வாட்ஸ்அப் திறந்தான். அஸ்காரி அனுப்பிய ஆடியோவை அமுக்கினான்.

“அஸ்ஸலாம் அலைக்கும் தங்கச்சி மகளே”

“வலைக்கும் ஸலாம் மாமு”

“உனக்குச் சுடுதண்ணி கூடப் போடத் தெரியாதாமே?”


“நல்லா சமைக்கனும்னா அவ தன் மகனுக்கு ஒரு பைவ் ஸ்டார் செப்பைல்ல கட்டி வச்சிருக்கனும். என் மாமியா ஒரு தின்னிப்பண்டாரம். நான் எனக்குத் தெரிஞ்சதைச் சமைக்கிறேன். புருஷன் திருப்தியா சாப்ட்டுட்டு போரான்… இவ எதுக்குக் குறை சொல்லனும்?”

“நீ தினமும் தொழறதில்லைன்னு சொல்ரா கிழவி”

“தொழுறதை எல்லாருக்கும் கண்காட்சி ஆக்கனுமா? நான் தினமும் தொழுதுகிட்டுதான் வரேன்”

“உன்னை தூங்கு மூஞ்சின்றா…”

“எந்த கல்மிஷமும் இல்லாத எனக்குப் படுத்தவுடனேத் தூக்கம் வருது… அவதான் தூக்கமே வராம ஆந்தை மாதிரி கொட்டக்கொட்ட முழிச்சிக்கிட்ருக்கா...”

“உனக்கு எலி வால் மாதிரி தலைமுடியாம்”

“சொட்டைமண்டை என்னைக் குறை பேசுதாக்கும்”

“நீ மேக்கப் போடலைன்னா, கிழவி மாதிரி இருப்பியாம்”

“அவதான் கான்ஜுரிங் பேய்”

“நீ மலடியாம்”

“அவ கண்டா?”

“உன்னை தலாக் சொல்லிட்டு மகனுக்கு வேறொரு கல்யாணம் பண்ணி வைக்கப் போறாளாம்…”

“இவ மகனை விட பெட்டர் புருஷனை நான் மறுமணம் பண்ணிப்பேன். முகவாதம் வந்தது பத்தாது. இடது கைகால் இழுத்துக்கிட்டு அவ படுத்த படுக்கையாகிடணும். இதை அல்லாஹ்கிட்ட வேண்டாத நாளில்லை”

பதிவு முடிந்தது.

அம்மாவையும் மனைவியையும் ஒருசேர அழைத்தான். “உங்க ரெண்டு பேரும் கிட்டயும் நல்லவன் மாதிரி பேசி பதிவு பண்ணி உங்க ரெண்டு பேருக்கும் பதிவுகளை அனுப்பி குடும்பத்தை பிளக்கத் திட்டம் போட்டிருக்கான் அந்த அஸ்காரி. அஸ்காரி ஒரு முனாபிக். அவனை நம்பினால் துரோகம் செய்வான், பேசினால் பொய் பேசுவான், ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான், விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான். முனாஃபிக் என்கிறது நூல் புகாரி”

“அவனை ஏன் திட்ற? இருபக்க உண்மையைக் காட்டிக் கொடுத்திருக்கிறான்”

“நான் என் மனைவிக்கும், என் தாய்க்கும் இடையே நீதமாக நடப்பேன். இருவரும் என் கண்கள். உங்கள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையான மாமியார் மருமகள் ஆக்குவேன். அதற்கு அல்லாஹ் உதவட்டும். யாருடைய சதிவேலைக்கும் இரையாகாதீர்கள், பெண்களே” நொடி சப்தமாக மூச்சு விட்டான் மாதுக்.

“நாளைக்குக் காலைல அவனை செமத்தியாக் கவனிச்சிடுரேன்” முணுமுணுத்தான்.

ஓடும் அஸ்காரியை மாதுக்கும், அவனது நண்பர்களும் துரத்திப் பிடித்தனர். அஸ்காரியின் திறன்பேசியைப் பிடுங்கி வாட்ஸ்அப் போனான்.

550 குரல் பதிவுகள்.

அண்ணனுக்கும் தம்பிக்கும் சண்டை வர வசதியாக இரு பக்கப் பதிவுகள். இமாமுக்கும் முத்தவல்லிக்கும் லடாய் வர வசதியாக இரு பக்கப் பதிவுகள். மொத்தத்தில் அனைத்து குரல் பதிவுகளும் பல வகையில் உறவுகளையும் நட்புகளையும் பிரிக்கப் பயன்பட்டிருந்தன.


“யோவ் அஸ்காரி, தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கப் பதிவு செய்யக் காவல்துறை, உளவுத்துறை இரண்டுக்கும் மட்டுமேச் சட்டப்பூர்வ அனுமதி உண்டு. சில விஷயங்களைக் கற்கும் நோக்கோடு முன் அனுமதி பெற்று குரல் பதிவு செய்யலாம். நீ மனிதர்களைப் பிரிக்க ஷைத்தான் வேலை பார்த்திருக்கிறாய், உன் நாவில் புறம்பேசுதல், கோள்பேசுதல் போன்றவற்றால் நீ நிரம்பி இருந்தால் உன் ஆன்மீகம் பெரிய அளவில் வீழ்ச்சியடையும். நீ சந்திக்கும் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஏதோ ஒரு வலி இருக்கிறது. வலியைக் குறைக்கும் நிவாரணியாக இரு, அதிகரிக்கும் விஷமாக இருந்து விடாதே. அல்லாஹ் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். மலக்குகள் உன் நன்மை தீமைகளைப் பதிவு செய்கின்றன. மரணம் நீ நினைப்பதை விட, அருகில் உள்ளது. குடும்ப ஒற்றுமைக்காக, தம்பதியினருக்குள் சொல்லப்படும் பொய் ஆகுமானதாகும். வயதில் மூத்த நீ என் தாய், மனைவிக்கிடையே இருந்த விரோதத்தை, குரோதத்தை அழகிய முறையில் தீர்த்து வைத்திருக்க வேண்டும். இம்முறை உன்னைக் காவல்துறையில் ஒப்படைக்கவில்லை. திருந்து”

அஸ்காரியின் திறன்பேசியை அடித்து நொறுக்கினான் மாதுக்

காகப்பார்வை பார்த்தான் அஸ்காரி.

“ஹதீஸ்களையும், திருக்குர்ஆன் வசனங்களையும் வைத்து எனக்கு அறிவுரை கூறி என் இருபதாயிரம் ரூபாய் செல்போனை அடித்து நொறுக்கி விட்டாயல்லவா நீ? இரு உனக்கும் உன் பிசினஸ் பார்ட்னருக்கும் இடையே கலகத்தை மூட்டும் ஆடியோ பதிவுகளைத் தகுந்த நேரத்தில் வெளியிட்டு உங்களை நிரந்தரமாகப் பிரிக்கிறேன்”

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/islamstories/p25.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License