இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

26. இஃதிகாப்


ஹல்டிராம் ரசகுல்லா டின்னின் மேற்புறத்தைக் கத்தியால் வட்டமிட்டாள் ஆமிரா. முதுகலைச் செவிலியர் நங்கை படிப்பு படிப்பவள். வயது 24. நடிகை ஆலியா பட் சாயல். அவளது முக அழகில் பாரசீகப் பெண்மை ஒளிந்திருக்கும். தன் வாயில் இருப்பதைக் கூட எடுத்து எதிராளிக்கு ஊட்டி விடும் தயாளகுணம் கொண்டவள். ஆமிராவின் அழகிய முன்மாதிரி அன்னை தெரசாதான். தனது வாழ்நாளில் ஒரு லட்சம் நோயாளிகளைக் கவனித்துக் குணப்படுத்த வேண்டும் என்பதே ஆமிராவின் பேரவா. ஆமிராவுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது, அவளது பெற்றோர்கள் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார்கள்.

தந்தையின் மூத்த சகோதரி லைலா மாமி வீட்டில்தான் வளர்கிறாள். வட்டத்தகடை வெளியில் எடுத்து வைத்துவிட்டு தனது வலது ஆட்காட்டி விரலையும் கட்டை விரரையும் இணைத்து ஒரு ரசகுல்லாவை கவ்வினாள். எடுத்து வாய்க்குள் போட்டாள். ஒரு ஸ்பூன் எடுத்து ஜீராவை அள்ளி வாய்க்குள் கவிழ்த்தாள். ஆமிரா ரசகுல்லா சாப்பிடுவதை ரசித்தவாறே லைலா மாமி ஒரு கை மிக்சரை எடுத்து ஆமிராவின் வாய்க்குள் திணித்தாள்.

“ரசகுல்லா ஜீரா மிக்சர் மூன்றும் கூழாகி ஒரு புது டேஸ்ட் தரும் பாரு ஆமிரா…”

மென்றவாறே ஆமிரா “ஆமா மாமிI”

“எப்படா நோன்பு திறக்கும் நேரம் வரும்னு காத்திருந்து ரசகுல்லாவை லபக்குறியாக்கும்”

“நீங்க ரெண்டு சாப்பிடுங்க மாமி”

“ சாப்ட்டு சாப்ட்டுதான் குந்தாணி மாதிரிப் பெருத்துக் கிடக்கேனே... எனக்கு வேணாம்டியம்மா…”

ஒரு இஞ்சி டீயை உறிஞ்சிக் குடித்தாள் ஆமிரா.


“மாமிI இன்னைக்கு 20 நோன்பு முடியுது. நாளைக்கு 21வது நோன்பு ஆரம்பிக்குது. ரமலான் மாதத்துக்கு மட்டும் 180 நாட்கள் இருக்கக் கூடாதான்னு மனசு ஆவலாதிக்குது”

“எனக்கு ரமலான் மாதம் 15 நா இருந்தா போதும்னு தோணுது. சஹருக்கு சமைக்கனும். நோன்பு வைக்காத பெருசுகளுக்கு தனி சமையல் பண்ணனும். இப்தாருக்கு பலகாரங்கள் ரெடி பண்ணனும். கை கால் எல்லாம் அசந்து வெலவெலத்து போகுது”

“உங்கப் பார்வை தனி மாமி, இஃதிகாப் என்றால் என்ன?”

“கேள்விப்பட்டிருக்கேன். தெளிவாத் தெரியல நீயேச் சொல்லு”

“இஃதிகாப் ஒரு இஸ்லாமிய நடைமுறை. குறிப்பிட்ட எண்ணிக்கை நாட்களில் தொழுகையாளிகள் மசூதியில் தங்கி தங்களை இபாதாவுக்கு அர்ப்பணித்து உலக விவகாரங்களில் விலகி நிற்பதே இஃதிகாப் ஆகும்.”

“ஓ.. ரம்ஜான் நோன்புகளில் கடைசிப் பத்து நாட்கள் ஆண் தொழுகையாளிகள் ஒரு நாளில் 24 மணி நேரமும் இறை வழிபாடுகளில் ஈடுபடும் இஃதிகாப்பைத் தானேச் சொல்ற?”

“இஃதிகாப் ரமலான் மாதத்தில் தான் இருக்க வேண்டும் எனக் கட்டாயமில்லை. எப்போது வேண்டுமானாலும் இஃதிகாப் இருக்கலாம். ஷவ்வால் மாதத்தில் கூட நபிகள் நாயகம் இஃதிகாப் இருந்திருக்கிறார்.”

“10 நாள் கட்டாயமா?”

“இல்லை… ஒரே ஒரு நாள் இருக்கலாம். ஏன், ஒரே ஒரு மணி நேரம் கூட இருக்கலாம்…”

“இஃதிகாப் பள்ளிவாசலில் தான் இருக்க வேண்டுமா?”

“ஜமாஅத்தாக தொழுகை நடத்தப்படாத மசூதியில் இஃதிகாப் கூடாது. இஃதிகாப் ஒரு சுன்னத்தான வணக்க வழிபாடு கட்டாயம் இல்லை. ஆனால், ஒருவர் வாய்விட்டு இஃதிகாப் இருக்கப் போகிறேன் என அறிவித்துவிட்டால் கட்டாயக் கடமையாகிவிடும்”


“இஃதிகாப் இருந்தால் என்ன நன்மை?”

“இஃதிகாப் இருப்பவருக்கும் நரகத்துக்கும் இடையே மூன்று அகழிகளை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்கிறது ஒரு ஹதீஸ். ஆனால், அந்த ஹதீஸில் நம்பகத்தன்மை குறைவு என்கிறார்கள்”

“ஓஹோ”

“இன்னொரு ஹதீஸ் கூட இருக்கிறது. ரமலானில் பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது இரண்டு ஹஜ் இரண்டு உம்ரா நிறைவேத்னதுக்குச் சமம் என்கிறது இன்னொரு ஹதீஸ். இந்த ஹதீஸும் பலவீனமானதுதான்”

“இஃதிகாப்பைத் தற்காலிக துறவறம் எனலாமா?”

“இஸ்லாமில் துறவறம் ஏது? இஃதிகாப் இறைவனை நெருங்கும் உன்னத வழிபாட்டு முறை அவ்வளவே...”

“அது சரி ஆமிரா இஃதிகாப் இஸ்லாமிய ஆண்களுக்கான வழிபாட்டு முறை. நீ ஏன் அதனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாய்?”

“இஸ்லாம் ஆண் - பெண்ணைப் பிரித்துப் பார்ப்பதில்லை. ஆன்மிகத்தில் இனக்கவர்ச்சி வந்து முட்டி மோதி சேதங்களை ஏற்படுத்தி விடக் கூடாதே என்று சில பல பாதுகாப்பு வளையங்களை அமைத்திருக்கிறது இஸ்லாம்”

“எனக்கேப் பாடம் நடத்றியா ஆமிரா?”

“எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். இஃதிகாப் ஆண் – பெண் இருவருக்கும் பொதுவானது. பெண்களும் தாராளமாய் இஃதிகாப் இருக்கலாம்… திருமணமான பெண்கள் இஃதிகாப் இருக்க அவளது கணவரின் அனுமதி தேவை. மனைவி இருக்கும் இஃதிகாப்பை இடையில் ரத்து செய்யவும் அவளது கணவருக்கு உரிமை உண்டு. திருமணமாகாதப் பெண்களுக்கு அவர்களது பெற்றோரின் அனுமதி தேவை. பெற்றோர் இல்லாத, திருமணமாகாத பெண்களுக்கு அவர்களின் பாதுகாவலரின் அனுமதி தேவை…”

“விருப்பப்படுறப் பெண்கள் கணவரைக் கேட்டோ, தந்தையைக் கேட்டோ, கார்டியனைக் கேட்டோ இஃதிகாப் இருக்கட்டும் நீ படிக்கற வழியைப் பாரு”

“மாமி, எனக்கு 15 நாள் சம்மர் ஹாலிடேஸ் லீவ். நாளையிலிருந்து பத்து நாளைக்கு இஃதிகாப் இருக்கப் போகிறேன்”

“வீட்டில் தொழுகைக்கு ஒதுக்குமிடம் மசூதி. ஆகையால் பெண்கள் அவரவர் வீடுகளில் இஃதிகாப் இருக்கலாம் எனச் சிலர் கூறுகிறார்கள். சிலர் வீடுகளில் இஃதிகாப் இருப்பது கூடாது என்கின்றனர்”

“நம்ம மஹல்லாவில் பெண்களுக்குப் பிரத்தியேகமாக மசூதி இருக்கிறதா?”

“இல்லையே…”

“பின்ன என்ன செய்வாய்?”

“ஜமீலா உஸ்தாத்பி நம்ம மஹல்லாவுல பக்கத்துத் தெருவுல பெண்கள் மதரஸா நடத்துகிறார். அது ஒரு உண்டு உறைவிட மதரஸா. உஸ்தாத்பியுடன் பேசியிருக்கிறேன். அவர் இப்போது வந்துவிடுவார். அவரிடம் மேல் விவரங்கள் கேட்டுத் தெளிவு பெறுங்கள்”

“நாளைக்கு எப்பப் போற?”

“நாளைக்குச் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னாடிப் போய்விட்டு பிறை பார்த்து ஈத் அறிவிச்ச பிறகு வீடு திரும்புவேன்”

“மதரஸாவில் உனக்குத் தனி அறை உண்டா?”

“உண்டு”

“எதற்கும் மாமாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விடு”

“சரி”

அத்தர் நறுமணத்துடன் உஸ்தாத்பி உள்ளேப் பிரவேசித்தார். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

“சொல்லுங்க உஸ்தாத்பி. ஆமிரா இஃதிகாப் இருக்க உங்கள் மதரஸா பாதுகாப்பான இடமா?”

“இதில் என்ன சந்தேகம்?”

“பத்து நாள் இஃதிகாப்பில் ஆமிரா என்னென்ன செய்வாள்? என்னென்ன செய்ய மாட்டாள்?”

“முதலில் அவளது திறன்பேசியை ஸ்விட்ச் ஆப் செய்து உங்களிடம் கொடுத்துவிட்டுத்தான் ஆமிரா இஃதிகாப்புக்கு புறப்படுவாள்…”

“நல்ல ஏற்பாடு”

“பத்து நாட்களுக்கு ஆமிரா நோன்பு வைப்பாள். அவளேச் சமைத்துக் கொள்ளலாம் அல்லது நானேச் சமைத்துத் தருவேன்…”

“சரி”


“தினம் ஐவேளை தொழுகை உடன் தினமும் தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகள். தினமும் குர்ஆன் ஓதுவாள். இறைவனின் 99 நாமங்களை திக்ர் எடுப்பாள். லாப்டாப் பயன்பாடோ வீடியோ ரீல்ஸோ கூடவேக் கூடாது. யார் உடல் சுகவீனப்பட்டால் அவரை நலம் விசாரிக்கச் செல்லக்கூடாது. உறவினர் நண்பர்கள் மரணங்களுக்குத் துக்கம் விசாரிக்கக் கூடாது. பெண்ணுக்குப் பெண் மார்க்கத்தை கற்கலாம், மார்க்கத்தைக் கற்பிக்கலாம். பத்துநாட்கள் தன்னந்தனியளாக இருந்து தனது கல்ப்பை தானே உள்ளும் புறமும் அறிதல். இஃதிகாப் ஒரு தியானம் போல. அது நம் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துகிறது”

“மிக முக்கியமான கேள்வி… இஃதிகாப் இருக்கும் பத்து நாட்களில் ஆமிராவுக்கு மாதவிடாய் வந்துவிட்டால்?”

“மாதவிலக்கு வந்துவிட்டால் இஃதிகாப் இரத்து ஆகிவிடும். அதற்கும் ஒரு வழி வைத்திருக்கிறேன். ‘யூடோவ்லான்’ என்கிற மாத்திரை எடுத்துக் கொண்டால் மாதவிலக்கை விரும்பின நாட்களுக்குத் தள்ளிப் போடலாம். இந்த யூடோவ்லானில் நார்எதிஸ்டீரோன் ஹார்மோன் இருக்கிறது. அது புரஜெஸ்ட்ரான் அளவை உயர்த்தி மாதவிலக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது”

“மாத்திரை எடுத்துக் கொள்வதை மார்க்கம் அனுமதிக்கிறதா?”

“உடல் ஆரோக்கியம் கெடாத வகையில், மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம்… நோ ப்ராப்ளம்”

மாமா வந்து சேர்ந்தார்.

அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

விஷயத்தை கேட்டதும் பெருஞ்சிரிப்பை வெடித்தார் மாமா “ஆமிரா இஃதிகாப் போகும்போது என் மனைவி லைலாவையும் கூட்டிச் செல்லுங்கள் உஸ்தாத்பி. டென்ஷன் ப்ரீயாக இருப்பேன்.”

லைலா வழிப்பம் காட்டினாள்.

பெண்கள் மதரஸாவுக்குள் பயணச் சுமைகளுடன் பிரவேசித்தாள் ஆமிரா. அவளுக்கான தனியறை ஊதுபத்தி நறுமணத்துடன் காத்திருந்தது.

“பிஸ்மில்லாஹி தக்கல்து வஅலைஹி தவக்கல்து வனாவய்து சுன்னத்துல் இஃதிகாப்”

(அல்லாஹ்வின் ஆசிர்வதிக்கப்பட்ட பெயருடன் இந்தப் பெண்கள் மதரஸாவுக்குள் நுழைகிறேன். இஃதிகாப்பின் சுன்னாவை நோக்கமாகக் கொண்டுள்ளேன். யா அல்லாஹ் உனது கருணையின் கதவுகளை என் மீது திறந்துவிடு)

அந்தச் சின்னஞ்சிறு அறை முழுக்க மலக்குகள் குழுமினர்.

“மகிமையுள்ள இறைவனே! இந்த பெண்ணுக்கு ஒரு உஹது மலையளவு நன்மைகளை வாரி வழங்கு!”

கதை படிக்கும் நீங்கள் “ஆமின்” என்கிறீர்கள். மிகவும் நல்லது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/islamstories/p26.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License